மார்கழி மாதம் வந்தால் எப்படி நாய்களின் செய்கைகள் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு செல்லுமோ, அதே போல மே மாதம் வந்தால் தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் வண்டை வண்டையாய் திட்டுவதை கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு வாடிக்கையான நடவடிக்கையாகவே வைத்திருக்கின்றது. ஏதோ கருணாநிதியும், அவரது குடும்பமும் சிங்கள அரசுக்கு நிதியும், இராணுவ உதவிகளையும் வழங்கி ஈழ மக்களை படுகொலை செய்யச் சொன்னது போல ஒட்டுமொத்த ஈழத் துயரத்துக்கும் அவரையே பொறுப்பாக்குவதன் மூலம் இன அழிப்புக்குக் காரணமான முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கத் துணை புரிகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஈழப் படுகொலை நடக்கும்போது பால்வாடி படித்துக் கொண்டிருந்த சிறுசுகள் எல்லாம் ஈழப் பிரச்சினையின் தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் பேஸ்புக்கில் இன்று கம்பு சுற்றுவதுதான்.
உலகத்தில் வேறு எங்குமே இப்படி ஓர் அரசியல் கூத்தை செய்யும் கோமாளிக் கூட்டத்தைப் பார்க்க முடியாது. ஈழப் போர் உச்சத்தில் இருந்த போதே தமிழக மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போட்டார்கள் என்பதும், ஈழப் பிரச்சினை இங்கிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அரசியல் அதிர்வலைகளை எல்லாம் ஏற்படுத்தும் அளவிற்கு அப்போதே வலிமையாக இல்லை என்பதும் தான் உண்மை. காரணம் மிக எளிமையானது. இங்கிருக்கும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களை ஈழத் தமிழர்களாகவே பார்த்தனர். அதுதான் சரியானதும் கூட.
முதலில் இலங்கை என்பது இந்தியாவைப் போன்று இறையாண்மை பொருந்திய ஒரு தனிநாடு என்பதையும், அங்கிருக்கும் மக்களுக்கு அது சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் உள்ளது என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். யாரும் புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது. அந்த அடிப்படையில்தான் தமிழர்களை கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிரான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதையும், அங்கே தமிழ் மக்களுக்குப் பதிலாக அதே இடத்தில் ஒருவேளை தமிழ்ப் பேரினவாத அரசு ஒன்று இருந்து சிங்களவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் நாம் நிச்சயம் சிங்களவர்கள் பக்கமே இருக்க வேண்டும் என்பதும்தான் சரியான மார்க்சிய வழியிலான நிலைப்பாடாகும்.
ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இன மக்கள் என்பதனால்தான், நிச்சயமாக அவர்கள் தமிழர்கள் என்பதற்காக அல்ல. இதில் முதலில் தெளிவு வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் ஈழ மண்ணின் மைந்தர்கள். அவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கு வாழ்கின்றார்கள். அதே போல இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இங்கு வாழ்கின்றார்கள். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மொழி மட்டுமே. ஆனால் மொழி மட்டுமே ஒரு தேசிய இனம் என்ற தகுதியைப் பெற போதுமானதல்ல. “ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு, மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்” என்று ஸ்டாலின் வரையறுக்கின்றார்.
அந்த அடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய இனமே ஒழிய இங்கு வாழும் தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவு அல்ல. அப்படி கட்டமைப்பது அவர்களை இலங்கையின் தேசிய இனம் என்ற தகுதியை இல்லாமல் செய்ய உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது. ஆனால் இங்கிருக்கும் சில பிழைப்புவாதிகளும், அற்பவாதிகளும் திட்டமிட்டே ஈழத் தமிழ் மக்களை இங்கிருக்கும் தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவு, அதற்காக இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு உதவ வேண்டும், இல்லை என்றால் அவர்கள் எல்லாம் தமிழினத் துரோகிகள் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்ததன் மூலம் ஈழத்தில் இயல்பாகவே உருவாகி இருக்க வேண்டிய சிங்கள - தமிழ் ஜனநாயக சக்திகளுக்கு இடையேயான பிணைப்பு உடைக்கப்பட்டு பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகப் போகும் நிலையை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இன்று வரையிலும் அவர்கள் அதைத்தான் செய்து வருகின்றார்கள்.
