(பழங்குடி-மலைவாழ் மக்களை காட்டைவிட்டு வெளியேற்றும்... காடுகளைத் தனியார்மயமாக்கும்... புலிகள் காப்பக திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்! - என்னும் தலைப்பில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் மக்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் துண்டறிக்கை)
வீரஞ்செறிந்த உழைக்கும் மக்களே!
வியர்வை சிந்தி, பாடுபட்டு இந்நாட்டின் அத்தனை செல்வத்தையும் உருவாக்குபவர்கள் நாம். நமது உழைப்பை உறிஞ்சி, தின்று கொழுத்து திரிபவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள். அப்பெரு முதலாளிகளுக்கு ஏவல் வேலை செய்து, ஊழல், இலஞ்சத்தின் மூலம் உயிர் பிழைப்பவர்கள் தேர்தல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். இந்த பெருமுதலாளிகள் – தேர்தல் அரசியல்வாதிகள் – உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டணியானது நம்மைச் சுரண்டுவதற்காக காலங்காலமாக பல பெயர்களில் பல திட்டங்களை கொண்டுவருகின்றது. அவற்றை ‘மக்கள் நலனுக்கான திட்டங்கள்’ என்று நம்மிடமே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. அத்தகையதொரு திட்டம்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் புலிகள் காப்பகத் (Tiger Reserve) திட்டமாகும்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
தமிழகத்தில் ஏற்கனவே 3 புலிகள் காப்பகங்களை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அரசு நிறைவேற்றி உள்ளது. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும் ஆலோசித்து, ஏற்கனவே வனவிலங்கு சரணாலயமாக உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்தை உருவாக்கின. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புலிகள் காப்பகமாக இருக்கும். இப்போது இத்திட்டம் வேகமாக நடைமுறைக்கு வருகிறது. 524 சதுர கி.மீ. பரப்புடைய சத்தி வனவிலங்கு சரணாலயத்தை வனத்துறை 2011 செப்டம்பரில் 1,412 ச.கி.மீட்டராக அதிகரித்தது. இந்த முழு பரப்பும் இப்போது சத்தி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரப்பில் 917 ச.கி.மீ. (அதாவது 65%) பரப்பு கொண்ட பகுதி மையப்பகுதி (Core Area) ஆகும். இப்பகுதிக்குள் வசித்துவரும் பழங்குடிகளும், பாரம்பரிய மலைவாழ் மக்களும் வெளியேற்றப்படுவார்கள். வன அதிகாரிகளுக்கு மட்டுமே இப்பகுதிக்குள் நுழைய அனுமதி உண்டு. மீதமுள்ள 35% பகுதி சுற்றுவட்டாரப் பகுதி (Buffer Area) ஆகும். இதற்குள் வசித்துவரும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். காட்டிற்குள் வனப்பொருட்கள் சேகரித்தல், மாடு மேய்த்தல் உள்ளிட்ட அனைத்து வன உரிமைகளும் பறிக்கப்படும்; அரசின் வளர்ச்சிப் பணிகள் எதுவும் இனி மேற்கொள்ளப்படாதுஇவ்வாறு கட்டுப்பாடுகள் விதித்து அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதானது அவர்களைத் தாங்களாகவே வெளியேறும் வண்ணம், மறைமுகமாக காட்டைவிட்டு வெளியேற்றுவதாகும்.
புலிகளின் பாதுகாவலனாக வேடம் போடும் குள்ளநரிகள்
“இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது... அடர்ந்த வனப்பகுதியில் உள்ள புலிகளுக்கு அங்கு வசிக்கும் பழங்குடி இனமக்களால் பாதிப்பு ஏற்படுகிறது” என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குறிப்பிடுகிறார். புலிகள் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு வன உயிரினங்கள் அழிந்துவருவது உண்மைதான். ஆனால், புலிகள் அழிவதற்கு பழங்குடிகள்தான் காரணம் என்று கூறுவதுதான் மகா மோசடி. உண்மையில் புலிகளை பிரிட்டிஷ் காலத்தில் வேட்டையாடி அழித்தவர்கள் மன்னர்களும், ஜமீன்தார்களும், பிரிட்டிஷ் அதிகாரிகளும்தான். யானைத் தந்தம், புலித்தோல் போன்றவை இன்றளவும் கடத்தப்படுவதன் பின்னணியில் பெரிய, பெரிய முதலாளிகளும், அரசியல்வாதிகளும், வனத்துறையினரும்தான் இருக்கின்றனர் என்பது ‘ஊரறிந்த இரகசியம்’.
