ஏப்ரல் மாதத்தில் கல்லூரிகள் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று நமது கல்வி மீது பலருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது. கல்விவணிகமயமாக்கப்பட்டு, சாராயம் அரசுடைமையாக்கப்பட்டு பணமிருந்தால் கல்வி என்று மாறியுள்ள நிலையைப் பற்றி இதுவரை கொஞ்சம்கூட கவலைப்படாத பல்வேறு அரசியல் கட்சிகள், இன்று நமது படிப்பும், எதிர்காலமும் நமது போராட்டத்தால் எங்கே வீணாகிவிடுமோ என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இத்தகைய தமிழீழ துரோகிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் நமது படிப்பையும் போராட்டத்தையும் வெற்றியாக்கும் திட்டத்தோடு நமது அடுத்த வேலைகளை முன்னெடுத்துச் செல்வோம்.
அடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நமக்குள் பரிமாறிக் கொள்வதற்கு முன் நமது கோரிக்கைகளாக எதை முன்னிலைப் படுத்துவது என்பதைப் பற்றிய சரியான புரிதலை நாம் வந்தடைய வேண்டியுள்ளது,
நமது மூன்று கோரிக்கைகள் :
ஏற்கனவே தமிழகம் முழுவதும் போராடி வரும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாலும், கீழ்வரும் இரண்டு கோரிக்கைகள் மட்டும் அனைவராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.
1 . சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக, இனப் படுகொலையாளனாக சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.
2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகள் இரண்டும் நம் தொப்புள் கொடி உறவுகள் தமிழீழ மக்களின் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கக் கூடியது ஆகும்.
நாம் அனைவரும் இன்னுமொரு அடிப்படையான கோரிக்கையை உடனடியாக முன்னுக்குக் கொண்டுவர வேண்டிய அவசர அவசியம் உள்ளது. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு பிறகு சிங்கள வெறியன் ராஜபக்சே அரசு நாம் யாருக்காக போராடிக் கொண்டிருக்கிறோமோ அந்த தமிழினத்தை இலங்கையில் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று பல்வேறு கொடுரமான செயல்களைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்துவருகிறது, இத்தகைய இந்த இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், இன அழிப்புப் போராலும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசின் கொடூரமான அடக்கு முறையாலும் தமிழீழ மக்களின் வாழ்நிலையானது மிக, மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய கடமையும் நம் முன்னுள்ளது.
எனவே, நாம் அனைவரும் ஈழத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கான போராட்டங்களைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கும் அதே வேளையில், ஈழத் தமிழர்களின் உடனடி சிக்கலான
“இன அழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளைஉடனடியாக நடைமுறைப்படுத்து” என்பதை இந்திய அரசின் முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எனவே, நாம் நிரந்தரத் தீர்விற்கான இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதோடு, ஈழத் தமிழர்களின் உடனடி சிக்கலுக்கான மூன்றாவது கோரிக்கையையும் நாம் முன் வைத்துப் போராடவேண்டும்.
நமது இந்த மூன்று அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நமது போராட்டங்களை நகர்த்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான உறுதியான ஆதரவுப் போராட்டத்தைக் கட்டியமைக்க முடியும்.
நமது போராட்டத்தோடு, தமிழக மக்களின் போராட்டமும், தமிழகத்தில் உள்ள M.P.க்களின் நாடாளுமன்ற போராட்டமும் இணைந்து இந்திய அரசைக் கடுமையான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இச்சூழலில் இந்திய அரசானது தங்களது உளவுத் துறை, கைத்தடிகள் மூலமும், தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மூலமும் நமது போராட்டத்தைத் திசைதிருப்பும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. (தமிழகத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்காக முதலில் போராடுங்கள், இந்திய அரசை நிர்ப்பந்திப்பதால் பயனில்லை, அமெரிக்காவை நிர்ப்பந்தியுங்கள், காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறது, சுப்ரமணியசாமிதான் (இவன் எதிர்க்கப்பட வேண்டியவன் என்றாலும் இப்பொழுது முன்னிலைப் படுத்த வேண்டியவன் அல்ல) அனைத்திற்கும் காரணம், ராஜீவ் படுகொலையின் பின்னனியைஆய்ந்தறிவதுதான் தமிழீழச் சிக்கலுக்குத் தீர்வு, மாணவர்களுக்கு அரசியல் கூடாது... . ) என்று
தொலைக்காட்சி, பத்திரிகை, இணையதளம் மற்றும் தங்கள் கைத்தடிகள் மூலமாக நமது முக்கியமூன்று கோரிக்கைகளிலிருந்து திசை திருப்பும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி தருவது, அமெரிக்க பொருட்களை நிராகரிப்பது, மௌன புரட்சி, இந்தியாவில் உள்ள முதலாளிகளின் (இலங்கையில் முதலீட செய்துள்ள) பொருட்களை நிராகரிப்பது... போன்ற நடைமுறை சாத்தியமற்ற, வீரியமற்ற செயல்பாடுகள் சில மாணவர் கூட்டமைப்புகளால் முன் வைக்கப்படுகிறது. நமது போராட்டத்தின் இலக்கு என்பது இந்திய அரசை நிர்ப்பந்தித்து, நமது கோரிக்கைகளை ஏற்க வைப்பது என்பதிலேயே ஒன்று குவிக்கப்பட வேண்டும். இந்தியா, இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவில்லை என்றால், உலக நாடுகள் ஈழத்திற்கு ஆதரவாய் ஐ.நா. வில் வாக்களிக்க வில்லையென்றால், இந்திய முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் பொருட்களை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடலாம்.