திமுக என்ற மாநிலக் கட்சி ஈழத் தமிழர்களுக்கு உதவுவதும், உதவாமல் போவதும் அந்தக் கட்சியின் உரிமையாகும். ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பதும், அதற்கு ஆதரவாக நிற்பதும் ஜனநாயக சக்திகளின் கடமை என்ற வகையில் கலைஞர் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை இன்னொரு நாட்டின் பிரச்சினைக்காக பதவி விலகச் சொல்வதில் என்ன யோக்கியத் தன்மையோ அரசியல் தெளிவோ இருக்க முடியும்? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்கிலம் பேசும் மக்கள் தான் இருக்கின்றார்கள். அமெரிக்க ஆங்கிலேயர்களின் தொப்புள்கொடி உறவு என்பது ஐரோப்பாதான். அதற்காக அமெரிக்காவின் பிரச்சினையை காரணம் காட்டி யாரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளின் பிரதமர்களைப் பதவி விலக வேண்டும் என்று சொல்வதில்லை. அப்படி சொன்னால் சொல்பவனை பிடித்து மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள்.
பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு ஈழத்தில் நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பில் இந்தியாவின் கை இருந்தது என்பதும், காங்கிரஸ் அதில் முக்கிய பங்காற்றியதும் உண்மையே. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் காங்கிரசின் இடத்தில் பாஜக இருந்திருந்தாலும் அதேதான் நடந்திருக்கும். ஈழத்தில் நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பு என்பது உலக முதலாளிகளின் மூலதனக் குவியலுக்காக நடத்தப் பெற்றதாகும். இவர்கள் சொல்வதுபோல திமுக - காங்கிரசு அரசைக் கவிழ்த்து இருந்தாலும், நிச்சயம் அங்கு நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பை யாரும் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது என்பதுதான் உண்மை.
இன்று கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டும் நபர்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது பாஜவுக்கும், அதிமுகவுக்கும் ஓட்டுப் பிச்சை எடுத்ததையோ, இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது விடுதலைப் புலிகளுக்கு மயக்கம் ஏற்பட கங்கணம் கட்டிக் கொண்டு பரப்புரை செய்ததையோ யாரும் இன்னும் மறந்து விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று தமிழ்நாட்டில் பிரபாகரனின் பேரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பன கைக்கூலியின் கட்சி சார்பாக ஈழப் படுகொலைக்குப் பின்னர் ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTEயினர் பெற்றோரிடம் இருந்து பிடுங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTEயினர் செய்தனர். மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTEயினர் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள். தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றனர்" என்றும் சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தது.
இன்று கலைஞருக்கு எதிராக வருடா வருடம் மே மாதமானால் கம்பு சுற்றப் புறப்படும் வீராதி வீரர்கள் இப்படி ஓர் அறிக்கையை ஐநாவில் தாக்கல் செய்த அந்த யோக்கிய சிகாமணி யார் என்று தவறியும் சொல்ல மாட்டார்கள். பார்ப்பன அடிவருடிகள் எல்லாம் ஒன்றுபடும் புள்ளி இதுதான். இந்தக் கும்பல் எப்படிப்பட்ட கும்பல் என்றால், ஈழத்துத் தமிழர்களை எல்லாம் தொப்புள்கொடி உறவு என்று சொல்லும், ஆனால் இங்கே சூத்திர சாதி வெறியர்களால் தலித்துகளின் குடிசைகள் கொளுத்தப்படும் போதும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்படும்போதும் அது எங்கோ வேறு நாட்டில் நடப்பது போல தனது நவதுவாரங்களையும் இறுக்கமாக மூடிக் கொள்ளும்.
இன்று ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திட வேண்டும், தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், தமிழர்களின் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும், பாசிச ராஜபக்சே கும்பலுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்துவதுதான் நேர்மையான செயலாக இருக்குமே அல்லாமல், சும்மா வெறுமனே கலைஞர் மீது குற்றம் சுமத்துவதல்ல. அப்படி சுமத்துபவர்களின் உண்மையான நோக்கம் அவர்களின் உள்ளத்தில் ஊறிப் போன பார்ப்பன அடிவருடித்தனம்தான்.
மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட வேண்டும் என்று சொல்வதுகூட அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் என்பதால்தான், நிச்சயமாக தமிழர்கள் என்பதற்காக அல்ல. அதே அளவுகோலோடுதான் நாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்களையும் ஆதரிக்கின்றோம். அதுதான் சரியான நிலைப்பாடும்கூட...
- செ.கார்கி
இந்த மாதத் துவக்கத்திலிருந ்தே என் மனதிலும் இந்தக் கட்டுரையின் முதல் வரிதான் ஓடிக் கொண்டிருந்தது; ஆனால் வேறு விதமாக. அதாவது ஆண்டுதோறும் இந்த மே மாதம் வந்தாலே தி.மு.க., உடன்பிறப்புகளுக ்கு வெறிபிடித்து விடுவது ஏன் என்று.
இனப்படுகொலை நடந்தபொழுது பால்வாடி படித்துக் கொண்டிருந்தவர்க ள் இன்று சீமான் போன்றவர்களின் பேச்சை மட்டுமே வைத்துக் கருணாநிதியைத் தாக்கிப் பேசினால் அது தவறுதான். ஆனால் பேசுபவர்கள் அத்தனை பேரும் பால்வாடிப் பிள்ளைகளா?
பகடிச்சித்திரக் கலைஞர் பாலா, எழுத்தாளர் பாமரன், தமிழ்ப் பேரறிஞர் தொ.பரமசிவன், கவிஞர் புதிய மாதவி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர ் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு எனத் தமிழ்நாட்டின் பெரும்புகழ் பெற்ற படைப்பாளர்கள், சமுக ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், பொது மக்கள் அத்தனை பேரும் இனப்படுகொலை குறித்துக் கருணாநிதி மீதும் தி.மு.க., மீதும் அன்றும் இன்றும் குற்றம்சாட்டத்த ான் செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் பால்வாடிப் பிள்ளைகள் என்கிறீரா கார்கி! பார்த்துப் பேசும்! இவர்களில் பலர் பொதுவாழ்க்கையில ் சாதிக்கத் தொடங்கிய நேரத்தில் நீரே பால்வாடிப் பிள்ளையாகத்தாம் இருந்திருப்பீர்!
மொத்தத் தமிழ்நாட்டின் இவ்வளவு பெரிய எதிர்ப்பலையையும ் அப்படியே விழுங்கிச் செரித்து விட்டுச் சீமான் எனும் ஒற்றை மனிதனும் அவர் ஆட்களும் மட்டும்தாம் கருணாநிதியைக் குறை சொல்வதாக உம்மைப் போன்றவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக மக்களை நம்ப வைக்க முயல்கிறீர்கள். இது பூசணிக்காயை இல்லை பூமிப்பந்தையே அறிவாலயச் சுவர்களுக்குள் மறைக்கப் பார்க்கும் அறிவாளித்தனம்!
இனப்படுகொலை உச்சத்தில் இருந்தபோதே தமிழக மக்கள் திமுக-காங்கிரசு க் கூட்டணிக்குத்தா ன் வாக்களித்தார்கள ். ஆனால் ஏன்? கருணாநிதியை விட செயலலிதா விடுதலைப்புலிகள ுக்குக் கடும் எதிரி. எனவே இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரத்தில் அவரை நம்புவதை விட ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை தன் ஆட்சியை இழந்த கருணாநிதியை நம்பலாம் என்பதற்காகத்தான ே தவிர நீர் புளுகுவது போல ஈழத் தமிழர் சிக்கல் நம்முடைய சிக்கல் இல்லை என்ற நினைப்பினால் கிடையாது. அரசியலுக்காக இப்படி நெஞ்சறியப் பொய்யுரைக்கும் கொடியவனே, எங்கோ வியட்நாம் என்கிற கண்காணாத தேசத்தில் மக்கள் போரால் செத்தபொழுதே தங்கள் சொந்த நகைநட்டைக் கூடக் கழற்றிக் கொடுத்து எப்படியாவது அவர்களைக் காப்பாற்றத் துடித்தவர்களாயி ற்றே நம் தமிழ் மக்கள்! அப்பேர்ப்பட்ட மக்கள் தங்கள் சொந்த இன மக்களான ஈழத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல்தான ் தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள ் என்கிறாயே, மனிதனா நீ?
