இந்தியாவில், தமிழகத்தில் உழைக்கும் மக்களைக் காலங்காலமாக ஒடுக்கி வந்தவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் தங்கள் உழைப்புத் திறத்தாலோ, அறிவு வன்மையாலோ மேன்மைய டையவில்லை. வருணாசிரம அடிப்படையில் சமயப் பீடங்களையும் அரசுப் பதவிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். அந்தப் பதவிகளை எந்த அறிவுத் தேர்ச்சியுமின்றி வெறும் பிறப்பின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்தனர். இசுலாமியர், மராத்தியர், தெலுங்கர் என எவர் ஆட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து, கூச்ச நாச்சமின்றித் தங்கள் தாய்மொழியைத் தூக்கி எறிந்து அன்னியரின் மொழியில் தேறி ஒடுக்குண்ட உழைக்கும் மக்களை ஏமாற்றி வந்தனர்.

ஒரு தேசத்தில் தங்களின் சொந்த மக்களை ஒடுக்கும் வகுப்பினர் தங்கள் தேசத்தை ஆள வரும் ஆண்டைகளுடன் கைக்கோத்துத் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு தங்கள் ஒடுக்குமுறையைத் தொடர்வது வழக்கமே. அவ்வகையில்தான் பார்ப்பனர்கள் தங்களின் புதிய பிரித்தானிய ஆண்டைகளுடன் கைக்கோத்துக் கொண்டனர். மெகாலே வழியாக முன் வைக்கப்பட்ட ஆங்கில ஆதிக்கத்தை மனமுவந்து ஏற்றுப் பட்டங்களையும் பதவிகளையும் பெற்றனர். பார்ப்பனர்கள் பல நூறாண்டுகளாய்க் கடைப்பிடித்து வந்த பிறப்பின் அடிப் படை யிலான எதிர்வகை இடஒதுக்கீடும் சரி, உருப்போட்டு உருப்போட்டே அடைந்து வந்த படைப்பாற்றலற்ற அறிவுத்திறனும் சரி, அவர்களுக்கு பிரித்தானியர் ஆட்சியிலும் சரி யாகக் கைக்கொடுத்தன.

bernatsha_250பிரித்தானிய அரசைப் பொறுத்த வரை, அவர்களுக்குத் தாங்கள் இட்ட கட்டளைகளை, பதில் பேச்சு பேசாது செவ்வனே செய்து முடிப் பதற்கும், தங்களின் ஆங்கிலத்தை உருப்போட்டுப் படித்துத் தேறுவதற்கும், தங்களிடம் உழைக்கும் மக்களைக் காட்டிக் கொடுப்பதற்கும் சரியான ஆட்கள் தேவைப்பட்டது. இத்தகையோரான பார்ப்பனர்கள் பிரித்தானி யர்களுக்கு விசுவாமாகவே நடந்து கொண்டு அவர்களின் நன் மதிப்பைப் பெற்றார்கள். இதன் மூலம் கிட்டத் தட்ட அனைத்துக் கல்வியிடங் களையும் அரசுப் பணியிடங்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

தமிழகத்தில் வெறும் மூன்று விழுக்காடே இருந்த பார்ப்பனர்கள் இவ்வகையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தங்கள் மக்கள் தொகை விகிதத்துக்கு மிதமிஞ்சிய வகையில் கிட்டத்தட்ட 100 விழுக் காட்டு இடங்களைப் பிறப்பின் அடிப்படையிலான எதிர்வகை இடஒதுக்கீட்டின் பலனாய்க் கைப்பற்றி வந்தனர். இந்தச் சமூகஅநீதிச் செயல் பார்ப்பனர் அல்லா தோரி டையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அவர்கள் தங்கள் சாதிய விகிதத்துக்கு ஏற்ற இடஒதுக்கீட்டைக் கல்வி யிலும் வேலைவாய்ப் பிலும் கேட்டனர். இதற்கு ஆதரவாக இந்தியா வெங்கும் சாகுமகராஜா தொடங்கிப் பல சமூகநீதித் தலைவர்கள் போராடினர். இந்திய அளவில் ஃபுலே, அம்பேத்கர் போன்றோர் போராடினர் என்றால், தமிழகத்தில் இந்தச் சமூகநீதி இடஒதுக்கீட்டுக்காகப் பனகல் அரசர், நடேசனார் எனப் பலரும் போராட முன்வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பெரியார் ஆவார். பெரியார் உள்ளிட் டோர் பார்ப்பனர்களின் வரு ணாசிரம எதிர்வகை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒடுக்கப் பட்டோரின் சனநாயக வெளிப் பாடாக நேர்வகை இட ஒதுக் கீட்டை முன்வைத்தனர்.

