மோடிஜி உங்களுடைய சாதனையை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களுடைய கடுமையான பணிகளுக்கு மத்தியில் இப்படியொரு சாதனையை எப்படி உங்களால் செய்ய முடிந்தது. ஏதோ உங்களுடைய கட்சியில் 8.8 கோடிபேர் சேர்ந்து இருப்பதாகவும் இதன் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நீங்கள் தொபுக்கடி என்று கீழே தள்ளிவிட்டு உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வந்திருக்கின்றது.

Modi Amit Shahநாய்க்கு வேலையும் இல்லை, நிற்பதற்கு நேரமும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல ஓயாமல் உலகம் பூராவும் ஓசியில் சுத்திப் பாத்துகிட்டு இருக்கும் போது இது எப்படி உங்களால சாத்தியம் ஆனதென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த அப்கோ வேல்டு வெய்டோட சதியா இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. ஏன் என்றால் போன பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் அப்படித்தான் செய்தீர்கள், பேஸ்புக், ட்விட்டர்னு லட்சக்கணக்கான போலி அக்கவுன்ட உருவாக்கி, சீனாவோட பஸ்டான்ட உங்க ஊர் அகமதாபாத் பஸ்டான்டுனு புருடா விட்டீங்க. உங்க குஜராத்தில் எல்லா மக்களும் தங்கதட்டுல சாப்பிட்டு வாழை இலையில ஆயி இருக்கிற அளவுக்கு சேமமாக இருப்பதாக சொன்னீங்க. ஆன உங்க ஊருக்கு வந்து போன எங்க ஆளுங்க குஜராத்தில் அப்படியொன்றும் அதிசயம் நிகழ்வில்லை என்று ஆதாரத்துடன் சொன்னார்கள். புள்ளி விவரங்களால் உங்களைப் புரட்டி எடுத்தார்கள். நீங்கள் அப்போதும் மனம் தளராத விக்கிரமாதித்தியனாக புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தீர்கள்.

உங்களப் பார்த்து கொலைகாரன், பொண்டாட்டியே மறைச்ச பிராடு, ஏதோ ஒரு பெண்ணை விரட்டி விரட்டி வேவு பார்த்த மைனர்குஞ்சுன்னு ஏதேதோ சொன்னாங்க. ஆனா அது எல்லாத்தையும் உங்களோட அடிப்பொடிகள்(அண்ணனின் விழுதுகள்) பட்டையைப் போட்டு நெற்றியை மறைப்பது மாதிரி மறைத்துவிட்டார்கள்.

மோடிஜி இன்னமும் எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு, எப்படி இத்தன கோடி பேரு உங்களுக்கு மிஸ்டுகால் விட்டார்கள் என்று. ஒரு வேளை அகமதாபாத் கல்யாண மண்டபத்தில ஆயிரக்கணக்கில் ஆள் போட்டு லட்சக்கணக்கான டம்மி சிம்முகளை நீங்களே வாங்கித் தந்து மூன்று நேரமும் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து நீங்களும் உங்க தம்பி அமித்ஷாவும் செஞ்ச சதியோன்னு தோணுது.

மோடிஜி இந்திய மக்கள் உங்கள் மீது மிகக்கோபமாக இருக்கிறார்கள். நீங்கள் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வந்தீர்கள் என்றால் உங்களது டங்குவாரை அறுக்க ஒரு பெரும் கூட்டமே காத்துக்கொண்டு இருக்கின்றது. இத்தகைய கொந்தளிப்பான சூழலில் உங்களை தற்காத்துக்கொள்ள இது போன்ற புலிகேசி காமெடிகளை நீங்கள் கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு கோடிபேரை உறுப்பினராக்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய உங்கள் அன்புத்தம்பி அமித்ஷாவும் தமிழ்நாட்டின் மாயாபென் கோத்னானி தமிழிசை செளந்திரராஜனும் எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று எதுவும் பேசாமல் மரண மெளனம் காக்கிறார்கள். ஒருவேளை உண்மையை சொல்லிவிட்டால் பக்கத்தில் இருக்கும் நண்டு சிண்டுகள் எல்லாம் துண்டக் காணோம், துணியைக் காணோம், தூங்கும்போது மணியைக் காணோம் என்று ஒடிவிடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.

எனவே மோடி அவர்களே, இந்த அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்கு பிரயோஜனமாக ஏதேனும் செய்யமுடியுமா என்பதில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால், “இந்த பிழைப்பு பிழைப்பதற்கு வேறு எதாவது தொழில் செய்து பிழைக்கலாம்” என்று நாங்கள் மட்டுமல்ல, இந்த சமூகமும் சேர்ந்து சொல்லும்.

- செ.கார்கி

Pin It