எழுகதிர் எழுந்த பின்பும்

இன்னுமா உறக்கம் - தம்பி

இமை திறந்து எழுந்தால்

இருளெல்லாம் பயந்து ஓடும்!

மூடரின் பிடியில் உன்னோடு

மூச்சுவிடத் திணறித் தவிக்கிறது - தம்பி

கூடாத அறியாமை இருளில்

கொள்கை யற்றுக் கிடக்கிறது!

கடவுளின் பெயரால் இங்கே

கயமையின் வணிகம் நடக்கிறது - தம்பி

உடைமைச் சமூகத்தின் பிடியில்

உழைப்பவர் வாழ்க்கை கழிகிறது!

கூட்டுப் புழுவல்ல நானென்று

குவலயம் நடுங்கப் புறப்படு - தம்பி

நாட்டு மக்கள் விழித்தெழ

நாளைநீஅணிவகுத்திடு!

Pin It