பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்

நாவிஷ் செந்தில்குமார்

Pin It