எல்லா மருத்துவ முறைகளுக்கும் ஓர் அறைகூவலாக இருக்கும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று.

       ஒருவர்க்கு அந்நோய் இருப்பதாகத் தெரிந்த வுடன் தோன்றும் அதிர்ச்சியும் அதன் விளைவு களும் என்னும் தொடக்க நிலையிலிருந்து அவர் தம் வாழ்நாள் எச்சம் வரையிலும் அவரை வாட்டி வதைக்கும் துன்பங்களுக்கு அளவில்லை.

       இந்நோய் பற்றிய சில விளக்கங்களையும், எனது மருத்துவப் பட்டறிவுகள் சிலவற்றையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இக்கட் டுரை எழுதப்படுகின்றது. 

புற்றுநோய் பற்றிய விளக்கம்

       இயல்பாக உள்ள உடல் திரளை களில்(Tissues) இருந்து எழும்பும் சில உயிர ணுக்கள், கட்டுப் பாடில்லாதவாறு பெருவளர்ச்சியுடை யனவாகவும், அவை தோன்றுவதற்கு இட மாக உள்ள இயல் பான திரளைகளைக் கொன்று அழிப்பன வாகவும், அவ்வுயிரணுக்கள் எழும்பிய அதே இடத்திலும் அல்லது தொலைவான வேறு இடத்திலும் அவ்வுயிர ணுக்கள் விரைந்து பரவுவனவாகவும் உள்ள நிலையே புற்றுநோய் என்பதாகும்.

       உடலின் எவ்வுறுப்பிலும் அல்லது எப்பகுதியிலும் இப்புற்றுநோய் தோன்றக் கூடும்.

புற்றுநோய்க்கான மறுபெயர்கள் 

      எலும்புத்தசைப் புற்றுநோய் (Caricinoma)

      சவ்வுத்திரளைப் புற்றுநோய் (sarcoma)

      குருதிப் புற்றுநோய் (Leukemia)

      தீவிரப் படர்ச்சிப் புற்றுநோய் (Malignancy)

என்று, புற்றுநோய்களின் தோற்றத்திற்கும், அவை பரவும் வகைக்கும் ஏற்றவாறு அதற்கு வெவ்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. 

புற்றுநோய்க்கான அடையாளங்கள்

      ஓர் இடத்திலேயே கெட்டியாகவோ, நெகிழ்ச்சியுடனோ இருக்கும் கட்டிகள்; அவை அவ்விடத்தில் இருப்பது தெரியாதவாறு அருகில் உள்ள வேறு ஓர் இடத்தில் இடப்பெயர்ச்சியாகவும் நெறிக்கட்டி (Metastasis) போலவும் காணப்படுதல்.

      ஆறாத புண்கள்

      காரணமின்றியும், நிற்காமலும் செல்லும் குருதிப்போக்கு

      சிறுநீர் மலம் ஆகி யவை வெளியேறு வதில் காணப்படும் காரணமற்ற மாற்றங் கள்.

      விட்டு நீங்காத இருமல்

      உணவையோ நீரை யோ விழுங்குவதற்குத் தொல்லைப்படுதல்.

      மருக்களும் மச்சங் களும் - அளவிலும் அமைப்பிலும் தோற்றத்திலும் மாறுபட்டுக் காணப்படுதல்

      காரணம் ஏதும் இன்றி உடலின் எடை குறைதல்

என்பவை புற்றுநோய்க்கான சில அடையாளங் களாகக் கருதப்படுகின்றன. இவையோடு, பொருளற்ற அச்ச உணர்வு, சிடுசிடுப்புடன் கூடிய எரிச்சல், கழுவித்துடைத்துத் தூய்மை செய்வதில் மூழ்கிவிடுதல் என்னும் மனஉணர்வுகளும் காணப்படலாம். இவற்றில் ஒன்றும் பலவும் ஒருவரிடம் காணப்படின் அது புற்றுநோய் இருப்பதற்கு அல்லது இனிமேல் வருவதற்கு உரிய அடையாளமாக ஐயுறலாமேயன்றி, அவை கட்டாயமாகப் புற்றுநோய் இருப்பதைக் காட்டுவனவாகக் கொள்ள முடியாது.

