நான் இருந்து
விட்டுச்சென்ற வீடு
எனக்கு மறுபடியும் வாய்ப்பதில்லை.
நெருடல்களும் புழுக்கங்களுமாய்
பிதுக்கம் கொண்டதன் பிற்பாடு
ஒரு போதும் என்னை அது
ஏற்றுக்கொள்வதில்லை
அவ்வப்போது மையம் கொண்ட
தென்றல் திட்டுகள் எண்ணங்களில் மேலோங்கும்
என்னைச் சிறைகொண்டு
உள்புதைக்க முயன்றதன் பிறகு
என் சிறகசைப்பில் அடைப்பட்டதோ
என்னை மீட்டும் தன்னிடம்
கொள்ள விரும்புவதில்லை
அன்று
படிப்பதற்கென
விடுதிக்குச் சென்றதன் பிறகு
என்வீடு விடுமுறைக்கால ஓய்விடமாயிற்று
திருமணத்தின் பிறகு
என் அம்மாவீடாயிற்று.
இன்று
வேலையின் பொருட்டு
வேறிடம் பெயர்ந்து
மீளும் சமயம்
என் வீடு மற்றொருவர் வசம்.
சுற்றிலும் நிறைந்துள்ள
பொருட்களின் மௌனப் பேச்சில்
முடிவெடுத்தேன்
இனி
வீட்டை வெறுப்பதில்லை
நேசிப்பதுமில்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்