இன்னும் சொல்லப்போனால் புலிகளையும், வன விலங்குகளையும், வனத் தாவரங்களையும் பாதுகாப்பவர்கள் பழங்குடிகள்தான். காட்டைத் தெய்வமாக வழிபடும் அவர்கள் காட்டை அழிப்பதைப் பற்றி கனவிலும்கூட சிந்திப்பதில்லை. ‘இலாபத்தையே’ கடவுளாக வழிபடும் முதலாளிகள்தான் காட்டை அழித்து, விலங்குகளின் வழித்தடங்களை மறித்து பெரும்பெரும் தோட்டங்களும், தொழிற்சாலைகளும், உணவு விடுதிகளும், ‘ரிசார்ட்டு’களும் அமைத்து வனவிலங்குகள் அழிவதற்குக் காரணமாக உள்ளனர்.
எல்லாவற்றும் காரணமான இந்த உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளும் அவர்களிடம் நிதி பெற்று இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் ‘புலிகளின் பாதுகாவலர்களாக’ வேடம் போடுகிறார்கள். ‘டபிள்யூ.டபிள்யூ.எஃப்’ (the WorldWide Fund for nature - WWF) போன்ற சர்வதேச ‘சூழல் பாதுகாப்பு’ தொண்டு நிறுவனங்களும், ‘ஓசை’ போன்ற உள்ளூர் நிறுவனங்களும் இந்த பெரு முதலாளிகளுக்கு சேவை செய்கின்றன.
காடுகளைத் தனியார்மயமாக்கும் திட்டம்
புலிகள் மீதான இவர்களின் பொய்யான கரிசனத்திற்குப் பின்னால் ஒரு சர்வதேசத் திட்டம் உள்ளது. அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காக என்றுகூறி மக்களை வெளியேற்றிவிட்டு, காட்டைத் தனியார்மயமாக்கி, சுலபமாகக் கொள்ளையடிப்பதே அத்திட்டம்.மேற்குத்தொடர்ச்சி மலையின் கனிம வளங்களை சுரண்டுவது இவர்களது ஒரு நோக்கம். இன்னொரு புறம், உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு பெருமுதலாளி காட்டைப் பாதுகாத்து மரம் வளர்த்தால், இன்னொருபுறம் அவன் சூழலைக் கெடுக்கும் பெரிய தொழிற்சாலைகளைக் கட்டிக்கொள்ள அனுமதி (Carbon Permit) கிடைக்கும். இதனை வைத்து பெரு நிறுவனங்கள் மிகப்பெரிய சூதாட்டம் நடத்தி பணம் கொழிக்கின்றன. தமிழகத்தில் சூழல் பாதுகாப்புக்கு என்று ஜப்பான் போன்ற நாடுகள் செய்யும் ‘உதவிகள்’ எல்லாம் இந்நோக்கத்தில்தான் நடைபெறுகின்றன.
