பாதம் பாவாமல் எச்சரிக்கையாக
வந்தால் உணரலாம்
எல்லா இடங்களும் மலரின் சாட்சியங்களே
அரும்பும் மொட்டுகள் இதழ்விரியும்
விரிந்த நேரத்தில் தடைபடும் கூம்பல்கள்
என வாசம் விரியும்
வீடுகளின் தோற்றங்களிலும்
எதிர்ப்படும் முகங்களிலும்
மிதக்கும் தாவும் மலர்களென
பறவைகள் விலங்குகள்
முகிழ்க்கும் தூரத்து மலைகள்
பச்சைப் பூச்செண்டுகளாய் மரங்கள்
பெருமலரொன்றின்
ததும்பும் தேனூற்றில்
மிதக்கும் மகரந்தம் நானும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.