நமது போராட்டத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டது மிகவும் சரியானது. இதுவே பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நமது போராட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சிலரால் மாற்றப்பட்டது. இச்செயல் மாணவர்களாகிய நாம் பரந்த அரசியல் அறிவைப் பெறுவதைத் தடுக்கும் செயலாகும். மாணவர்களாகிய நாம் பல்வேறு கூட்டமைப்புகளில் தனித்தனியாக ஒன்றிணைந்து போராடினாலும் நம் அனைவரையும் இணைப்பது நமது அடிப்படைக் கோரிக்கைகள்தான்.
இத்தகைய கருத்தொற்றுமையை சிதைக்கும் வேலையைத்தான் காங்கிரசு கட்சியும், இந்திய (காங்கிரஸ்) அரசும் செய்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் விழிப்புடன் இக்கருத்துகளை முறியடிக்க வேண்டும்.
படிப்பையும் போராட்டத்தையும் வெற்றியாக்குவோம்
சில தனியார் கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், ஏப்ரல் 3இல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கவுள்ளது. நமது செமஸ்டர் தேர்வுகள் வரும் ஏப்ரல் தொடங்கி மே வரை நடக்கவுள்ளது. மறுபடியும் கல்லூரி ஜூலையில் திறக்கவுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மே-வில் செமஸ்டர் தொடங்கி ஜூனில் முடிகிறது. ஆகஸ்டில் கல்லூரி திறக்கவுள்ளது.
நாம் செமஸ்டர் தேர்வில் வெற்றியடைந்து நமது பெற்றோரின் மனதைக் குளிர வைப்போம். தமிழீழ மக்களுக்கான ஆதரவுப் போராட்டத்தில் வெற்றியடைந்து தமிழீழ மக்களின் மனதை மலரச் செய்வோம்.
ஏப்ரல் - மேவில் நாம் நான்கு வேலைகளை முடிப்போம்
1. கல்லூரிக்கு முறையாகச் செல்வோம். செமஸ்டர் தேர்வுக்கு நம்மை தயார் செய்து கொள்வோம்.
2. கல்லூரி முடிந்த மாலை நேரங்களில் வாரத்தில் மூன்று (அ) நான்கு நாட்கள் நமது கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று பல்வேறு பிரிவினரின் மத்தியில் நமது மூன்று அடிப்படை கோரிக்கைகளின் நியாயத்தையும், அதற்காக மக்கள் அனைவரும் போராட வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து பரப்புரை செய்வோம். மேலும் சனி (அ) ஞாயிறுகளில் ஏதாவது ஒரு நாள் நமது கல்லூரியைச் சுற்றியுள்ள கிராம மக்களிடமும் மேற்கூறிய பரப்புரையைக் கொண்டு செல்லவேண்டும்.
3. தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள 40 MPக்களின் வீடுகளுக்கும் மாணவர்கள் பெருமளவில் அணி திரண்டு சென்று,
-
40 M.P.க்களும் நமது மூன்று கோரிக்கைகளை நாடாளு மன்றத்தில் வலியுறுத்தப் போராட வேண்டும். (தனித் தெலுங்கானாவிற்காக தெலுங்கானா M.P.க்கள் போராடியது போல).
-
இந்தியாவில் உள்ள அனைத்து M.P.க்களையும் தமிழக 40 M.P.க்கள் குழுக்களாக பிரிந்து சென்று நேரில் பார்த்து, பேசி, அழுத்தக் குழுக்களை உருவாக்கி நமது மூன்று கோரிக்கை களையும் காங்கிரசு அரசு ஏற்கும்படசெய்ய நிர்ப்பந்திக்க வேண்டும்.