வனம் - யாருக்குச் சொந்தம்?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வனத்திலேயே வாழ்ந்துவரும் பழங்குடிகளும், பலநூறு ஆண்டுகளாக குடியிருந்துவரும் இதர மலைவாழ் மக்களும் வரலாறு முழுவதும் மாறி மாறி வந்த பல அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இன்று சத்தியமங்கலம் மலைக்காடுகளில் இருளர் (ஊராளி, சோளகர்), குருமர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடிகளும், லிங்காயத், படுகா உள்ளிட்ட மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நீர்ப்பாசனமுறை ஏதுமின்றி மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். பழங்குடி மக்கள் கூடுதலாக வனத்திலிருந்து கிடைக்கும் நெல்லிக்காய், சீமாறு புல் உள்ளிட்ட சிறு வனப் பொருட்களைச் சேகரித்து அதில் கிடைக்கும் வருவாயில் உயிர் வாழ்கின்றனர். பழங்குடி மக்கள் பலருக்கு இன்றளவும் அவர்களுக்குச் சொந்தமான நிலத்திற்கான முறையான ஆவணங்களை அரசு வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
காட்டு வளத்தைச் சுரண்டுவதற்காக, மரங்களை வெட்டிக் கடத்துவதற்காக, காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் ‘வனத்துறையை’ ஏற்படுத்தியது. 1947 இல் ‘போலி சுதந்திர நாடகம்’ அரங்கேறிய பிறகு ஆட்சிக்கு வந்த ‘போலி சுதேசி இந்திய அரசு’ காடு முழுமையும் அரசுக்கே சொந்தம் என்றது. இந்த அறிவிப்பால் அத்தனை ஆண்டுகாலம் வன நிலங்களை பயன்படுத்தி, பாதுகாத்து வந்த அந்நிலங்களின் சொந்தக்காரர்கள் ‘ஆக்கிரமிப்பாளர்களாக’ சித்தரிக்கப்பட்டனர். அவர்களுடைய நில உரிமை மறுக்கப்பட்டது. பழங்குடி - மலைவாழ் மக்களின் நிலங்களை ஏமாற்றி அபகரித்து பெருமுதலாளிகள் தேயிலை, காபி, இரப்பர் தோட்டங்களை ஏற்படுத்தினர்.
இன்றைய நாள் வரையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்காக இந்தியாவில் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். மொத்தக் காட்டையும் சொந்தம் கொண்டாடும் மிகப்பெரிய ஜமீன்தார் போல் வனத்துறை செயல்பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் போராட்டத்தின் விளைவாக, 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வன உரிமைச் சட்டமானது பழங்குடிகள் மற்றும் இதர மலைவாழ் மக்களின் வன உரிமையை அங்கீகரிக்கிறது. இச்சட்டத்தை முடக்குவதற்கும் ஓய்வுபெற்ற வனஅதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
நம் வாழ்வையும் நம் வனத்தையும் பாதுகாக்கப் போராடுவோம்!
பழங்குடி - மலைவாழ் மக்கள் காட்டின் சுற்றுச்சூழலில் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள். பழங்குடிகளை வெளியேற்றிவிட்ட காடுகளின் சூழல் சமநிலை கெட்டு காடுகள் அழிந்துபோனதற்கு ஏராளமான வரலாற்று உதாரணங்களைக் காட்ட முடியும். பழங்குடிகள் வெளியேற்றப்பட்டு, காடுகள் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு கொள்ளைக் களமாய் ஆனால் காடு அழியும்; காடு அழிந்தால், மழைவளம் குன்றிப்போகும்; ஆறுகள் வற்றிப்போகும்; விவசாயம் அழியும்; நாடே அழியும். புலிகள் காப்பகத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது பழங்குடி - மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் மட்டுமல்ல, காட்டையும், நாட்டையும் காக்கும் போராட்டம் ஆகும்.
இன்று வட இந்தியாவில் பழங்குடி மக்கள் தங்களையும், வனத்தையும் பெரு முதலாளிகளிடமிருந்து காப்பதற்கான போராட்டத்தில் உச்சநிலையை அடைந்துள்ளனர். அவர்களை மீறி எந்த உலக முதலாளியும் காட்டிற்குள் நுழைய முடியாது என்ற நிலையை தங்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். ‘புலிகள் காப்பகம்’ போன்ற எத்தனையோ திட்டங்களை, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் எத்தனையோ ஒப்பந்தங்களை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போராட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
காடும், காட்டுவளமும் பழங்குடி - மலைவாழ் மக்களுக்கே சொந்தம்!
இந்திய அரசே!
• சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து புலிகள் காப்பகத் திட்டங்களையும் கைவிடு! வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்து!
தமிழக அரசே!
• இந்திய அரசின் புலிகள் காப்பகத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தராதே! அத்திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!
