பாதம் பாவாமல் எச்சரிக்கையாக
வந்தால் உணரலாம்
எல்லா இடங்களும் மலரின் சாட்சியங்களே
அரும்பும் மொட்டுகள் இதழ்விரியும்
விரிந்த நேரத்தில் தடைபடும் கூம்பல்கள்
என வாசம் விரியும்
வீடுகளின் தோற்றங்களிலும்
எதிர்ப்படும் முகங்களிலும்
மிதக்கும் தாவும் மலர்களென
பறவைகள் விலங்குகள்
முகிழ்க்கும் தூரத்து மலைகள்
பச்சைப் பூச்செண்டுகளாய் மரங்கள்
பெருமலரொன்றின்
ததும்பும் தேனூற்றில்
மிதக்கும் மகரந்தம் நானும்.
Pin It