கல்வியிலும் வேலை வாய்ப் பிலும் வருணாசிரமச் சூதின் காரணமாக ஒடுக்குண்ட மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட போ தெல்லாம் கொதித்தெழுந்து போராடிய பெரியார் உள்ளிட் டத் சமூகநீதித் தலைவர்கள் ஆங்கு அம் மக்களின் மொழி ஒதுக்கி வைக்கப்பட்ட போது எடுத்த நிலைப்பாடுகளே இன்று வரையிலான மொழிச் சிக் கலுக்கு அடிப்படையாக அமைந்தன என்றால் மிகை யாகாது. இந்தக் கோளாறுக்கு அடிப்படை என்ன?

அதாவது பார்ப்பனர்களின் வருணாசிரமச் சதியில் விளைந்த எதிர்வகை ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்கும் போது அவர் களுக்கு நேரெதிரான நிலைப் பாடு எடுத்து ஒடுக்குண்ட மக்களின் சமூகநீதியை முன்னி றுத்தும் வகையில் நேர்வகை இடஒதுக்கீட்டை முன்னெடுத்த சமூநீதித் தலைவர்களின் முயற்சி யில் எந்தத் தவறும் இல்லை. அதேபோது ஆங்கிலேய ஒடுக்கு முறையின் கீழ் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடம் பிடிக்கப் பார்ப்பனர்கள் தங் களை எப்படி அணியப் படுத்திக் கொண்டனரோ அப்படியே ஒடுக்குண்டோரும் அவர்களின் வழியைப் பார்த் தொழுகித் தங்களை அணியப் படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சமூகநீதித் தலைவர்கள் சிந்தித் ததில் இருந்து கோளாறு கள் தொடங்குவதாகக் கொள் ளலாம்.

அறிவுப் போட்டியில் பார்ப் பனர்களைத் தமிழ்க் களத்துக் குக் கொண்டு வந்து நிறுத்து வதற்குப் பதிலாக, தமிழர்களைக் கொண்டு போய் பார்ப்பனர் களின் ஆங்கிலக் களத்தில் கொண்டு போய் நிறுத்த முயன்றார்கள்.

இதற்குச் சான்றாகப் பெரி யாரின் கூற்று ஒன்றைப் பார்ப் போம்: “இந்தத் தமிழ் நாட்டி லேயே நம் (தமிழர்கள்) தன் மையும் பார்ப்பானின் தன் மையும், இருவரின் வாழ்வின் பேத அளவும் விளங்குவதோடு அந்தப் பேதத்துக்குப் பெருங் காரணம் வேறு எது எதுவோ இருந்தாலும், பெரிதும் அந்த ஆங்கிலம் படிக்காததுதான் காரணம் என்பது விளங்கும்.” (பெரியார் ஈவெரா சிந்தனைகள், பதிப்பாசிரியர்: வே. ஆனை முத்து, தொகுதி 3, அரசியல் 2, பக்கம் 1776.)

மேலும் கூறுகிறார்: “இன் றைய தினம் ஆட்சி நம்மு டையது என்று சொல்லப் பட்டாலும், இதில் இங்கிலீஷ் படித்தாலொழிய, அந்த இங்கி லீஷிலும் ’திறமையான படிப் பாளி’ என்கின்ற தகுதி இருந் தால் ஒழிய ஆட்சியில் பங்கு பெற முடியாது என்கின்ற நிலை இருந்து வருவதை யாரா வது மறுக்க முடியுமா?”

ஆட்சியில் இடம்பிடிக்கப் பார்ப்பான் ஆங்கிலம் படித் தால், நீயும் படி என்கிறார் பெரியார்.