தொழிலாளர்களே! விவசாயிகளே! சிறு வியாரிகளே! மாணவர்களே! அறிவாளர்களே!
• பழங்குடிகள், மலைவாழ் மக்களுடன் இணைந்து காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடுவோம்!
நாள்: 12.03.13
மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம்
தொடர்புக்கு: 94433 49800, 91501 92047
நீங்கள் பழங்குடியினர் மற்றும் மலை வாழ் மக்கள் என்று யாரை சொல்கிறீர்கள் ?இயக்கர்கலையா ?நாகர்கலையா அல்லது தோடர்கள யா ? மேற்குத்தொடர்ச் சி மலையில் கடந்த 2 நூற்றாண்டுகளில் குடியேறியவர்களை எந்தக்கணக்கில் சேர்ப்பது ?அவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரங்களை அறிவோமா ?
உதாரணமாக பவானியிலிருந்து 20 கி .மீ தொலைவில் உள்ள தென்குமரகடா மலைக்கிராமம் அமைந்திருக்கும் பகுதி கிழக்குதொடர்சிய ும் மேற்க்குத்தொடர் ச்சியும் இணையும் புள்ளியாய் அருமையான சமவெளி பகுதியுடன் ஆப்ரிக்காவின் நாரங்கோரவைப்போல காட்டுயிர்களக்க ு அருமையான வாழ்விட பிரதேசமாக திகழ்ந்தது ,ஆனால் 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்த ின் கீழ் 100 வருடம் குத்தகைக்கு விடப்பட்ட அந்த சமவெளி தற்பொழுது பணப்பயிர்களை விளைவிக்கும் பூமியாய் மாற்றப்பட்டு காட்டுயிர்களின் வாழ்விடம் சிதைக்கப்பட்டிர ுக்கின்றது .இப்பொழுது அங்கு வசிக்கும் மக்கள்தொகையினர் 2000த்திற்கும் மேல் ..இவர்கள் பழங்குடியினரா ?மலைவாழ் மக்களா ? சரி இது போகட்டும் ,சக்தியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டின் மத்திய பகுதியில் போலிசார்களுக்கு பயிற்சி குடுக்கப்படுகிற தே அதற்கெதிராக ஒற்றைக்குரல் இல்லையே ?தொண்டு நிறுவனங்கள் பெரு முதலாளிகளுக்கு தொண்டுசெய்வது உன்மைதான் ஆனால் நாம் அவர்களையும் எதிர்க்கவேண்டும ் அத்துமீறி குடியேறி வன சமன்பாட்டை கேடுப்பவர்களையு ம் பற்றியும் சிந்திக்கவேண்டு ம் ...நன்றி
ஆங்கிலேயர் துப்பாக்கி கொண்டு வந்து வேட்டையாட ஆரம்பித்த போது தான் வன விலங்குகளுக்கு கேடு காலம் ஆரம்பித்தது என்ற கருத்து ஒன்று உண்டு. இக்கருத்து உண்மையில்லை, ஆங்கிலேயர் இங்கு ஆங்கில மருத்துவத்தை கொண்டு வந்து நமக்கு கொடுத்த பிறகு தான், மக்கள் தொகை பெருகி வனவிலங்குகளுக்க ு கேடுகாலம் ஆரம்பித்தது, காடு அழிந்தது, சுற்றுச்சூழல் கெட்டழிந்தது, இயற்கைக்கு எதிரான அரசியல் பேச்சுக்கள் அதிகமாகி, புலிகளும், யானைகளும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற ன.
முல்லைப் பெரியாறு அருகில், பாதுகாக்கபட்ட காட்டுக்குள் கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சித்தது, அங்கே ஆதிவாசிகள் இல்லையா? முல்லைப்பெரியாற ு அணைப் பற்றி மூச்சு விட தயாராக இல்லாத மனித உரிமை பேசும் இவர்கள், புலிகள் காப்பகத்திட்டதி ற்கு எதிராக மக்கள் பாதிக்கப்படுகிற ார்கள், மனித உரிமை மீறப்படுகிறது, குறிப்பாக ஆதிவாசிகளை அடக்கி, அடிமைகளாக ஆக்க அரசு முயற்சிக்கிறது என ஆர்ப்பரித்து கருத்து கூறும் இவர்கள், தமிழகத்தில் தென் மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, மக்களும் பாதிக்கப்படுகிற ார்களே- எங்கே போயிற்று மனித உரிமை? கேரளா அரசை எதிர்த்து குரல் எழுப்ப தயங்குவது ஏன்?
