ஏக வலி
ஏக விருப்பங்கள்
ஏக கோரிக்கைகளுடன்
நுழைந்தேன்...
பிரார்த்தனைக் கூடம்!

குழைந்த மாமிசத்தில்
எலும்பை சொருகியதாய் அருகிலொருவன்  
நிற்கவும் அமரவும் முடியாமல்
பிரார்த்தித்துக் கொண்டு..

ஏதும் வேண்டாமடா எனக்கு
கொடு இவனுக்கென்று ஏதேனும்
கடிந்து கூறி வந்தேன்
கடவுளிடம்..

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

 

Pin It