உழைக்கும் மக்களை ஊ ருக்கு வெளியே துரத்தி யடிக்கும் பார்ப்பனியந்தான் அம்மக்களின் தாய்மொழியாம் தமிழையும் கல்வி நிலையங் களில் இருந்தும், அரசுத் துறைகளில் இருந்தும் துரத்தியடித்தது. ஆனால் மக்களின் மொழியைப் புறந்தள் ளுவதற்கு மெகாலேயும் பார்ப் பனர்களும் சொன்ன அதே காரணங்களைப் பெரியாரும் சொன்னார்.

1960 பிப்ரவரி 15 அன்று விடுதலை இதழில் எழுதிய கட்டுரையில் பெரியார் கூறு கிறார்: “1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும். 2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத் தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும். 3. ஆங்கில மொழி யானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங் கிட்டதாக ஒருபோதும் கிடை யாது.” (மேலது நூல், பக். 1762).

ஆங்கிலம் பற்றிப் பார்ப் பனர்கள் இன்று வரை கட்ட விழ்த்து விட்டுக் கொண்டி ருக்கும் கதைகளையே பெரி யாரும் அப்படியே சொல்கிறார். ஆங்கில மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும் என் பதற்குப் பெரியார் எந்தச் சான்றுகளையும் தரவில்லை. உள்ளபடியே மொழியியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆங் கில மொழி அறிவியல் அடிப் படையிலான இலக்கணக் கட்ட மைப்பைக் கொண்ட மொழி யன்று.

எந்த நிகழ்கால வினைச் சொல்லையும் கடந்தகால வினைச்சொல்லாக மாற்று வதற்கு ஆங்கிலத்தில் எந்தப் பொது இலக்கண விதியும் கிடையாது. அவற்றை எந்த அடிப்படையுமின்றி மனப் பாடம் செய்து வைத்துக் கொள்வதுதான் ஒரே வழி. செல் என்பதைக் குறிக்கும் go (கோ) என்னும் நிகழ்கால வினைச் சொல் பொருத்தமே இல்லாது கடந்தகாலத்தில் went (வென்ட்) என்று மாறுவது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு மொழியின் எழுத்துக் களின் ஒலிப்பு (உச்சரிப்பு) இலக்கணம் குறித்து ஆராயும் மொழி ஒலிப்பியல் (linguistic phonetics) அறிஞர்களின் கருத் துப் படி, ஒரு மொழியில் ஓர் எழுத்து தனியாக வெளிப் படுத்தும் ஒலிப்பும், அந்த எழுத்து ஒரு சொல்லில் இடம் பெறும் போது வெளிப்படுத்தும் ஒலிப்பும் எந்தளவுக்குச் சீர்மை யாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த மொழியைப் பேசிப் பழகுவது எளிது என் கின்றனர். இதற்குரிய அனைத் துத் தகுதிகளையும் பெற்ற ஒரு மொழி இருக்கு மானால் அது தமிழாகவே இருக்க முடியும். எழுத்து ஒவ்வொன்றின் ஒலி அளவை மாத்திரையில் கணக் கிட்டு உச்சரிக்கச் சொல்லும் மொழி அல்லவா தமிழ்.

ஆங்கில மொழியிலோ ஒரு சொல்லுக்குரிய எழுத்துக் களைத் தனித் தனியாகச் சொல்வது கடினம். அந்தளவுக்கு ஆங்கில எழுத்து உச்சரிப்புகள் சொல்லுக்குச் சொல் வேறுபடும். சொல்லப் போனால், ஆங்கிலத் தில் சிலநேரம் ஒரு வார்த்தை யில் ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் உச்சரிக்காமல் விட்டு விட வேண்டிய நிலை உள்ளது. இதனால்தான் ஆங்கிலம் படிக் கும் குழந்தைகளிடம் “இந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்” எனக் கேட்கிறோம். ஆங்கில நாடு களில் கூட எழுத் தெழுத்தாகக் கூட்டிச் சொல்லும் ஸ்பெல்லிங் போட்டிகளை பள்ளி மாணவர் களுக்கு நடத்துகிறார்கள்.