மத்திய அரசை, உச்ச நீதிமன்றத்தை மீறும், தகாத செயலை செய்யும் கேரளா அரசு, வனத்தை-வனத்தோடு சேர்த்து மக்களுக்கும் கேடு நினைத்து, காரிய மாற்றும் அநீதியை கண்டும் காணாமல் இருந்து கொண்டு, புலிகள் காப்பகத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இவர்கள் அரசியலை- தமிழக, இந்திய மக்கள் உணர வேண்டும். கேரளாவில் நடந்தால் முற்போக்கு, தமிழகத்தில் நடந்தால் மனித உரிமை மீறல், இன்னும் தெளிவாக சொன்னால் முதுமலை வன பகுதியில், காடுகள் அழிக்கப்பட்டு, தனியார் தோட்டங்கள் உருவாகி ஏகபோக சொத்துக்களாக இருப்பது இவர்கள் வழிவந்தவர்கள் ஆதிக்கத்திலே தான் - புலிகள் அழிந்தாலும்,காட ுகள் அழிந்தாலும், தங்கள் சொத்துக்கள் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக ஆதிவாசிகளை கேடயமாக பயன்படுத்தி, ஆதிவாசிகளின் நலனுக்கு எதிரானதாக கூறி, ஆதிவாசிகளுக்காக கண்ணீர்விடும் இவர்கள், ஆதிவாசிகளின் நலன்களில் சிறுதுரும்பை கூட அசைக்காதவர்கள், ஆதிவாசிகளின் நல்வாழ்விற்காக எதையும் செய்யாதவர்கள், இவர்கள் பேசும் மனித உரிமையை எப்படி நம்புவது?
அணைகள் கட்டுதல், காடழிப்பு, போன்ற இயற்கைக்கு எதிரான எந்த திட்டமும் இல்லாமல், இயற்கையை பாதுகாக்கும் திட்டத்தோடு, சில நல்ல முயற்சிகளை தமிழகப் பகுதியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்த துவங்கினால், இதை எதிர்க்கும் அனைவரும் கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அணைத் திட்டங்களைத் தடுத்து காடுகளுக்கும், அதை சார்ந்து இருக்கும் ஆதிவாசி மக்களுக்கும் ஆதரவாக போராட்டங்கள் நடத்த தயாரா? எல்லா மாநிலங்களும் இந்தியாவில் தானே இருக்கிறது? அங்கெல்லாம் பொருளாதார நலன் என்ற கண்ணோட்டத்தில் வாயடைத்து கிடக்கிறார்களே, இந்த மனித உரிமை போராளிகள்?
