ஆழம் சென்றுவிட்டவனின் நினைவுக் குறிப்பு
தொலைதூரம் அலைந்து போய்விட்ட
அவளின் இரவுகள் உனதாகிவிட்டன
மென்மொழியின் வாசனையை
விழுங்கிவிட்ட உன் குரல்
சாத்தியபடியே இருக்கிறது
மீளவியலாது
தென்றலின் வனத்துக்குள்
அழைத்துச் சென்றுவிட்ட
அவளின் பாடல் குவிந்துவிட்ட
உன் மண்டபம் அமைதியாகிறது
கிளிகள் உறங்கும் பொழுதொன்றில்
எளிமையாய்ச் செல்கிறாய்
பளிங்கு மாளிகையின்
வாயிலுக்குள்.
குளியல் வெளி
என் பாறையை வளைத்திருந்தது
நீர் திரட்சி
முங்கும் முன் குலுங்கின்
சதைக்கூடு
மின்னும் நீர் கண்ணாடியில்
பதிந்திருந்த சூரியன்
குன்றுகளென மதர்தெழுந்த மேகங்கள்
மறுகறையை துளியென காட்டும் தூரம்
வர்ண ஜாலமிடும்
காட்சி வெளியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அவர்கள்யென்
அம்மணத்தை பகடியாக்குகிறார்கள்.
குறிப்புகள் எழுதுபவன்
உறங்குதவற்கான உத்தேசம் வருமா
குறிப்புகள் எழுதுபவனுக்கு
சரியான குறிகளில் விழுகிறது பழுத்த
பழங்கள்
மின்னும் குறிப்புகள் நட்சத்திரமாகிறது
வானம் முழுக்க குறிப்புகளோ குறிப்புகள்
நட்சத்திரங்களின் வீதியில்
கழுகுகளே பறக்கிறது
கழுகுகளின் பிடியிலோ சிறு குஞ்சுகளின்
அலறல்கள்
ஓலங்களின் சாலைகளில் ஆந்தைகளே
விழித்திருக்க
குறித்துத்தானாக வேண்டும் குறிப்புகளை
குறிப்புகள் தீரவும் போவதில்லை
மரங்களுக்கு செவியும் கேட்பதில்லை
தொடரும் பயணத்தில் இறுதிகளும்
தெரிவதில்லை
இறுதிகள் என்பதும் நிரந்தரமாவதில்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்