கோவில் பிரகாரத்தில்

குத்து விளக்கெதிரில்

குங்குமப் பொட்டோடு

வந்த விஜியா?

 

சாவில் முடிவு என

நாள்தோறும் சொன்ன

விடுதியயதிர் சுடுகாட்டுத் தீயா?

 

அல்லால்

அன்று நெடில் காரில் சென்றவன்

சாலைச் சேற்றை என் மீதிறைத்த

திமிரா?

 

பனியில் நனைந்து இரவில் மலர்ந்து

சுகந்தம் பரப்பும் மலரா?

 

இல்லை

கலியில் தினம் கருகிச் சாகும்

முகமற்ற என் முப்பது கோடி உறவா?

 

நேரில்

எது என்னைக் கவிசொல்லச்

சொன்னதன்று?

என் கவிமூலம் எதுவெனத்

தினம் தேடுகிறேன் நெடுந்தூரம் சென்று

 

-தேவக்கோட்டை வா.மூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.