       இவற்றோடு, அவருக்கு முற்பட்ட குடும்ப உறவுகளில் இந்நோய் இருந்திருப்பின் அதையும் கணக்கிற்கொள்ள வேண்டும்.

புற்றுநோய்க்கான பொது மருத்துவம்

       ஒருவர்க்குப் புற்றுநோய் இருப்பது. காந்தமுறை உருப்பதிவு(MRI scan), உயிரணுச் சிதைப்பு ஆய்வு (Biopsy) முதலான ஆங்கில மருத்துவ முறைக் கருவி ஆய்வுகளாலேயே உறுதி செய்யப்படுவதாலும், புற்றுநோய் உள்ளவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உடனே ஆங்கில மருத்துவ முறையையே நாடிச் செல்கின்றனர். அம் மருத்துவ முறையில்

      அறுவை மருத்துவம்

      வேதியல் சேர்ம மருத்துவம் (Chemotherapy)

      உட்சுரப்பித் தூண்டல் மருத்துவம் (Hormone therapy)

      கதிர் வீச்சு மருத்துவம் (Radium therapy)

      குருதி ஏற்றுதல்

என்பனவற்றுள் ஏற்புடையனவாகக் கொள்ப வற்றை மேற்கொள்கின்றனர். அம் மருத்துவ முறையில் மருந்துப் பொருள்களினால் அந் நோய்க்கு மருத்துவம் செய்வது அம்மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவர்களுக்கே நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

பண்டைத் தமிழ் மருத்துவம் - ஓர் அரிய குறிப்பு

       கம்பர் காலத்தில் தம்பிபுகான் என்னும் பெயருடைய ஓர் அறுவை மருத்துவ வல்லார் வாழ்ந்திருக்கிறார். அவர்தம் மருத்துவத் திறமையால் அவரைப் பலரும் போற்றிப் பாராட்டியுள்ளனர். இச் செய்தியைக் கம்பர் ஒரு வெண்பாவில் கூறியுள்ளார்.

       ‘ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார் / ஆரார்தாம் சத்திரத்தில் ஆறாதார்சீராரும் / தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத் / தம்பிபுகான் வாசலில் தான்’ என்பது அவ்வெண்பா.

       (சத்திரம் = அறுவை மருத்துவம்)

அது மட்டுமின்றி அவர்தம் இராமாயணத்தில்,

       ‘உடலிடைத் தோன்றிற் நொன்றை

       அறுத்ததன் உதிரம் ஊற்றிச்

       சுடலுறச் சுட்டு வேறோர்

       மருந்தினால் துயரம் தீர்வர்’

       (கும்பகருணன் வதைப்படலம் 145)

என்றும் பாடியுள்ளார். இங்குக் கூறப்பட்டது

புற்றுநோய்க்கான மருத்துவமே என்பதையும், தற்கால ஆங்கில மருத்துவ முறையில் பின்பற்றப் படுகின்ற பண்டுவங்கள் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கடைப் பிடிக்கப்பட்டன என்பதையும் அறியலாம். 

புற்றுநோய் பற்றிய ஓமியோபதிப் பார்வை

       நெடுநோய்களுக்கான மூலக்கூறுகள் (Miasm) மூன்று என்று விளக்கியவர் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான். அவை:

      சொறியன் (Psoric Miasm)

      பறங்கியன் (Syphilitic Miasm)

      வெட்டையன் (Sycotic Miasm) என்பன

இம்மூன்றும் ஒன்றோடொன்று சேர்ந்தும் கலப்புற் றும் காணப்படுவனவே.

       வெட்டையன் என்பது திரளைகளில் பெருக் கத்தையும்; பறங்கியன் என்பது அவற்றின் அழிவை யும் அடிப்படையாய்க் கொண்டுள்ளவையாகும். சொறியன் என்னும் சொறிச்சல் நோய் (Itch disease) விதிவிலக்கு இல்லாமல் அனைவரையும் பற்றியிருக்கும் ஒன்றாகும். எனவே இம்மூன்று நோய்மூலங்களும், வெட்டையன் + பறங்கயின் + சொறியன் என்னும் வரிசையில் பின்னிப் பிணைந் துள்ள கலப்புநோய் மூலமே புற்றுநோயின் அடிப் படைக் காரணம் ஆகும்.

       சிலர் புற்று நோயைத் தனி மூலமாகவும் கூறுவர். புற்றுநோய்த் திரளையிலிருந்து செய்யப் பட்ட ஒரு நோயெடை (நோயிலிருந்து எடுக்கப் பட்டது- Nosode) மருந்து கார்சினோசின் (Carcinosin) என்பதாகும். இது ஓமியோபதி முறைப் படி நிறுவப்படாத மருந்தாய் இருப்பினும் மருத்துவக் கூடப் பட்டறிவுகளால்(Clinical experiences) , இது புற்றுநோய்க்கான மருந்தாகவும், புற்றுநோய்த் தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. இம் மருந்து பற்றிய விளக்கக் குறிப்புகளை பௌபிசுடர் (Foubister) என்னும் ஓமியோ அறிஞர் அம்மருந்தின் பெயரையே தலைப்பாகக் கொண் டுள்ள ஒரு சிறு நூலில் விளக்கியுள்ளார்.

       ஒவ்வொரு தனிநோய்நிலைக்கும், நோயாளிக் கும் மிகப்பொருத்தமாகவுள்ள ஒரு தனிமருந்தைத் தேர்ந்து தருவதே சிறந்த ஓமியோபதி மருத்துவம் ஆதலால் அவ்வழியைப் பின்பற்றியே புற்றுநோய்க் கும் மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

மருத்துவப் பட்டறிவுகள்

       ஒரு நோயாளிக்கு மிகப் பொருத்தமான ஒரு மருந்தைத் தக்க வீரியத்தில் கொடுக்கும் போது, அம்மருந்து-அந்நோயாளியின் கடந்தகாலம் தற்காலம், எதிர்காலம் என்னும் மூன்று நிலைகளிலும் நலத்தை விளைவிக்கிறது. எனவே நோய் நீக்கம், நோய்த்தடுப்பு ஆக்கம் என்னும் இரண்டு நன்மைகளும் ஒருங்கே உண்டாகின்றன. எனவே, புற்றுநோயையும், அதைப் போன்ற பிற நோய்களையும் - அவை வருமுன்னும் அவற்றை அறியுமுன்னும் - ஓமியோபதி மருத்துவர்கள் தடுத்துக் கொண்டுள்ளனர். என்பது தெளிவாகும்.

       ‘காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்

       ஞாலத்தின் மானப் பெரிது(102) என்னும்

திருக்குறள் கூறுவது போன்றே - ஓமியோபதியர் களின் இந்நோய்த்தடுப்புச் செயல் மாபெரும் நன்மை தருவதாக உள்ளது. இதனை உலகம், உடனடியாக உணரவில்லையாயினும், நற்செயலை நாம் நாள்தோறும் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

       புற்றுநோய் என்பது உறுதிசெய்யப்பட்டபின் அதற்காக மருத்துவம் செய்த சில பட்டறிவு களாகிய நோய் வரலாறுகள் வருமாறு:

       1. இருபத்தைந்தாண்டுகளுக்கு முந்திய வரலாறு. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் நிரம் பிய ஒரு சிறுவனுக்குப் புற்றுநோய் என்றும் அவனை வந்து காணவேண்டும். எனது நெருக்க மான நண்பர் ஒருவர் கூறினார். அந் நண்பரின் பக்கத்து வீட்டிற்குடியிருந்த பையனைச் சென்று கண்டேன். அவனுக்குப் பல் ஈற்றில் புற்றுநோய். நீர்வடிவாக உள்ளவற்றை மட்டும் உணவாகச் சிறிதளவு உட்கொள்ள முடிகிறது.

       அவனுக்குப் புற்றுநோய் முற்றியுள்ளதென் றும், இன்னும் ஒரு மாத காலம் தான் அவன் உயிர் வாழக் கூடும் என்றும் இதுவரை மருத்துவம் செய்த (ஆங்கில) மருத்துவ வல்லுநர் கூறியுள் ளார்.