புலிகள் காப்பகத் திட்டத்திற்கு பிரிட்டீஷ் அரசு உதாரணம் தேவையில்லை, கேரளா சபரிமலைக் காடுகளே சிறந்த உதாரணம்- புலியிடம் பாசத்தோடு பழகி, புலிமேல் அமர்ந்து பவனி வந்த அய்யப்பன் இருந்த இடம், புலிகள் வாழ்ந்த காடு. புலிகள் இருந்த சபரிமலையில், அய்யப்பன் கோயில் உருவாகிய பிறகு, புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன, அழிந்து போயின, ஆதிவாசிகளை அகற்றினர், விரட்டினர், இன்று அங்கு தீபம் ஏற்றுவதற்கு மட்டும் தான் ஆதிவாசிகளை நாம் பயன்படுத்துகிறோ ம். நமக்கு புலிகளை வழிபடதான் தெரியும், வாழ வைக்க தெரியாதே? ஆதிவாசி என்றாலே சினிமாவில் வரும் ஆதிவாசிகளைப் போல் ஆரோக்கியமானவன், அழகானவன், அதித்திறமைகளை உடையவன் என்று இன்னமும் நம்பி கொண்டிருக்கும் நாம், ஆதிவாசிகள் கடந்த சில நூற்றாண்டுகளில் நம் சாதிய வன்கொடுமை தாங்காமல், ஊரை விட்டு காட்டுக்குள் குடியேறியவன், மனித ஏற்றத்தாழ்வு கொடுமைகளில் இருந்து தப்பிப்பிழைக்க போனவன், இன்று உடலாலும்,மனதாலு ம் பலம்குன்றி, பலகீனமானவனாக இருப்பதது நமக்கு தெரியாதே?இயற்கை பற்றி எந்த சிந்தனையும், அறிவும் இல்லாத இக்கட்டுரை ஆசிரியர் மனுவேல் அவர்கள் கேரளாவில் உள்ள சபரிமலைப் பற்றி கூறி இருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும் . நாம் நடந்ததைப் படிப்பினையாக கொண்டு கூறுகிறோம். சபரிமலையில் நடந்ததைப் போல் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தில் நடக்க வேண்டுமா? சாலை விரிவாக்கத்திற் காக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைப் போல, பொதுநலன், நாட்டுநலன், எதிர்கால மனிதகுல நலன் கருதி புலிகளை காப்பதற்காக புலிகள் வாழும் காட்டிலுள்ள மனித ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆதிவாசிகளை மனித நேயத்தோடு காப்பாற்ற வேண்டும்..
மனித உரிமை, மக்கள் உரிமை என்று பேசும் உரிமைவாதிகள், எந்த மனித உரிமையை பற்றி பேசுகிறார்கள் என தெரியவில்லை? இவர்களுக்கு பாதிக்கப்படும் மனிதன் எந்த சாதி, எந்த மதம், எந்த மொழி என்ற வேறுபாடுகளுக்கு தக்க குரல் எழுப்புவதும், சக மனிதன் பாதிக்கப்படும் பொழுது ஒரே குரலில், ஒத்த கருத்துடன், ஓர் அணியில் திரண்டு போராடுவார்களா? நம் நாட்டை பொறுத்தவரை- யில் மனித உரிமைகள் இல்லை, சாதி,மதம்,மொழி வாரியாக சார்புடன் பேசும் மனித உரிமைவாதிகள் தான் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இயற்கைக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும், தங்கள் நிலைபாட்டை அறியாமல், உயர்ந்த சிந்தனை இல்லாமல், மனித உரிமை பேசும் ஆதிவாசிகளின் காதலர்கள் போல் நாடகமாடி, புலிகள் காப்பக திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை கைவிட வேண்டும்.
முதலில் குள்ளநரியை கேவலப்படுத்தி தலைப்பு வைத்திருப்பதைப் பார்த்தாலே, “உள்ளூர் அரசியலில் செல்லாக் காசாகி, வேறு வழியில்லாமல் இயற்கை, இயற்கை என கதறுகிறார்களே என்று இயற்கைக்குள் மூக்கை நுழைத்தவர்கள், பத்தாம் பசலி தனமாக எழுதுவதை போல” என்ற ஒரு கருத்து உண்டு அதை போல் மனுவேல் தலைப்பை பார்த்தவுடன் அக்கருத்து நம்பதகுந்ததாக இருக்கிறது. இவர் கட்டுரையில் பல செய்திகள் தவறானவை, படுகர்கள் ஆதிவாசிகள் என்று யார் சொன்னது? படுகரை பார்த்திருக்கிற ாரா? லிங்காயத் யார்? தமிழகத்தில் எத்தனை ஆதிவாசிகள் பட்டியலில் உள்ளனர்? முதலில் ஆதிவாசி என்றால் யார்? வரிக்கு வரி மறுக்க முடியும் ஆனால் அந்தோ பரிதாபம் கீற்று ஆசிரியர் மட்டும் மல்ல இதை படிப்பவர்கள் பெரும்பாலோருக்க ு எது உண்மை என்று தெரியாதே? இயற்கையை பற்றி அறிந்தவர்கள் சென்னையில் இருக்கிறார்கள் தேடி பிடியுங்கள், தயவுசெய்து மனுவேலை போன்றவர்களை அல்ல.