ஈழத் தமிழர்களைத் தொப்புள்கொடி உறவு எனச் சொல்வது தவறுதான். ஆனால் அது வெறும் உணர்வு அடிப்படையில் வெளியிடப்படும் வெறும் வாய்ச் சொல். அந்த ஒற்றைச் சொல்லுக்கு அப்படியே ஒரு பூதாகரமான அரசியல் பின்னணியை உருவாக்கிக் காட்டிப் பெரும் குற்றம் போல் எழுதும் நீ உள்ளங்கை நெல்லிக்கனி போல் கருணாநிதி நடத்திய ஈழ இரண்டகங்களை (துரோகங்களை) இல்லவே இல்லை என்கிறாய்! அடேங்கப்பா! எப்பேர்ப்பட்ட எழுத்தாற்றல் உனக்கு!
கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக இங்கே நடந்த போராட்டங்களை ஒடுக்கினார், ஈழத் தமிழ் மக்களுக்காக இங்கேயிருந்து அனுப்பப்பட்ட குருதிப் பொட்டலங்களைக் கூடக் காவல்துறையை விட்டு நடுச்சாலையில் போட்டு நசுக்கினார், ஈழத்துக்காகத் தீக்குளித்தவர்க ளைக் குடும்பச் சிக்கலால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று இழித்துரைத்தார் , மாணவர் போராட்டம் மாநில அளவில் வெடிக்க இருந்தபொழுது அனைத்துக் கல்லூரிகளுக்கும ் காலவரையற்ற கட்டாய விடுப்பளித்து அந்தப் போராட்டத்தைப் பொசுக்கினார். இவையெல்லாம் உமக்குக் குற்றமாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களைத் தொப்புள்கொடி உறவு எனச் சொல்வதுதான் குற்றமாகத் தெரிகிறது, இல்லையா?
சீமான் நான்கு மேடைகளில் ஏறி ஈழத் தமிழர்களைத் தொப்புள்கொடி உறவு என்று சொன்னவுடனேதான் அங்கே இலங்கையில் தமிழ் மக்களுக்கும் சிங்களர்களுக்கு ம் இடையில் உருவாகியிருக்க வேண்டிய இயல்பான மக்களாட்சிப் பிணைப்பு அறுபட்டு விட்டது, விடுதலைப்புலிகள ின் போராட்டம் முட்டுச்சந்துக் குப் போய்விட்டது, அப்படித்தானே? தெரியாமல்தான் கேட்கிறேன், இலங்கையில் சிங்கள-தமிழ் மக்களாட்சி அமைப்புகளுக்கு இடையிலான உறவுகள் உடைபட்டு, விடுதலைப்புலிகள ின் போராட்டம் போன்றவை தொடங்கி, பின்னர் பல காலம் கழித்து 2009-இல் இனப்படுகொலை உச்சத்துக்குப் போனபொழுது சீமான் பேசத் தொடங்கினாரா அல்லது சீமான் ஈழத் தமிழர்களைத் தொப்புள்கொடி உறவு எனச் சொல்லத் தொடங்கிய பிறகு இவையெல்லாம் நடந்தனவா? நாங்கள்தாம் வரலாறு அறியாத பால்வாடிப் பிள்ளைகள்; நீங்கள்தாம் எல்லாம் அறிந்த ஏகாம்பரங்களாயிற ்றே, சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்.
அதே நேரம், சீமான் விடுதலைப்புலிகள ுக்குச் செய்த இரண்டகங்களையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அதைச் சுட்டிக்காட்டுவ தாலேயே தி.மு.க., 2009-இல் செய்தவை எல்லாம் இல்லை என ஆகி விடுமா? மீண்டும் சொல்கிறேன், இனப்படுகொலை குறித்துக் கருணாநிதி மீது குற்றம்சாட்டுபவ ர்கள் சீமானும் அவர் ஆட்களும் மட்டுமில்லை மொத்தத் தமிழினமும்தான். எனவே மறுபடியும் மறுபடியும் சீமானின் அரசியல் களவாணித்தனங்களை யும் இழிவேலைகளையும் எடுத்துக்காட்டி க் கருணாநிதியின் புண்களுக்குப் புனுகு பூச வேண்டா! சீமான் என்கிற ஓர் ஆளே இல்லாவிட்டாலும் இனப்படுகொலை விதயத்தில் பெரும்பான்மைத் தமிழ் மக்களின் கருணாநிதி குறித்த நிலைப்பாடு அவர் இரண்டகர் (துரோகி) என்பதுதான்.
இந்த நிலைப்பாடு மாற வேண்டுமானால் நீயே கட்டுரையின் முடிவில் குறிப்பிட்டுள்ள து போல ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகள் திரும்பக் கிடைக்கவும் இராசபக்ச கும்பல் மீது இனப்படுகொலை குறித்துப் பன்னாட்டு உசாவல் நடக்கவும் தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்ப ு நடைபெறவும் தி.மு.க., ஏற்பாடு செய்யட்டும். அடுத்த முறை மத்திய ஆட்சி தி.மு.க., ஆதரவில் அமையும்பொழுது உமது தலைவர் சுடாலின் இதைச் சாதித்துக் காட்டட்டும்.
அப்படி மட்டும் நீங்கள் செய்து விட்டால் சீமான் என்ன, எந்தக் கோமான் வந்தாலும் அதன் பின் ஈழ விவகாரத்தில் தி.மு.க., குறித்து ஒரு பயலும் நாக்கு மேல் பல் போட்டு இங்கே பேச முடியாது. அதை விட்டுவிட்டு ஈழத் தமிழர்களையும் அவர்கள் போராட்டத்தையும் கொச்சைப்படுத்து வது, கிளிமூக்கு அரக்கன் எனும் பெயரில் இதற்கெனவே சமுக ஊடகங்களில் பக்கம் நடத்துவது, பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்திப் படங்களும் கருத்துக்களும் வெளியிடுவது எனக் கீழ்த்தர அரசியலை நீங்கள் செய்து கொண்டிருப்பதன் மூலம் ஒருபொழுதும் நீங்கள் உங்கள் கைகளில் படிந்திருக்கும் ஈழத் தமிழர் குருதிக் கறையைக் கழுவ முடியாது.
எனவே சீமானுக்கு எதிராக அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அரசியலைச் செய்யுங்கள் சீமானின் அரசியல் தானாகவே தவிடுபொடியாகும் . ஆனால் இவ்வளவு பெரிய கட்டுரையில் ஓர் இடத்திலும் தப்பித் தவறிக் கூட ‘இனப்படுகொலை’ எனும் சொல்லைப் பயன்படுத்தாத இராசபக்சவின் கூட்டாளிகளான நீங்களா அதைச் செய்யப் போகிறீர்கள்!
நீங்களும் இந்தப் பத்தாண்டுகளாக ஈழத் தமிழர் விவகாரத்துக்கும ் தமிழ்நாட்டுக்கு ம் தொடர்பில்லை; அது வேறு நாட்டு விவகாரம் என்கிற கருத்தை நம் மக்கள் மனதில் ஊன்றப் படாதபாடு படுகிறீர்கள். ஆனால் முடிந்ததா? முடியாது. இப்பொழுது மட்டும் இல்லை எப்பொழுதும் அது நடக்காது. காரணம், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும் வெறும் மொழியால் மட்டும் ஒன்றுபட்டவர்கள் இல்லை. அதையும் தாண்டி உணர்வார்ந்த பிணைப்பு இவ்விரு மக்களுக்கும் இடையில் இருக்கிறது. வெறுமே ஸ்டாலின் சொன்னார், மார்க்சு சொன்னார் என்று நான்கு நூல்களில் இருந்து வெறும் மேற்கோள்களை எடுத்துக்காட்டி இந்தப் பல்லாண்டுக் கால உறவைப் பிரித்து விட முடியாது. மேற்கோள்களும் வரையறைகளும் இடத்துக்கேற்ப மாறுபடும். எல்லாக் கோட்பாடுகளும் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தி விடாது.
சொல்லப் போனால் ஈழச் சிக்கலின் தொடக்கக் காலங்களில் இந்த இன அடிப்படையிலான உறவை ஊதி வளர்த்தவரே உங்கள் தலைவர் கருணாநிதிதான். அப்படி நாடு, எல்லை போன்ற வரம்புகளைக் கடந்து உலகத் தமிழர்கள் அனைவரையும் ஓர் இனம் என்று அவர் பேசியதால்தான் அதற்கு முன்பு அவரை விடப் பெரிய தலைவர்களாக இங்கே வலம் வந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கூட இல்லாத பட்டமான ’தமிழினத் தலைவன்’ என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டி அழகு பார்த்தது தமிழ்நாடு. அப்பொழுதெல்லாம் புகழுக்காகவும் பதவிக்காகவும் பெருமைக்காகவும் அத்தகைய பட்டங்களை இனிக்க இனிக்கச் சுவைத்து விட்டு இப்பொழுது ஈழத் தமிழர் எதிரிகளான காங்கிரசை விட்டால் மத்திய அரசில் பதவி பெற வேறு போக்கிடம் இல்லை என்பதால் ஈழம் வேறு தமிழ்நாடு வேறு என அப்படியே மாற்றிப் பேசும் கபோதிகளே! வாழ்க உங்கள் மானங்கெட்ட அரசியல்!
