இணக்கமான சூழலொன்றில்
உருவாகிவிட்டது உன்சிருஷ்டி
இருளறையில் கருமைக்கோளமாய்த்
திரண்டிருக்கிறாய்
மிகமென்மையாகத் தான் உணரவேண்டும் உன்னை
ஆனால்
என் உடலைச் சிறுகடுகெனப் புரட்டி எறிகிறாய்.
திடுமெனப்
பூரணத்துவம் பெற்று
புகைப்படலமாகிறாய் எங்களுள்
வரையறுக்கப்பட்ட ஆண்டுக்கணக்கில்
மறைபொருளாகிறாய்
வழியற்று ரத்தமும் சதையுமாக உன்னை வெளியேற்ற
எழுந்த படபடப்பு என்னுள் அடங்க
எவ்வித எதிர்ப்பு மற்றுக்
கரையும்
உன் மெளனத்துடன்
என் சம்மதமும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை