இன்னும்
எரிந்து கொண்டுள்ளது
அந்தத் ‘தீ’
அணைக்கப் படாமலேயே
இரண்டாயிரத்து ஐந்நூறு
ஆண்டுகளுக்கு முன்
மூட்டப் பட்டதாகச்
சொல்கின்றார்கள்
புலவர்கள் கவிஞர்கள்
அறிஞர்கள் தலைவர்கள்
புரட்சியாளர்கள்
என்று பெரிய படையே
அதை அணைக்க
முற்பட்டும்
எரிந்து கொண்டுதான்
உள்ளது அந்தத் ‘தீ’
இமயம் தொடங்கி
குமரி வரை
பற்றி எரிகின்ற
அந்தத் ‘தீ’யால்
வெந்து மடிந்தவர்
ஆயிரம் ஆயிரம்
சுதந்தரத்துக்குப் பின்னால்
அந்தத் ‘தீ’ அணைக்கப்பட்டு
சமத்துவத் தென்றல்
நம் வீட்டுச்
சாளரங்களை
எட்டிப் பார்க்கும்
என்றார்கள்
சுதந்தரத்துக்குப் பின்தான்
முதுகுளத்தூர் வெண்மணி
என்று அந்தத் ‘தீ’
தன் கோர முகத்தைக்
காட்டியது கொடுமையாக
அந்தத் ‘தீ’யின்
ருத்ர தாண்டவத்தைக்
கண்டு களிக்கவென்றே
சனாதனம் தாளமிசைக்கின்றது
‘பூரி’ மடம்
போதிக்கின்றது
அந்தத் ‘தீ’யை
அணைக்கவே கூடாதென்று
காஞ்சியின்
தெய்வத்தின் குரல்
சொல்கின்றது
பிரம்மன் வைத்த ‘தீ’யை
அணைக்க யாருக்கும்
உரிமையில்லை என்று.
பெரியாரின் பகுத்தறிவையும்
அம்பேத்கரின் அறிவாயுதத்தையும்
நாம் கரங்களில்
ஏந்தி
அணைத்திடத் துணிவோம்
அந்தத் ‘தீ’யை
ஆம்! தோழர்களே
சாதித் ‘தீ’யை!
அணைத்திட வாரீர் அந்தத் ‘தீ’யை!
- விவரங்கள்
- வெற்றியூர் வேலு சதானந்தம்
- பிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2014
More articles by வெற்றியூர் வேலு சதானந்தம்
- பயணங்கள் தந்த அனுபவங்கள் (19 நவ 2015)
- குவலயம் நடுங்கப் புறப்படு! (23 ஜூலை 2014)
- கடவுள் எங்கே தொலைந்து போனார்? (11 அக் 2013)
- எம்மதமும் சம்மதமில்லை (28 ஆக 2013)
- அறியாமையைத் தூளாக்க அறிவியலை வாளாக்கு! (17 ஜூன் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.