முதலில் "ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்த இந்திய ஆட்சிப்பரப்பில் யோக்கியமாக செயல்பட்டவர்கள் யார் என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என்று கேட்டுள்ளீர். இனப்படுகொலை எனும் சொல்லை முதன் முறையாக இங்கே பயன்படுத்தியதற் காக முதலில் நன்றி!
ஆனால் அன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களே காங்கிரசும் தி.மு.க-வும்தாம ். அவர்கள் இருவருமே இதைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பதுதான் பொதுமக்களான எங்கள் குற்றச்சாட்டு. இதில் யார் ஒழுங்கு எனக் கேட்பது எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பது போலத்தான்.
அடுத்து "அப்படியே ஈழத்தில் நடந்த இன அழித்தொழிப்பை கலைஞர் நினைத்திருந்தால ் தடுத்திருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்களை உங்களின் மூளையில் இருந்து எழுத்தாக இறக்கிவைத்தீர்க ள் என்றால் நானும் கொஞ்சம் அறிவை வளர்த்திக்கொள்வ ேன்" என்றிருக்கிறீர்.
ஆனானப்பட்ட செ.கார்கி, போயும் போயும் என்னுடைய மூளையிலிருந்து இறக்கி வைக்கப்படும் எழுத்துக்களை நம்பியெல்லாம் தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தது கண்டு வருந்துகிறேன்.
இதற்கான விடையாக நான் என்ன சொல்வேன் என்பது உமக்கே தெரியும். அன்றைய மத்திய ஆட்சி தி.மு.க., ஆதரவில்தான் நடந்து கொண்டிருந்தது. எனவே தி.மு.க., தன் ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்டிக் காங்கிரசைப் பணிய வைத்து, காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு ஐ.நா., மூலம் அழுத்தம் கொடுத்துப் போரை நிறுத்தியிருக்க லாம் என்பதுதான் இதற்கான விடை. இதைக் கருணாநிதி செய்வார் என்பதுதான் அன்று மக்களான எங்களின் எதிர்பார்ப்பாகவ ும் இருந்தது.
ஆனால் இதை நான் சொன்னால் நீர் உடனே என் பன்னாட்டு அரசியல் அறிவை எள்ளி நகையாடுவீர்; அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியம், சீனம், பாகித்தான் எனப் பல நாடுகள் சேர்ந்து நடத்திய அந்த இனப்படுகொலையின் உலகளாவிய வலைப்பின்னலை - அதன் பின்னணியிலான பன்னாட்டு அரசியலைப் புரிந்து கொள்ளாதவன் எனக் கிண்டல் செய்வீர்; அப்படியே கருணாநிதி தன் ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும ் உடனே ஆட்சி கவிழாமல் தாங்கிப் பிடிக்கப் பொதுவுடைமைக் கட்சி ஆயத்தமாக இருந்தது என்பீர். ஆனால் இவற்றுக்கெல்லாம ் சேர்த்து நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
பொறுப்பும் அதிகாரமும் கையில் இருந்தபொழுது செய்ய வேண்டியதைச் செய்யாமல், எல்லாம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியெல்லாம் சாக்குச் சொல்வது கடந்த காலத்துக்குச் சோதிடம் கூறும் வேலை. This is totally hypothetical! தி.மு.க., தன் ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால்த ான் - அப்படி ஒன்று நடந்திருந்தால்த ான் - அதையொட்டி என்ன நடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியும். அப்படி ஒன்றைச் செய்யவே செய்யாமல் அப்படிச் செய்திருந்தாலும ் பலன் இருந்திருக்காது என்றும் மாறாக என்ன நடந்திருக்கும் என்றும் உம்மைப் போன்றவர்கள் வாதங்களை அடுக்குவது வெற்றுக் கற்பனைவாதம்!
