"தேசிய இனப்பிரச்சினையில் எங்களைவிட யாரும் சனநாயகவாதிகளாக இருக்க முடியாது........."
விவாதத்தின்போது தோழரின் வார்த்தைகள் என்னை சீண்டிப் பார்த்தது.
"நாங்கள் என்று உங்கள் கட்சியையா கூறுகிறீர்கள்?"
"கம்யூனிஸ்டுகளை குறிப்பிடுகிறேன்"
தேசியப் பிரச்சினைகளை விவாதிப்பதால் அவர் என்னை கம்யூனிஸ்டாக அங்கீகரிக்க முடியாதென்கிறார். சான்றளிக்கும் உரிமை அவரிடம்தான் இருக்கிறது போலும். நான் என்ன செய்ய முடியும்?
"சரி தோழர். தேசிய இனப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?"
"சுயநிர்ணய உரிமை மட்டும்தான் தீர்வு!"
"சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்திற்கு தன்னுடைய அரசியல் - பொருளாதார - பண்பாட்டு வாழ்வைத் தானே தீர்மானித்துக்கொள்ள உரிமை அளிக்கிறது இல்லையா?"
"ஆமாம்"
"அது அத்தேசிய இனத்திற்கு சொந்த வாழ்வை தீர்மானிக்கவும், பாதுகாக்கவுமான அரசை உத்திரவாதப்படுத்துகிறது இல்லையா?"
"ஆமாம்"
"ஆக சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனிதனியான சொந்த அரசு உண்டு என்பதை உத்தரவாதப்படுத்துகிற கோட்பாடாகும்."
தோழர் என்னவோ சொல்ல முயற்சிக்கிறார்.
"சொல்லுங்க தோழர்"
"இல்ல நீங்களே தொடர்ந்து சொல்லுங்க"
"தனக்கான அரசியல் - பொருளாதார - பண்பாட்டு வாழ்வைத் தானே தீர்மானிக்கிற; அதற்கான அரசை அமைத்துக்கொள்கிற தேசிய இனம் அதற்கானத் திட்டத்தை தான்தானே முன்வைக்கும்?"
".........................."
"அப்படியானால் இந்தியாவிலிருக்கிற ஒவ்வொரு தேசிய இனங்களும், பழங்குடியினங்களும் தங்களுக்கான சொந்த திட்டங்களை கொண்டிருக்க வேண்டுமல்லவா?"
"........................"
"ஒரே திட்டம், ஒரே கட்சி என்பது எப்படியிருக்க முடியும் தோழர்?"
இங்கிருக்கிற அமைப்புகளிடமும், பக்கத்து தேசிய இனப் பிரதிநிதிகளிடமும் என்னுடைய விவாதம் இதற்குமேல் நகரவில்லை. நீங்களாவது நகர்த்துங்களேன்!
தோழர் என்னவோ சொல்ல முயற்சிக்கிறார்..//
தோழர் இங்கு சொல்வருவது என்வென்றால், சுயநிர்ணய உரிமை என்பது எந்த தேசிய இனங்களும் மற்றொரு தேசிய இனத்துடன் சேர்ந்து ஒரே அரசின் கீழ் இருக்கக் கூடாது என்பதாகும். இது மார்க்சியம் கூறுகின்ற பிரிவினைவாதமாகு ம்.
பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இன மக்களின் விடுதலைக்கானது என்பதாகப் புரிந்து கொள்ளாமல், தேசிய இன மக்களின் தன்னாட்சி தனியாட்சி என்று தவறாக புரிந்துள்ளனர். இந்த தவறான புரிதலுக்கும் மார்க்சியத்துக் கும் எந்தத் தொடர்பில்லை.
