எழுகதிர் எழுந்த பின்பும்
இன்னுமா உறக்கம் - தம்பி
இமை திறந்து எழுந்தால்
இருளெல்லாம் பயந்து ஓடும்!
மூடரின் பிடியில் உன்னோடு
மூச்சுவிடத் திணறித் தவிக்கிறது - தம்பி
கூடாத அறியாமை இருளில்
கொள்கை யற்றுக் கிடக்கிறது!
கடவுளின் பெயரால் இங்கே
கயமையின் வணிகம் நடக்கிறது - தம்பி
உடைமைச் சமூகத்தின் பிடியில்
உழைப்பவர் வாழ்க்கை கழிகிறது!
கூட்டுப் புழுவல்ல நானென்று
குவலயம் நடுங்கப் புறப்படு - தம்பி
நாட்டு மக்கள் விழித்தெழ
நாளைநீஅணிவகுத்திடு!