தமிழகத்தில் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதை சூத்திர சாதி வெறியர்கள் ஒரு தொடர் நிகழ்வாகவே மாற்றி விட்டார்கள். தர்மபுரியில் பாமக வன்னிய சாதி வெறியர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குடிசைகளைக் கொளுத்தி, ‘தலித்துக்களின் பொருளாதாரத்தை அழித்தல்’ என்ற முறையை மற்ற சூத்திர சாதிகளும் தங்களுக்கானதாக தத்தெடுத்துக் கொண்டன. பார்ப்பனியத்தால் ‘வேசிமகன்’ (சூத்திரன்) பட்டம் தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட வெட்கப்படாத, இன்னும் சொல்லப்போனால் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதைச் செயல்படுத்தும் இந்த சூடு சுரணையற்ற பிறவிகள், இந்துமதத்தால் இந்து மதத்தில் இருக்கவே தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பஞ்சமர்கள் மீது வன்மத்துடன் பாய்கின்றார்கள். தனக்கு மேலே அழுத்திக் கொண்டிருக்கும் காலகாலத்திற்கும் மாறாத அந்த இழி பட்டம் அவனை பார்ப்பனியத்துக்கு எதிராக கோபம் கொள்ளச் செய்யாமல், பார்ப்பனிய படிநிலையில் தனக்குக் கீழுள்ள மக்கள் மீது வெறுப்பு கொள்ளச் செய்கின்றதென்றால் இவனை என்னவென்று சொல்வது - மானங்கெட்ட பார்ப்பன அடிமை என்பதைத்தவிர.

dalit victim hut

 வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்துகொண்டு ‘வேசிமகன்’ பட்டத்தை பெருமையாக நினைத்து மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு, ஊருக்குள் பெரிய மனிதன் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த அம்மணப் பயல்கள் மலத்தில் ஊறும் புழுக்களைவிடக் கேவலமானவர்கள். ஒரு மனிதனுக்கு எது பெருமை? எது சிறுமை? என்பதைப் பற்றி எந்த விழுமியங்களும், மதிப்பீடுகளும் அற்ற, பொருக்கித் தின்பதற்காக புனிதர்கள் போல வேடமிடும் புல்லுருவிகள் இவர்கள். பறையடிப்பவர்களிடமும், செத்த மாட்டை தூக்குபவர்களிடமும், செருப்புத் தைப்பவர்களிடமும், மலம் அள்ளுபவர்களிடமும் உள்ள நேர்மையில் ஒரு சதவீதம் கூட இல்லாத சுயநலப் பேர்வழிகள். தான் சூத்திரனாக இருந்தாலும், தனக்குக்கீழ் ஓர் அடிமை வேண்டும் என்று நினைக்கும் மனம் எத்தகைய அருவருப்பானது! சமூகம் எவ்வளவுதான் முதலாளித்துவ வடிவத்திற்கு மாறிவந்தாலும் இன்னும் தங்களின் நிலப் பிரபுத்துவ சாதிய சிந்தனையைக் கைவிடாமல், அதை மூர்க்கமாக கடைபிடிக்க நினைக்கும் இந்தப் பிற்போக்குவாதிகளை நாம் எவ்வளவுதான் கேவலமாகத் திட்டினாலும், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட அவனின் மனம் பார்ப்பனனைப் போலவே தன்மான, சுயமரியாதை உணர்வற்றே இருக்கின்றது. திரும்பத் திரும்ப தன்னை ஓர் ஆதிக்க சாதியாகவே அந்தச் சூத்திர மனம் கருதிக் கொள்கின்றது.