நான் மீண்டும் சொல்கிறேன். என்னைப் போல் இனப்படுகொலை விதயத்தில் கருணாநிதிக்கு எதிராகப் பேசுபவர்களுக்கு இப்படி வெறுமே தனித்தனியாக மறுமொழி அளித்து உம்மைப் போல் எழுத்து வல்லமையுடையோர் உமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல் உமது கட்டுரையில் நீரே குறிப்பிட்டுள்ள படி ஈழத் தமிழர்களுக்கான நலனைச் செயலில் செய்து காட்டும்! அதுதான் எங்கள் வாயை அடைக்க உண்மையான வழி!
உலகத்தில் வேறு எங்குமே இப்படி ஓர் அரசியல் கூத்தைச் செய்யும் கோமாளிக் கூட்டத்தைப் பார்க்க முடியாது என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ீர். அதையே நான் மாற்றிக் கேட்கிறேன், வேறு எங்காவது இப்படிப்பட்ட எதிரிகள் வாய்ப்பார்களா? எங்கள் வாயை எப்படி அடைப்பது, எங்கள் குற்றச்சாட்டுக் களை எப்படித் தவிடுபொடியாக்கு வது என்பவற்றையெல்லா ம் நாங்களே சொல்லி விடுகிறோம். அதைச் செய்யுமேன்! அதை விட்டு ஏன் வீண் வாதம்?
தி.மு.க., மீது என்னைப் போன்றவர்களுக்கு த் தனிப்பட்ட முறையில் என்ன பகை? இனப்படுகொலை நேரத்தில் நீங்கள் அப்படி நடந்து கொண்டதால்தானே வயிறெரிந்து குற்றம் சாட்டுகிறோம். நடந்ததை மாற்ற நீங்களே களமிறங்கிவிட்டா ல் நாங்கள் அப்புறம் ஏன் குற்றம்சாட்டப் போகிறோம்?
எனக்கு மனிதநேயம் இருக்கிறது அதனால் நான் பொங்குகிறேன். செத்துப் பிணமாய்ப் போன உனக்கு அஃது இருக்க முடியாது. ஆகையால் என்னைப் போன்றவர்களின் உணர்வுகள் எனக்குப் புரியவும் புரியாது.
தமிழ்த்தேசியவாத ிகள் தனித் தமிழ்நாடு போராட்டம் நடத்தினார்களா, படை கட்டினார்களா, அதைச் செய்தார்களா, இதைச் செய்தார்களா என்று கேள்விகளை அடுக்கி விட்டுக் கடைசியில் என்னையும் அவர்களில் ஒருவன் என்கிறாய். கருணாநிதி செய்த இனப்படுகொலையைப் பற்றி ஒருவன் பேச்செடுத்தாலே உன்னைப் போன்றவர்கள் முதலில் அவன் மீது அரசியல் முத்திரை குத்தி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறீர்கள் . இதன் மூலம் இனப்படுகொலை விவகாரத்தில் தி.மு.க., மீதான அத்தனை குற்றச்சாட்டுகள ும் அரசியல் சார்புள்ளவை எனும் பொய்த்தோற்றத்தை மிகச் சிறப்பாகக் கட்டியெழுப்பி இருக்கிறீர்கள். ஆனால் இந்தப் பாசாங்கு என்னிடம் பலிக்காது. நான் இதுவரை எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினனாகக் கூட இல்லை. எந்தக் கட்சி தவறு செய்தாலும் நான் அதை எதிர்த்துத்தான் எழுதி வருகிறேன். ஈழ விவகாரத்தில் நான் கருணாநிதியைத் தாக்கியும் எழுதியிருக்கிறே ன், ஊழல் குற்றச்சாட்டில் செயலலிதாவைத் தாக்கியும் எழுதியிருக்கிறே ன். சாதி அரசியல் செய்யும் பா.ம.க-வைத் தாக்கியும் எழுதியிருக்கிறே ன், சமய அரசியல் செய்யும் பா.ச.க-வைத் தாக்கியும் எழுதியிருக்கிறே ன். நான் பொதுமக்களில் ஒருவன். எளிய தமிழ்க் குடிமக்களில் ஒருவன். அந்த முறையில்தான் நான் என் கேள்விகளை எதிர்வாதங்களை முன்வைக்கிறேன்.