பாம்பை தெய்வமாக,இந்துக ்கள் மட்டும் அல்ல வேறு சில மதத்தை சார்ந்தவர்களும் வழிப்படுகிறார்க ள்,அதேசமயம் பாம்பை எதிர்கொண்டால் எமனாக மாறுகிறார்களே ஏன்? பாம்பு அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் ஏற்றப்பட்டு வருகிறது. இருக்கும் போது அழிப்பதும், அழிந்தபிறகு கண்ணீர் விடுவதும் நம் பண்பாடு. இயற்கை பற்றியும் உயிரினங்களை பற்றியும் நம் பேச்சுகளிலும், வார்த்தைகளிலும் , இழிவு படுத்தாத வார்த்தைகள் உண்டா? பிறகு எப்படி நம்மில் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மனிதர்களான ஆதிவாசிகள்மேல் மட்டும் நலெண்ணம் இருக்க முடியும்? இரண்டாயிரம் வருடம் என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஊருக்குள் இருக்கும் மனிதனுடைய வரலாறே தடுமாற்றமாக இருக்கும் பொழுது, நம் ஆதிவாசிகளை பற்றி சரியான வரலாறு எங்கே இருக்கிறது?
“சோலூர் மட்டம் பகுதியில் எங்களை ஏமாற்றி பட்டா நிலங்களை புடுங்கி, எங்களை அடிமை ஆக்கியவர்கள் படுகர்கள், இப்போ படுகர்கள் எல்லாம் வசதியானவர்களாக, பணக்காரர்களாக இருக்கிறார்கள்” - என ஆதிவாசி சங்க தலைவர் சந்திரன், ஒரு பேட்டியில் குற்றம்சாட்டுகி றார். ஆதிவாசிகளை ஏமாற்றியது புலிகள் அல்ல, ஆனால் புலிகளுக்கு எதிராக பேசும் அனைவரும் ஆதிவாசிகளுக்காக தான் இந்த போராட்டம் என மனுவேல் உட்பட பலரும் கருத்து கூறுகின்றனர். அதிலும் மனுவேல் படுகர்களை ஆதிவாசி என்று கூறுகிறார், கருத்துப்பிழையா ? அறியாமையா? ஆதிவாசிகளுக்கு ஆதரவாகப் பேசும் இவர்கள், எதிர்காலத்தில் ஆதிவாசிகளை ஏமாற்றி, கானகத்தையும், கானக செல்வத்தையும், இவர்கள் வழிவந்தவர்கள் அபகரிக்க மாட்டார்கள் என யாரும் உத்தரவாதம் தரமுடியுமா? “எதிர்காலப் பணக்காரர்களுக்க ு பயன்பட தான் இந்த காடு”-என ஆதிவாசித் தலைவர் சந்திரன் கூறுவதைப் போல – புலிகள் காப்பக திட்ட எதிர்ப்பு என்பதும் அதை நோக்கி தான் செல்கிறது, ஆதிவாசிகளின் நலனுக்காக என்று அறியாமையில் பேசும் இவர்கள், ஆதிவாசிகளின் நலத்திற்கும், ஊட்ட சத்திற்கும், வளமான வாழ்விற்கும் உதவிகள் செய்ய முதலில் தயாரா? புலிகள் காப்பகம் வேண்டும் என்கிற இயற்கைவாதிகள் தான், ஆதிவாசிகளுக்கு முழுமையாக சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை, புலிகள் இல்லாத, காடுகள் இல்லாத மற்ற மாவட்ட மக்கள், அறிவு நாணயத்தோடு உணர வேண்டும், சிந்திக்கவும் வேண்டுகிறோம்.
முதலில், படுகர்கள் ஆதிவாசிகள் என்று யார் சொன்னது? என்று கேட்டிருக்கிறார ். நானும் அதையேதான் அவரிடம் கேட்கிறேன். யார் சொன்னது? பழங்குடிகளும் சொல்லவில்லை. படுகர்களும் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. அவர் கட்டுரையை மீண்டும் ஒருமுறை படிப்பது நல்லது.