-
இம்மூன்று கோரிக்கைகளை வரும் செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவையில் இந்தியாவே முன்வைக்க வேண்டும். அதற்கு அட்சாரமாக நாடாளுமன்றத்தில்இம் மூன்று கோரிக்கைகளையும் தீர்மானமாக நிறைவேற்ற வைக்க வேண்டும். ஐ.நா. பொதுப் பேரவையில் இத்தீர்மானம் நிறைவேற உலக நாடுகளிடம் இந்திய அரசு தொடர்ந்து பேசி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தயார் செய்ய வேண்டும்.
-
உடனடியாக இந்திய அரசு இலங்கையை நிர்ப்பந்தித்து சிங்கள இனவெறியன்ராஜபக்சே அரசு தொடர்ந்து நடத்தும் இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும். போரால் பாதிக்கப் பட்டுள்ள ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
-
தி. மு. க. - அ. தி. மு. க. கட்சிகள் ஓட்டு அரசியலுக்காகவும், பாராளு மன்றத் தேர்தலை மனதில் வைத்தும் ஈழச் சிக்கலை அணுகாமல், தங்களுக்குள் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்தை வைத்து சவ அரசியல் செய்யாமல், உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் எழுப்புவது நோக்கமாக இருந்தால் தமிழகமே ஒருமித்து ஒரே குரல் கொடுக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறில் லாமல் இவ்விரு கட்சிகளும், மற்ற கட்சிகளும் ஓட்டு அரசியல்தான் முக்கிய மென்று ஈழத் தமிழர்களுக்கு முன்பு செய்த துரோகத்தைச் செய்ய நினைத்து செயல்பட்டால், அக்கட்சித் தலைவர்கள் வீட்டை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட மனுக்களை அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் மாவட்ட, மாநிலத் தலைவர்களிடம் கொடுக்க வேண்டும்.
மேற்கூறிய அடிப்படைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுக்களை நாம் கொடுத்து வலியுறுத்திப் பேசவேண்டும். தொழிற் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் எனப் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளிடமும் நமது கோரிக்கை மனுவைக் கொடுத்து, அவர்களையும் 40 M.P.க்களின் வீடுகளுக்கு பெருங்கூட்டமாகச் சென்று மனு அளித்து வலியுறுத்திப் பேசச்சொல்லவேண்டும்.
4. செமஸ்டர் தேர்வுக்கு முன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்து ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரசுத் தலைவர்கள், காங்கிரசு M.P.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு, “ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு விலகச் சொல்லியும் கட்சி பதவி, மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்லியும்” முழக்கங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டம் நடத்தவேண்டும்.
மேற்கூறிய அம்சத்தை பல்வேறு பிரிவு மக்களிடம் பிரச்சாரமாகக் கொண்டு சென்று, தமிழகத்தில் உள்ள மக்களையும், காங்கிரசுத் தலைவர்கள், M. L. A. க்களின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராடும்படி வேண்டுகோளை முன்வைத்து (காங்கிரசு கட்சிக்கு) காங்கிரஸ அரசிற் கெதிராக பெரும் மக்கள் எழுச்சியை கட்டியமைக்க வேண்டும்.
ஜூன் - ஜூலை (விடுமுறை நாட்களில்) நமது வேலை
செமஸ்டர் தேர்வு முடிந்ததும் விடுமுறை நாட்களில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பல்வேறு பிரச்சாரக் குழுக்களாகப் (குறைந்தது ஒரு குழுவில் 10 முதல் 15 பேர்) பிரிந்து தமிழகத்தின் அனைத்து கிராமங் களுக்கும் சென்று, நமது மூன்று கோரிக்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்வதோடு, அதற்காக மக்கள் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி வீதி நாடகங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பாடல்கள் மூலமும் மற்றும் சேனல் 4 வெளியிட்ட ஆதாரத்தைப் படங்களாகப் போட்டுக் காட்டியும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
வரும் செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை கூடும்போது, இந்திய அரசு தவிர்க்க இயலாமல் நமது மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற, உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கும்படி நிர்பந்திக்க மக்கள் போராட்டங்களை ஆகஸ்டு, செப்டம்பரில் தீவிரப்படுத்தச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்,
ஆகஸ்டு - செப்டம்பரில் நமது வேலை
ஆகஸ்டில் சேனல் -4 சிங்கள இன வெறியன் ராஜபக்சே அரசின் இனப்படுகொலையை முழுமையாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளது. சேனல்-4 வெளியீட்டைப் பல்லாயிரக்கணக்கான ஊனு-க்களாகப் போட்டு தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்,
செப்டம்பரில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுப்பேரவையில் இந்திய அரசு நமது மூன்று கோரிக்கைகளை ஐ.நா. வில் முன்வைத்துத் தீர்மானத்தை நிறைவேற்ற கடுமையான நிர்பந்தத்தை இந்திய அரசிற்கு (காங்கிரசு அரசுக்கு) கொடுக்கும் விதமாக மாணவர்கள் போராட்டத்தை தமிழகத்தின் பெரும் மக்கள் எழுச்சியாக, 40 M.P.-களும் நாடாளுமன்றத்தையே அதிர வைக்கும் போராட்டமாக ஆகஸ்ட், செப்டம்பரில் நாம் முன்னெடுக்க வேண்டும்.