தமிழ் படிக்கும் குழந்தை களிடம் நாம் எவரும் ஸ்பெல்லிங் சொல்லச் சொல் லிக் கேட்பதில்லை. தமிழ் மொழி எழுத்துகளின் ஒலிப்பு இலக் கணமே குழந்தைகளுக்குச் சரியான 'ஸ்பெல்லிங்கை' சொல் லிக் கொடுத்து விடுகிறது. ஆங்கிலத்துக்கே உரிய எழுத்து கூட்டிச் சொல்லைக் கூறும் கொடுமை தமிழுக்கு இல்லாத தால்தானோ என்னவோ ஆங் கிலம்- தமிழ் அகராதிகளில் 'ஸ்பெல்லிங்' என்னும் சொல்லுக் குப் பொருள் விளக்கங்கள்தாம் உள்ளனவே தவிர நேரடியான ஒற்றை இணைச் சொல் இல்லை.

ஆங்கில மொழியின் இந்த 'ஸ்பெல்லிங்' குழப்பம் குறித்து உச்சரிப்புக் கேடு குறித்துக் கடுமையாக விமர்சித்த ஆங்கில அறிஞர்கள் பலர் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் ஆங்கில அறிஞர் பெர்னாட் ஷா ஆவார் எள்ளல் விமர்சனங் களுக்குப் போன அவர் ஆங்கில உச்சரிப்பு குறித்துச் செய்துள்ள நையாண்டிகள் அலாதியா னவை.

அவர் அமெரிக்க இதழ் ஒன்றில் பிக்மேலியன் (Pygmalionj) என்னும் நாடகத்தை எழுதி னார். இந்த நாடகத்தைத் தான் எழுதுவதற்குரிய காரணத் தைத் தமது முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே தமக்கே உரிய கிண்டலுடன் குறிப்பிடு கிறார் பெர்னாட் ஷா:

“ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் மொழியின் மீது எந்த மரியாதையும் இல்லை. அவர் கள் தங்கள் குழந்தை களுக்கு ஆங்கிலத்தைப் பேசுவ தற்குக் கற்றுத் தர மாட்டார்கள். அவர்கள் ஆங்கிலச் சொல்லுக் குரிய எழுத்துக்களைக் கூட்டி (ஸ்பெல்லிங்கை) சொல்வது அருவருக்கத்தக்க அளவில் உள் ளது. எந்தளவுக்கு என்றால், ஆங்கில மொழி எப்படி ஒலிக் கக் கூடுமென எந்த ஒரு மனிதனாலும் தனக்குத் தானே கூட கற்றுக் கொடுத்துக் கொள்ள இயலாது. எந்த ஓர் ஆங்கிலேயனுக்கும் மற்றோர் ஆங்கிலேயனின் வெறுப்பை யோ இகழ்ச்சியையோ சம்பாதித் துக் கொள்ளாமல் வாயைத் திறப்பது என்பது முடியாத காரியமே. ஜெர் மானியம், ஸ்பானியம் ஆகிய மொழிகள் வெளிநாட்டினருக்கும் கூட எளிதில் பிடிபடுகின்றன. ஆனால் ஆங்கிலம் ஆங்கிலேயர் களுக்கே கூட பிடிபடுவதில்லை. இன்றைய இங்கிலாந்துக்குத் தேவையான சீர்திருத்தக்காரர் யாராக இருப்பார் என்றால், அவர் ஆங்கில உச்சரிப்பு முறை யில் சீர்திருத்தங்கள் செய்து காட்டக் கூடிய ஓர் ஆற்றல்மிகு ஒலிப் பியல் பற்றார்வலராகவே இருப்பார். அதனால்தான் நான் இத்தகைய ஒரு மனிதனை எனது புகழ்வாய்ந்த ஒரு நாடகத்தின் கதாநாயகனாகப் படைத்துக் காட்டியுள்ளேன்.”

பெர்னாட் ஷா விரும்பிய அந்த ஆங்கிலேயன் இன்று வரை வரவேயில்லை. இப்படி பெர்னாட்ஷா போன்ற ஆங்கில அறிஞர்களாலேயே கற்றுக் கொள்வதற்குக் கடினம் எனச் சொல்லப்பட்ட மொழி யாகிய ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் வதற்கு சுலபமான மொழி எனப் பெரியார் எப்படிக் கூறுகிறார் என்பது புரிய வில்லை. இங்கி லீஷ்ல இருபத் தாறே எழுத்து தான், ரொம்ப ஈசியா கத்துக் கலாம் எனச் சொல்லும் அப் பாவித் தமிழனின் கூற்றுக்கும் பெரியாரின் கருத்துக்கும் என்ன வேறுபாடு?

ஆங்கில மொழியைத் தமிழர் கள் கற்றுக் கொள்ள வேண்டிய தன் தேவையை உணர்த்து வதற்குப் பெரியார் கூறும் இரண்டாவது காரணத்துக்கு வருவோம். ஆங்கிலம் தெரிந் தால் உலகின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப முடியும் என்கிறார்.

பெரியாரின் இந்தக் கருத்து தவறு எனக் காட்டுவதற்கு சாதாரணச் செய்திகளே போது மானது. ருஷ்யா, ஜப்பான், பிரான்சு என எந்த நாட்டுக்குச் சென்று உயர் கல்வி பெற விரும்பும் மாணவர் எவரும் அந்த நாட்டு மொழியைப் பயின்ற பிறகுதான் அந்த நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கால் பதிக்க முடியுமே தவிர ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒரு புத்தகத் தையும் புரட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெ ரிந்த உண்மையே. ஆனால் பெரியார் கூறும் கருத்து அடிப் படை உண்மைக்குப் புறம் பானது மட்டுமன்று, தமிழர் களை அறிவுத்தளத்தில் பின் னுக்குத் தள்ளக் கூடிய பேரா பத்தான கருத்துமாகும்.

ஆங்கிலம் உலகின் சாளரம், அதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தமிழர்கள் சிறைக் கம்பிகளுக்குள் மாட்டிக் கொள் வார்கள் என இன்று பலரும் பேசி வருகின்றனர். உள்ள படியே ஆங்கிலந்தான் உலகத் தின் ஒரே மொழி என் நம்பி ஆங்கிலத்தின் பின்னாலே தமி ழர்கள் ஓடியதால்தான் தமி ழர்கள் விசாலமான அறி வின்றித் தரந்தாழ்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழகம் வளர உலகக் கலைச் செல்வங்கள் யாவற் றையும் கொணர்ந்திங்கு சேர்க்க வேண்டும் எனச் சொல்வதன் பொருள் என்ன? உலக மொழி யாவற்றையும் தமிழன் கற்றுத் தேற வேண்டும் என்பதுதான். வெறும் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உலக வெளிச்சங்களை நாம் கண்டுணரக் கூடுமா? ஆங்கிலம் ஒன்றே அறிவின் ஒளி என நம்பித் தமிழர்கள் பல பத்தாண்டுகளாய் ஓடினார்கள். நடந்தது என்ன? இன்று உலக அறிவு எதையும் அதைப் படைத்தவர் எழுதிய மூல மொ ழியிலிருந்து நமக்கு நேரடியாக மொழிபெயர்த்துத் தருவதற்கு ஆளில்லை.

காரல் மார்க்ஸ் தமது தாய் மொழி ஜெர்மானியத்தில் எழுதிய மூலதனம் நமக்குக் கிடைத்தது எப்படி? அது ஜெர்மானியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப் பானது. பிறகு அந்த ஆங்கில மூலதனம் நமது தமிழில் மொழி பெயர்ப்பாகிக் கிடைத்தது. இப்படித்தான் நமக்கு லெனின், டால்ஸ்டாய் போன்றோரின் ருஷ்யப் படைப்புகளும், மாவோ போன்றோரின் சீனப் படைப்பு களும், சே குவேரா, காஸ்ட்ரோ, நெரூடா போன்றோரின் ஸ்பா னியப் படைப்புகளும் ஆங்கிலத் தின் வழியாகத்தான் தமிழுக்குக் கிடைக்கின்றன. ஒரு பனிக்கட்டி எப்படிக் கைகள் மாற மாற மென்மேலும் கரைந்து கரைந்து அடுத்தவர் கைகளைச் சென்ற டையுமோ, அவ்வாறுதான் ஒரு படைப்பும் அதிக மொழிக ளூடாகப் பயணப்பட பயணப் பட அது தன் அழகியலையும் கலை நயத்தையும் இழந்து செல்லும் என்பார் தோழர் தியாகு.

மூலப் படைப்பின் சுவை யைத் தர மறுக்கும் கேட்டை உருவாக்கியது எது? உலகின் எந்த மொழிப் படைப்பையும் தமிழில் ஆக்கித் தரும் திறம் பெற்ற பன்மொழி அறிஞர் களைத் தமிழ்நாட்டில் உருவா காமல் தடுத்தது எது? ஆங்கி லமே உலக மொழி என்னும் கேடான கருத்தல்லவா? உள்ள படியே, ஆங்கிலம் நமக்கு உல கின் சாளரமாக விளங்கவில்லை, அது உலகின் வெளிச்சம் மறைக்கும் பேரரணாக விளங் கித் தமிழர்களை ஞான சூன்யங்களாக்கி விட்டது.

ஆங்கிலத்தின் தேவைக்குப் பெரியார் மூன்றாவதாகச் சொல் லும் காரணத்தைப் பார்ப்போம். ஆங்கில மொழி யானது அறிவைத் தூண்டும் உணர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தர மாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங் கிட்டதாக ஒருபோதும் கிடை யாது என்கிறார் பெரியார்.

ஆங்கிலத்தின் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் போன்றவை எவ்வாறு கருப்பின மக்களை மனிதக் குரங்குகளுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவு படுத்தின, சாசர், ஷேக்ஸ்பியர் போன் றோரின் இலக்கியங்கள் பதிவி ரதா தர்மம், கற்பு, அடக்க ஒடுக்கம் பற்றி எல்லாம் பேசி பெண்களை எவ்வாறு அடி மைப்படுத்தின, ஆங்கிலே யனின் அறிவியலில் எந்தளவுக்கு புராண ஆபாசக் குப்பைகள் நிறைந்துள்ளன என்றெல்லாம் நாம் ஏற்கெனவே விரிவாகக் கண்டு விட்டதால் ஆங்கிலம் சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதா என்ற வினாவுக்கு விடை காண வேண்டிய தேவை இனியும் நமக்கு இல்லை.

ஆனால் நமக்கு ஒரு விடை கிடைக்க வேண்டும். மத ஆபாசக் குப்பைகளால் தமிழ் கெட்டுக் கிடப்பதாகக் கவலைப் படும் ஆங்கில ஆதரவுத் திராவிடப் பகுத்தறிவுவாதிகள் எவரும் கோள்கள், செயற்கைக் கோள்கள், மருத்துவம் என அறிவியல் கலைச்சொற்கள் அனைத்திலும் பரவிக் கிடக்கும் ஆங்கில மத ஆபாசக் கருத்து களைப் படித்து நமது தமிழகப் பள்ளிச் சிறுவர்கள் மூளை கெட்டு விடுமெனக் கவலைப் படுவதில்லையே, ஏன்?

தமிழர்கள் அனைவருமே தமிழை மறந்து விட்டு ஆங்கிலத் திலேயே பேசிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் பெரியார். இது மிக எளிய காரியமே என்றும் சொல்கிறார்.

மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் கருவியே என்பதால் ஒருவர் எந்த மொழிக்கு வேண்டு மானாலும் எளிதில் மாறிக் கொள்ளலாம் என்கிறார் பெரியார். பெரும்பாலான இந்தியக் கம்யூனிஸ்டுகளும் மொழியை வெறும் தொடர்புச் சாதனம் என்றுதான் கூறி வருகிறார்கள்.

மொழி என்பது மூளையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கிறார் உலகின் தலைசிறந்த மொழியியல் அறிஞரான நாம் சாம்ஸ்கி. மூன்று வயதான குழந்தைகள் கூட தங்களைச் சுற்றிய சமூகம் பேசும் மொழி யைப் புரிந்து கொண்டு அதனை இலக்கணத் தூய்மை யுடன் கடகடவெனப் பேசுவதற்கு அவர்கள் பெற்றோரும் அவர் கள் சார்ந்த சமூகமும் மட்டும் காரணமல்ல, அந்தக் குழந்தை களின் மூளையில் இயற்கை யாகவே பொதிந்துள்ள மொழி இலக்கணக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்கிறார் சாம்ஸ்கி.

“நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா?” (மேலது நூல் பக். 1737) எனக் கேட்கிறார் பெரியார். ஆம், வெளிவரும் என்கிறார் சாம்ஸ்கி.

மேலும் பெரியார் மொழிப் பயிற்சி என்பது வெறும் பழக்க வழக்கத்தால் ஏற்படுவதாகக் கூறுகிறார். அதனை எப்படியும் மாற்றிக் கொள்ளலாம் என் கிறார். மனிதர்களின் வலக்கை, இடக்கைப் பழக்கங்கள் கூட பழக்கவழக்கத்திலே வருகின் றனவே தவிர, இயற்கை யாகத் தாய் தந்தையரிடமிருந்து வரப் பெறுவதில்லை (மேலது நூல் பக். 1740) எனக் கூறுகிறார்.

