இரவு வந்த மழை
எச்சில்படுத்தியிருந்தது
பூமியை...
சுத்தம்செய்யச்
சூரியனை அழைத்திருக்கிறோம்
00
இயற்கை தன்
காதலி பெயரை
வெளியெங்கும்
எழுதிவைத்திருக்கிறது
'குளிர்' என
00
குடையை விலக்கி
மழையை ரசித்தவள் மீது
தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டுச் சென்றது
சாலையிலொரு வாகனம்
00
மலர்களை
மலடுகளாக்குகிற
மழையறிவதில்லை
மகரந்தச்சேர்க்கை
00
மழையில் நனைந்தவன்
வீடெங்கும்
தேடியலைகிறான்
கவிதையெழுத
காகிதமொன்றை...
அவன் தேகம் சொட்டுகிறது
மழைக்கவிதை
00
மழையில் நனைந்ததும்
'மழை' என்ற சொல்லை
'மழை' என்று சொல்ல
முடியவில்லை...
மழலையாக்கிருந்தது என்னை
மழை
- நாவிஷ் செந்தில்குமார்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நாவிஷ் செந்தில்குமார்
- பிரிவு: கவிதைகள்
'மழை' என்ற சொல்லை
'மழை' என்று சொல்ல
முடியவில்லை...
மழலையாக்கிருந்தது என்னை
மழை --- Nice lines
RSS feed for comments to this post