இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
உன் ஆரம்ப வருகைகள்
எனக்களித்த பரவசங்களை.
பாலைவனத்தில் முன்னிழுக்கும்
காலடித் தடங்களாய்
மெல்ல ஊடுறுவின சம்பவங்கள்.
இறுக்கமாகிப் போன
ஸ்னேகிதத்துக்காக நாம்
ஒருவருக்கொருவர் நன்றி பகின்றோம்.
கால காலத்துக்கும்
நீடிக்கப் போகும்
சாஸ்வதங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டோம்.
காற்றுக்குமிழி ஒன்றை தாங்கவியலாத
ஊழித்தீயாய்
முடிந்தேறியது சகலமும்.
அமானுஷ்யமாய்
எனது அறையின் தற்போதைய
நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
தொலைந்து போயின.
நீ வேறெங்கேனும் துவங்கியிருக்கக் கூடும்
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.
Vaazkai Thurathalgalukkidaiyil
Irandhuvitadhai nambiya
En Gnabhaga Chedhilgalai
Uyirpithamaikku.
Nandri-
Currency Thedalgalukkidaiyil
Ennai Kavithai
Theda Vaithamaikku.
Perugattum Un Kavithaigal.
Thodarattum En Vetkaigal
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.//
வலி மிகுந்த வரி. அருமை ஆத்மார்த்தி
RSS feed for comments to this post