இத்தகைய நமது மூன்று அடிப்படைக் கோரிக்கைகளை, வேலைத் திட்டத்தைக் குலைக்க நினைக்கும், திசைதிருப்ப நினைக்கும் தமிழீழ துரோகிகளை இனம்கண்டு நமது போராட்டப்பாதையில் உறுதியாக முன்செல்ல வேண்டும் என்று அனைத்து மாணவர்களையும், தமிழீழ ஆதரவு அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
மாணவர்கள் எத்தகைய கூட்டமைப்பில் இருந்தாலும் எத்தகைய அரசியல் பின்னனியில் இருந்தாலும் நமது மூன்று கோரிக்கை, நமது வேலைத் திட்டம் என்ற இலக்கில் ஒன்றுபடுவோம்...
போராடுவோம்... வெற்றி பெறுவோம்... !
மாணவர்களே!
✯ வரும் செமஸ்டர் தேர்வில் வெற்றி பெற்று பெற்றோரின் மனம் குளிர வைப்போம்!
✯ வரும் செப்டம்பர் போராட்டத்தில் வெற்றி பெற்று தமிழீழம் மலரச் செய்வோம்!
✯ ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்!
✯ இனஅழிப்பைத்தடுப்போம், மறுவாழ்வு மலரச் செய்யவோம்!!
தமிழக அரசியல் கட்சிகளே!
✯ஓட்டுஅரசியலைமுன்வைத்துஈழதமிழர்களுக்கு துரோக மிழைக்காதீர்!
✯ மழலை செல்வன் பாலசந்திரனின் படுகொலை படத்தை வைத்து சவ அரசியல்செய்யாதீர்கள்!
✯ஓட்டுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் தமிழகமே ஒருமித்து ஒரே குரல்கொடுக்க செய்யுங்கள்!
காங்கிரசு M. L. A, M.P.க்களே! தலைவர்களே! தமிழக காங்கிரசு கட்சியினரே!
✯ ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறுங்கள்! கட்சிப் பதவியை, மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யுங்கள்!
✯ தமிழக (பாண்டிச்சேரி) 40 M.P.க்களே!
✯நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்பி போராட்டத்தை வெற்றியாக்குங்கள்!
✯இந்தியாவில் உள்ள அனைத்து M.P.க்களையும் ஒன்றிணைத்து அழுத்தக் குழுக்களை உருவாக்கி காங்கிரசு அரசைப் பணிய வையுங்கள்!
இந்திய அரசே!
✯ இத்தாலிக்கு ஒரு நீதி இலங்கைக்கு ஒரு நீதியா?
✯ இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?
✯ இலங்கை அரசை நிர்பந்தித்து, ஈழத் தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!
✯ மறுவாழ்வு பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்து!
அய். நா. மன்றமே!
✯இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்து!
✯வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்து!
✯ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை அய். நா. மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைபடுத்து!
✯சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் ஈழத்தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!
- தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
9789434804, 8682853634, 9042383070, 9080007013, 9629377789
ஆனால் இவற்றுக்கிடையில ் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ண ை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது . விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கா ன ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவி டும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.
1. போரின் இறுதிக்கட்டத்தி ல் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்க ள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகள ும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி கள் தண்டிக்கப்பட வேண்டும்.
2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டு கின்றன. வழிபாட்டுத்தலங் கள் அழிக்கப்படுகின் றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிற து. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்க ு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும ் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள ், பஞ்சம் பிழைக்கப்போனவர் கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில ் மிகப்பெரும்பாலா னோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார ்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்ட ே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்க ு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில ் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும ் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர ்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும ் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன் . தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்ல ை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களா ன அவர்களின் ஆதரவையும் பங்கெடுப்பையும் பெற வேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம ் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்க ள் நன்கு படித்தவர்களாகவு ம் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும ். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை)
இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையு ம் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டி ருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும ் பித்தலாட்டங்களை யும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.
Create a situation, where no MLA or MP will dare to contest the election without supporting Tamil Eeelam. Create awareness of the general public about the importance of obtaining Eelam. Otherwise, politicians will hijack them in the next election with false promises and buying the votes.
Include all levels of public to particpate in the agitation. Writers,poets and labour union to participate in the struggle.
RSS feed for comments to this post