நாம் பழங்குடிகள் என்று அட்டவணைப் பழங்குடிகளைத்தா ன் சொல்கிறோம். மலைவாழ் மக்கள் என்று நாம் குறிப்பிடும் படுகா, லிங்காயத் போன்றோர் பிற்படுத்தப்பட் ட சாதிகளைச் சேர்ந்தவர்களே. இது அனைவரும் அறிந்ததே. வன உரிமைச் சட்டம் அங்கீகரிக்கும் பாரம்பரிய வனவாழ்வோர் (Traditional Forest Dwellers) என்ற பிரிவில் வரும் இவர்கள், பல தலைமுறைகளாக அங்கு வாழும் இவர்கள், அங்கு வாழ்வதற்கான, வெளியேற்றப்படாம ல் இருப்பதற்கான உரிமையை இயல்பாகவே பெற்றுள்ளனர், வன உரிமைச் சட்டப்படியும் பெற்றுள்ளனர்.
பழங்குடிகளிடம் நிலங்களை முன்காலத்தில் இவர்கள் ஏமாற்றியோ, குறைந்த விலைகொடுத்தோ வாங்கிக் கொண்டனர் என்பது உண்மையே. ஆனால், அது அங்கு மட்டுமல்ல... சமவெளிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிற்படுத்தப்பட் ட சாதியினர் இதேபோல் நிலம் வாங்கியதும் உண்மைதான். இது நாடு முழுவ் நடந்ததுதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற விவசாய நிலங்களை அபகரிக்கும் திட்டங்கள் வரும்போது அனைத்து சமூகத்தினரும் இணைந்து போராடுவதில்லையா ? அதேபோல் அங்குள்ள பழங்குடிகளும், (இதர) மலைவாழ் மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புலிகள் காப்பகத் திட்டத்தை எதிர்த்துப் போராட தயாராய் உள்ளனர். இணைந்து போராடியும் உள்ளனர்.
போராடும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி பிரித்தாளும் ஆங்கிலேயர் காலத்து உத்திதான். உங்களுடையது AMSA
நீங்கள் அதற்குப் போராடவில்லை... இதற்குக் குரல் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். ஒவ்வொரு விசயத்திலும் உங்களுடைய நிலைப்பாடு இதில் என்ன? இதில் என்ன? என்று கேட்பது விவாதிப்பது சரியானது. நாங்கள் யார்? எங்கெங்கு என்னென்ன போராட்டங்கள், இயக்கங்கள் நடத்திக்கொண்டிர ுக்கிறோம் என்று எதுவும் தெரியாமல் நீங்கள் இவ்வளவு நீளமாக எழுதியிருக்கும் பதிவைப் பற்றி நான் என்ன கருத்து சொல்ல? நீங்கள் எதையோ, யாரையோ நினைத்துக் கொண்டு இப்படிப் பேசியிருக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய மக்கள் விரோதக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் கேள்வி கேட்கப்பட்ட ஆத்திரத்தில் இப்படி எழுதியிருக்க வேண்டும். என்னவோ... ஆனால் எனக்கு சில கேள்விகள் உண்டு உங்களிடம். நீங்கள் ஏன் மக்கள் வெளியேற்றப்படுவ தைப் பற்றி ஒரு கருத்தும் சொல்லவில்லை. நாங்கள் மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிர ுந்து என்ன காரணம் சொல்லப்பட்டு வெளியேற்றப்பட்ட ாலும் அதை எதிர்க்கிறோம். நீங்கள் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக மக்கள் வெளியேற்றப்படுவ தை ஆதரிக்கிறீர்களா ? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? தெளிவுபடுத்தவும ்.
கார்பன் வணிகம், காடுகள் தனியார்மயமாக்கல ் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் என்ன?
பின்வரும் கட்டுரை மற்றும் நூலைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்... 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகமும் (www.keetru.com/.../) 2. Conservation Refugees by Mark Dowie
RSS feed for comments to this post