லெனின்:-
“தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பிரத்தியேகமாக அரசியல் ரீதியில் சுயேச்சை பெறும் உரிமையை, ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அரசியல் ரீதியில சுதந்திரமாக பிரிந்து போகும் உரிமையைக் குறிக்கிறது. ஸ்தூலாமாக, அரசியல் ஜனநாயகத்தின் இந்தக் கோரிக்கையின் உட்பொருள், பிரிந்து போவதற்காகக் கிளர்ச்சி செய்ய முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதும், பிரிந்து போகும் தேசிய இனத்தின் பொதுவாக்கெடுப்ப ு மூலமாகப் பிரிந்து போவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தான். எனவே, இந்தக் கோரிக்கையும், பிரிய வேண்டும், துண்டாக வேண்டும், சிறு அரசுகள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்றல்ல.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்-
(தேசிய இனப்பிரச்சினைகள ும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ் –தொகுப்பு நூல் பக்கம்184-185)
லெனின்:-
"ஒரு சர்வதேசியவாத சமூக-ஜனநாயகவாதி யாக இருப்பதற்கு ஒருவன் தனது தேசிய இனத்தைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது, எல்லாச் தேசிய இனங்களின் நலன்களையும், அவற்றின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றையும் தமது தேசிய இனத்தினுடையவற்ற ிற்கு மேலாக வைத்து நடக்க வேண்டும். "தத்துவார்த்த அளவில்" இதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள், ஆனால் நடைமுறையில் ஒரு கட்டாயப் பிரதேச இணைப்புப் போக்குவாதியன் "பாராமுகத்தைத்" தான் காட்கிறார்கள். தீமையின் வேர் இங்கே தான் இருக்கிறது.
மறுபுறத்தில், சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக-ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச் சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை- தேசிய இனங்களின் "மனப்பூர்வமான ஐக்கியம்" என்பதை - வலியுறுத்த வேண்டும். அவர் தம்முடைய நாட்டின் அரசியல் சுயேச்சையையும், அது அண்டைய நாடானX.Y.Z போன்ற எதாவது ஒன்றுடன் இணைவதையும் ஆக இரண்டையும் ஆதரிக்கலாம், சர்வதேசியவாதி என்ற முறையில் தமது கடமைகள் தவறாதபடி அவ்வாறு செய்யலாம். ஆனால் அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கிவாழுதல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். முழுமையையும் பொதுவையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும்.
ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி கள் "பிரிந்துபோகும் உரிமையை" வலியுறுத்துவதும ், அதே சமயம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி கள் "ஐக்கியமுறும் உரிமையை" வலியுறுத்துவதும ் "முரணானவை" என்று பிரச்சினையை நன்கு கவனிக்காதவர்கள் நினைக்கிறார்கள் . எனினும் சற்று சிந்தித்துப பார்த்தால், இப்பொதுள்ள நிலையிலிருந்து சர்வதேசியவாதத்த ுக்கும் தேசிய இனங்களின் ஜக்கிய கலப்புக்கும் இட்டுச் செல்லும் பாதை இதைத் தவிர வேறு எதுவுமில்லை, வேறு எதுவும் இருக்க முடியாது என்பது விளங்கும்."
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு –
(தேசிய இனப்பிரச்சினைகள ும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ் – லெனின் தொகுப்பு நூல்-பக்கம் - 246-247)
லெனின்:-
“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையு ம் சமத்துவமின்மையை யும் எதிர்த்துப் போராடாத எவருவம் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்க ூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது. ஆனால் பிறிதொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சிவாதி “ஒன்றுகலத்தலை” ஆதரித்து நிற்பதாகச் சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார் என்பதும் அதே போல் சந்தேகத்துக்கு இடமில்லத்து தான்”
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
(தேசிய இனப்பிரச்சினைகள ும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ் – லெனின் தொகுப்பு நூல் பக்கம் – 34)
லெனின்:-
"எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
(தேசிய இனப்பிரச்சினைகள ும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ் – லெனின் தொகுப்பு நூல்-பக்கம்-186 )
RSS feed for comments to this post