மேலும் ஈழ விவகாரத்தில் கருணாநிதியை எதிர்த்து எழுதினாலே தமிழ்த்தேசியவாத ி என்றால் வைகோ யார்? விடுதலை இராசேந்திரன் யார்? கொளத்தூர் மணி யார்? திராவிடக் கொள்கையில் வேரூன்றிய உங்கள் முன்னோடிகளிலேயே இத்தனை பேர் உங்களைக் காறித் துப்பும்பொழுது தெருவில் போகிற வருகிற என்னைப் போன்ற ஏதுமறியாப் பொதுமக்கள் மீதெல்லாம் ஏன் தமிழ்த்தேசிய முத்திரை குத்துகிறீர்கள்?
படை கட்டித் தனிநாடு கேட்டதால்தானே ஏற்கெனவே ஈழத்தில் எங்கள் மக்களைக் கொன்றீர்கள். அதைப் பார்த்த பிறகும் மீண்டும் அதையே செய்து செத்துக் குவிய ஈழ ஆதரவாளர்கள் என்ன மூளை கெட்டவர்களா? இனப்படுகொலை முடிந்த 2009-இலேயே முடிவெடுத்தாகி விட்டது. இனி ஆயுதவழியில் போராடுவது வேலைக்காகாது என்று. பா.ச.க-வும் இன்றைய அ.தி.மு.க-வும் ஈழ விவகாரத்தில் உங்களை விடக் கேடிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் ஐ.நா-வில் கோரிக்கை வைப்பது, பன்னாட்டளவில் அழுத்தம் கொடுப்பது என்று வைகோ, திருமுருகன் காந்தி போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்கள் தங்கள் போராட்ட முறையை மாற்றிக் கொண்டு விட்டார்கள். அவர்கள் போராட்டத்தை, அவர்கள் கோரிக்கையை எந்தக் காலக்கட்டத்தில் எப்படி முன்னெடுப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே நீ அதைப் பற்றிக் கவலைப்படாமல் முதலில் ஒண்டிப்புலிக்கு நீ கொடுக்க வேண்டிய ஒலிபெருக்கிக் கட்டணத்தைக் கொடுக்கிற வழியைப் பார்! அதாவது முதலில் நீ பிடுங்க வேண்டியதைச் சரியாகப் பிடுங்கு! அதன் பிறகு மற்றவர்கள் பிடுங்க வேண்டியதைப் பற்றி அறிவுரை சொல்லலாம். ஏதோ மறுமொழி சொல்லவே முடியாத அளவுக்குக் கேள்வி கேட்டு விட்டதாக நினைப்பு. தூ!
இக்கட்டுரை சீமானுக்கும் அவரது பால்வாடி பசங்களுக்கும் திரு கருணாநிதி,திமுக ஈழம் விவகாரத்தில் முழு அரணாகவும் போர்க்காலங்களில ் ஒன்றுமே செய்ய இயலாத கையிறு நிலையில் இருந்து போனபோகட்டும் என்று காலை மதிய உணவு இடைவேளையில் உணாவிரதம் இருந்து போரை நிறுத்தி மக்களை காப்பாற்றியவர் என்று நீங்கள் அந்த ஒன்னும் அறியாத பால்வாடி பசங்களுக்கு புரிய வைக்க பாடுபட்டது அடடே... அற்புதம்...நகைச ்சுவையின் உச்சம்...
விடுதலைப்புலிகள ைப் பற்றி இப்படி சொன்ன அந்த அயோக்கியன் யார் என்று கட்டுரை ஆசிரியர் சொல்லலாமே. சொன்னால் அந்த அயோக்கியனையும் அவனுக்கு முட்டுக்கொடுக்க ும் முண்டகலப்பைகளைய ும் தெரிந்திகொள்ள உதவும். இவ்வளவு இழிவானவன் ஒரு கட்சி வைத்திருக்கின்ற ான் என்பதையும் அந்த கட்சிக்கும் சில அடிப்பொடிகள் இருக்கின்றார்கள ் என்பதும் எவ்வளவு வெட்கக்கேடு. தயவு செய்து அந்த நாயின் பெயரை சொல்லவும். கட்டுரை மிக மிக சிறப்பு.
RSS feed for comments to this post