நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அணையா விளக்காக, என்றும் நின்று நிலவக்கூடிய திசைகாட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்ற வழக்கில் பதவி உயர்வுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒளிகாட்டும் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை கொடுமை ஆகியவற்றின் சமூக இருப்புகளை விரிவாக விவாதித்து அவற்றைப் போக்குவதற்கான கருத்துகளையும் வழங்கினார்.
மரண தண்டனை கூடவே கூடாது என்று அவர் தீர்ப்புரைகளில் கூறியுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தூக்கு மரத்தில் ஒருவர் தொங்கவிடப்படும் பொழுதெல்லாம் இந்திய அரசுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் களத்தில் குறிப்பாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களில் அவர் துடிப்போடு பங்கு கொண்டார். இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயிருள்ளவரை போராடி வந்தார்.
இளம் வழக்கறிஞர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் வழிகாட்டும் நீதித்துறை வல்லுனராகவும் மனிதஉரிமைப் போராளியாகவும் என்றென்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் விளங்குவார். அவருக்கு மீண்டும் தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- பெ.மணியரசன்
- பிரிவு: கட்டுரைகள்