இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
உன் ஆரம்ப வருகைகள்
எனக்களித்த பரவசங்களை.

பாலைவனத்தில் முன்னிழுக்கும்
காலடித் தடங்களாய்
மெல்ல ஊடுறுவின சம்பவங்கள்.

இறுக்கமாகிப் போன
ஸ்னேகிதத்துக்காக நாம்
ஒருவருக்கொருவர் நன்றி பகின்றோம்.

கால காலத்துக்கும்
நீடிக்கப் போகும்
சாஸ்வதங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டோம்.

காற்றுக்குமிழி ஒன்றை தாங்கவியலாத
ஊழித்தீயாய்
முடிந்தேறியது சகலமும்.

அமானுஷ்யமாய்
எனது அறையின் தற்போதைய
நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
தொலைந்து போயின.

நீ வேறெங்கேனும் துவங்கியிருக்கக் கூடும்
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.

Comments

3 comments

3
Uma
Romba Nalla irukkuda. Unnoda nerukkama irundha irukkara yaar padichalum avangakukku porundhara Madhiri podhuvaa irukku. Good job!
sekar
Nandri - Vaazkai Thurathalgalukkidaiyil Irandhuvitadhai nambiya En Gnabhaga Chedhilgalai Uyirpithamaikku. Nandri- Currency Thedalgalukkidaiyil Ennai Kavithai Theda Vaithamaikku. Perugattum Un Kavithaigal. Thodarattum En Vetkaigal
சுவாதி ச முகில்
//நீ வேறெங்கேனும் துவங்கியிருக்கக் கூடும் உனது ஆரம்ப வருகைகளின் பரவசங்களை.// வலி மிகுந்த வரி. அருமை ஆத்மார்த்தி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.