 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனக்கு அடிமையாக ஏவல்வேலை செய்த தலித்துக்கள் இன்று இட ஒதுக்கீட்டாலும், முதலாளிய பொருளுற்பத்தி முறையாலும் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார நிலையில் மேல்நிலைக்கு வருவதை சகிக்க முடியாத சூத்திர சாதி வெறியர்கள், அவர்களை சாதி ரீதியாக ஒடுக்குவதை மட்டும் செய்யாமல், பொருளாதார ரீதியாகவும் முடமாக்க சேர்த்தே திட்டமிடுகின்றனர். அதனால் தான் தலித்துகளின் மீதான தாக்குதல் என்பது வெறும் உடல் ரீதியான, மனரீதியான தாக்குதல் என்ற நிலையில் இருந்து அவர்களின் பொருளாதார நிலையை முற்றிலும் அழிக்கும் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. ஒருவனை உடல்ரீதியாக துன்புறுத்துவதை விட, மனரீதியாக துன்புறுத்துவதைவிட அவனின் பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பது நல்ல பலனை ஏற்படுத்தும் என்று சூத்திர சாதி வெறியர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இது தலித்துகளை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் உத்தி. அவனை மீண்டெழ முடியாமல் அடுத்த வேளை சோற்றுக்கே தனது தன்மானத்தை இழந்து, கையேந்த வைத்துப் பார்க்கும் குரூர மகிழ்ச்சி இந்தத் திட்டத்தில் அடங்கி இருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்துவைத்த அத்தனை உழைப்பையும் நெருப்புக்கு இரையாக்குவதன் மூலம் அவனை மீண்டும் அடிமையை விட கீழான நிலைக்குத் தள்ளுகின்றது. பெரும் அச்சத்தையும், பீதியையும் தலித்துகள் மத்தியில் உருவாக்கி அவர்களை நிலைகுலையச் செய்கின்றது. “எதற்கு வம்பு பேசாமல் அவர்கள் வழிக்கே நாம் போய்விடலாம்” என்ற மனரீதியான நெருக்கடியை இது தலித்துகள் மத்தியில் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள கே.தொட்டியபட்டி கிராமத்தில் கம்பளத்து நாயக்கர் சாதி வெறியர்கள் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த மக்களின் குடிசைகளைக் கொளுத்தியுள்ளனர். 60க்கும் மேற்பட்ட வீடுகளை பாறாங்கற்களை கொண்டு அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு நிற்காமல் 10க்கும் மேற்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஆண்களை மிகக் கடுமையாகத் தாக்கியும், பெண்களை மிக இழிவாக பாலியல் ரீதியாகப் பேசியும், அவர்களின் சட்டைகளைக் கிழித்தும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இவ்வளவு வன்முறை செய்யும் அளவிற்கு அவர்கள் செய்த பெரிய குற்றம், ஊர்ப் பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்ததுதான்.

தண்ணீர் பிடிச்சதுக்கு யாராவது குடிசைகளைக் கொளுத்துவார்களா என நாம் நினைக்கலாம். ஆனால் தன்னை ஆதிக்க சாதியாக கருதிக் கொள்ளும் சூத்திரன், தலித்துகள் காலில் செருப்பு போடவோ, இல்லை தோளில் துண்டுபோடவோ, ஏன் கையில் கடிகாரம் கட்டிக் கொள்வதைக் கூட தனது சாதிக்கு விடப்பட்ட சவாலாக நினைக்கும் மட்டமான சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தண்ணீர் பிடிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இத்தனைக்கும் அந்த குடிநீர்க் குழாய் அரசால் போடப்பட்டது. அரசால் போடப்பட்ட குடிநீர் குழாய்க்குச் சாதிவெறியர்கள் எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுதான் விதி. ஆனால் ஆதிக்க சாதி வெறியர்களை ஓட்டுக்காக நக்கிப் பிழைக்கும் அரசியல் கட்சிகள் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது கிடையாது. அதுவும் ஓர் அப்பட்டமான தலித் விரோதியே முதலமைச்சராக இருக்கும்போது, அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுவார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

 தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கவந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மெஜாரிட்டி அடிப்படையில் தலித் மக்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் தண்ணீர் பிடித்துக்கொள்ளவும், மற்ற நேரங்களில் சூத்திர சாதி மக்கள் தண்ணீர் பிடித்துக் கொள்ளவும் ‘மனுநீதி’ படி ஆவணம் செய்துள்ளனர். மார்ச் 30 ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சூத்திர கம்மாள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்ததோடு நிற்காமல், அடிக்கவும் செய்திருக்கின்றான். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சூத்திர கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த சமயம் ஊருக்குள் புகுந்து தனது ஆண்ட பரம்பரையின் கோழைத்தனத்தைக் காட்டியிருக்கின்றார்கள்.

dalit victims

காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தாலும் சம்மந்தப்பட்ட சூத்திர சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது. சம்பவம் நடந்தவுடன் CPM, CPI, விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் போன்ற கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி குரல் கொடுத்திருக்கின்றார்கள். இல்லை என்றால் காவல்துறை வழக்கைக்கூட பதிவு செய்யாமல் இருந்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. மேற்கண்ட பிரச்சினை தவிர பொது சுடுகாட்டைப் பயன்படுத்தவும், அந்த ஊர் சமுதாயக் கூடத்தை பயன்படுத்தவும் அருந்ததியர் சாதி மக்களுக்கு சூத்திர சாதி வெறியர்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 ஒருவேளை சோற்றுக்கே சிங்கி அடிக்கும் நிலைமையில் இருந்தால் கூட பார்ப்பன அடிமைகளுக்கு சாதிவெறி மட்டும் குறையாமல் இருக்கின்றது என்பதைத்தான் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்கள் காட்டுகின்றது. அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் தொடர்ந்து சூத்திர சாதி அடிமைகளின் அயோக்கியத்தனத்தைக் தட்டிக்கேட்கத் திராணியின்றி இருக்கின்றது என்றால், அதை வெளி உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய ஊடகங்களும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பற்றி பெரிய அளவில் அக்கறை கொள்ளாமல் இருக்கின்றன. இதுவே அருந்ததியர் சாதி மக்கள் கம்மளத்து நாயக்கர் வீடுகளை கொளுத்தி இருந்தால் அது தேசிய செய்தியாக மாற்றப்பட்டிருக்கும். பார்ப்பன ஊடகங்கள் 24x7 ஊளையிட்டு இருக்கும்.

 நாம் அருந்ததியர் இன மக்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் இதைத்தான். தயவு செய்து நீங்கள் செய்துகொண்டிருக்கும் இழிதொழில்களில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களை மனிதப்பிறவிகளாகவே மதிக்காத உங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறுங்கள். உங்களை மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியில் அரசியல் மயப்படுத்திக் கொள்ளுங்கள். எப்படி உனா நிகழ்வுக்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய தலித்துகளின் போராட்டம் வெடித்ததோ, அதே போல அரசைப் பணிய வைக்கும் மிகப்பெரிய போராட்டங்களைக் கட்டி எழுப்புங்கள். அது போன்ற வீரம் செறிந்த போராட்டங்கள் தான் உங்களையும், உங்கள் சந்ததிகளையும் சூத்திர சாதி வெறியர்களிடம் இருந்து காப்பாற்றக்கூடியது. அடித்தால் திருப்பி அடியுங்கள், கொளுத்தினால் திரும்பக் கொளுத்துங்கள். வரலாற்றை மாற்றி எழுத நீங்கள் துணியவில்லை என்றால், சாதி வெறிபிடித்த அயோக்கியர்கள் தங்களுக்கு சாதகமாவே அதை எப்போதும் எழுதிக் கொண்டிருப்பார்கள். பெட்ரோலும், தீக்குச்சிகளும் ஆதிக்க சாதிவெறியர்களின் கரங்களில் இருப்பதைவிட உங்கள் கரங்களில் இருக்கும் போதே அதற்கு மதிப்பு அதிகரிக்கின்றது. நான் என்ன நினைக்கின்றேன் என்றால் பெட்ரோலையும், தீக்குச்சியையும் எப்படி பயன்படுத்துவது என்று தலித்துகளுக்கு யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்னருமை தலித் தோழர்களே?

- செ.கார்கி

Pin It