மனிதன் எந்தக் காரியத்தையும் இயற்கையாகச் செய்ய விரும்புவது வலக்கையால் மட்டுமே, எனவேதான் வலக்கைப் பழக்கம் உருவாகிறது. ஆனால் மனிதர்களுக்கு வலக் கைப் பழக்கம் மட்டுமன்று, வலக்கால் பழக்கம், வலக் கண் பழக்கம், வலக் காதுப்பழக்கம் உண்டு என்றும், இந்தப் பழக்கங்கள் மூளையிலேயே தெளி வாகப் பதிவு செய்யப்பட்டு விடுவதாகவும் கூறுகிறது உயிரியல். இப்படி இயற்கையான இந்தச் செயலுக்குப் போன்றே மொழிக்கும் பழக்க வழக்கத் தைக் காரணமாகக் கூறுகிறார் பெரியார். அதனை நம் விருப்பப் படி மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் மொழியே அந்தக் குழந்தையின் தாய் மொழி எனக் கூறுவது தவறு என்கிறார் பெரியார். அந்தக் குழந்தையை வேறொரு மொழி பேசும் இடத்துக்குக் கொண்டு விட்டால் அது அந்த மொழியைக் கற்றுக் கொண்டு பேசுகி றதே, அப்படியானால் அந்தக் குழந்தையின் தாய்மொழி எது என்கிறார் பெரியார் (மேலது நூல் பக். 1737).

ஒரு குழந்தையின் தாய் பேசும் மொழியும், அந்தக் குழந்தை சார்ந்த சமூகம் பேசும் மொழியும் மிகப் பெரும்பாலும் ஒன்றே என்பதால் அந்தக் குழந்தை பேசும் மொழியைத் தாய்மொழி எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. பெரியார் கூறுவது போல் ஒரு குழந்தையின் தாயின் மொழி ஒன்றாகவும், அது வளரும் சமூகத்தின் மொழி வேறாகவும் இருப்பதற்குள்ள வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவர் சொல்வது போல் விதிவிலக்காக அந்தக் குழந்தை தனது தாயை விட்டு வேறு மொழி பேசும் சமூகத்தில் வளர்ந்தால், அந்தச் சமூகத்தின் மொழியே அந்தக் குழந்தையின் தாய்மொழியாகி விடும். எனவே துல்லியமாகச் சொன்னால், தாய்மொழி என நாம் கூறுவது சமூக மொழியையே ஆகும். எனவே சாம்ஸ்கி கருத்துப்படி மொழி இலக்கணக் கட்டமைப் புக்குரிய ஒரு தனிப் பகுதியைப் பெற்றுள்ள ஒரு குழந்தையின் மூளை எந்தச் சமூகத்தில் வாழ்கிறதோ அந்தச் சமூகத்தின் மொழியே அந்த மூளையின் (குழந்தையின்) தாய் மொழி யாகவும் ஆகி விடுகிறது. இந்தள வுக்குப் பெரியாரின் கருத்து சரியே.

ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்து பருவமெய்திப் பட்டறிவு அனைத்தையும் தனது தாய்மொழியில் பெற்று முடித்த பின், அந்த முழு மனிதரை வேறெந்தச் சமூகத்துக்குத் தூக்கிச் சென்றாலும், இப்போது அந்த மனிதரால் அவ்வளவு எளிதில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள இயலாது. அப்படியே கற்றுக் கொண்டா லும் அவரால் அந்த மொழி யைத் தன் தாய் மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் கற்றுக் கொள்ள முடியும். அதாவது அவர் அந்த மொழி யில் உணரும் எதுவும் அவரது தாய்மொழிப் பெயர்ப்பாகவே இருக்கும். எனவே அவரால் தனது மூலமொழியான தாய் மொழியில் அவருக்குள்ள வலுவை ஒருபோதும் அன்னிய மொழியில் அடையவே முடியாது. இது மெய்ப்பிக் கப்பட்ட சமூக அறிவியல் உண்மை ஆகும்.

 (தொடரும்)

Pin It