       பையனுக்குக் கடைவாய்ப் பல் முளைத்த திலிருந்து பல்வலி; ஈற்றில் கட்டி; அவ்வப்போது பல் மருத்துவரிடம் மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போதைக்கு வலி குறையும்; மீண்டும் வரும். அதோடு பற்கூச்சம். அவை தொடக்க நிலைத் தொல்லைகள். இவற்றையும், பையன் எலும்பும் தோலுமாக இருந்த நிலையையும் கருத்திற் கொண்டு திரளை உப்பு (Trissue salt) மருந்துகளில் கல்பாசு; கல்ஃபுளோ என்னும் இரண்டையும் (பதின்முறை X potency) ஆறாவது வீரியத்தில் கொடுத்து வருமாறு அறிவுறுத்தினேன். அம் மருந்துகளை அவர்களே கடையிலிருந்து வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு மருந்தையும் ஒரு நாளைக்கு இரண்டிரண்டு வேளை கொடுத்து வந்தனர். பத்து நாளைக்குப் பின் நண்பர் வழியாக வந்த செய்தி:

       இப்போது வழி இல்லை; பசி தெரிகிறது; கூழ் வடிவிலும் நெகிழ்வான கெட்டிவடிவிலும் (semi-solid) உள்ள உணவுகளை உண்ண முடிகிறது. இரண்டு கிலோ எடை கூடியிருக்கிறான் என்பதே அச்செய்தி. ஒரு மாதம் அம்மருந்துகளைக் கொடுத்து வருமாறு கூறினேன்.

       என்னிடம் பரிவுடன் வந்து கேட்ட அந்நண் பர்க்கு, அப்போது ஓமியோபதிக் கல்லூரியில் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவரும் பழக்கமானவர். நண்பர் அதே பரிவுணர்வுடன் அவரிடம் பையனைப் பற்றிக் கூறவே அவரும் வந்து பார்த்திருக்கிறார். இவை ஊட்ட மருந்துகள் தாம்; புற்று நோய்க்கான மருந்துகள் இல்லை என்று கருத்துக் கூறியிருக் கிறார். அவருடைய கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை ஆர்வத்துடன் அழைத்து வந்திருக்கிறார். புற்றுநோய் மருந்துகள் என அறியப்பட்டவற்றைக் கொடுத்திருக்கின்றனர். பையனின் நிலை மிகவும் கேடானது. கை கால் எலும்புகள் வில்லாய் வளைந் தன. தாளமுடியாத நோய்த் துன்பத்துடன் பையன் இறந்துவிட்டான்.

       அவர்கள் வந்து பார்க்கிறார்கள் என்பது தெரிந்தவுடன் நான் ஒதுங்கிக் கொண்டேன். அக் குறுக்கீடு இல்லாதிருந்தால் அப்புற்றுநோய் என்னாகியிருக்கும் என்பது பற்றி இப்போது நான் கருத்தேதும் கூறுவதற்கில்லை.

       2.     எங்கள் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் வாழ்ந்த ஓர் அம்மையார், எழுபதாண்டுகளுக்கு மேற்பட்டவர். கணவரை இழந்தவர், ஆண்மக்கள் இருவர். ஒருவர் நல்ல வருமானம் உடையவர். குடும்பத்துடன் ஐதராபாத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர்தம் மனைவியார், தாய்-மகன் இருவரும் தொலைவாக இருப்பதற்கும், மகன் தன் தாய்க்கு எவ்வகையிலும் உதவாமல் இருப்பதற்கும் தம்மால் ஆன அளவு முனைப்புக் காட்டினார். இரண்டாவது மகனுக்கும் திருமண மாகிவிட்டது. தாயோடு இருக்கிறார்கள். இம்மகனுக்கு வருமானம் ஏதுமில்லை. ஆனால் குடி, புகை, போதைப்பொருள் பழக்கம் என்பவை அவரை அடிமையாய்க் கொண்டிருந்தன.

அம்மையாருடைய கணவர் கட்டிய சிறுவீடு, குடும்ப ஓய்வூதிய வருவாய் என்னும் இவற்றுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. மருந்துத் தேர்வுக்குப் பயன்படும் குறிப்புக ளாதலால் இவ்வளவும் கூறப்பெற்றன. மொத்தத் தில் அவ்வம்மையார் துன்பச் சூழலில் மூழ்கியிருப் பவர். அவர் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு தமது இடதுகை அக்குளில் ஒரு கட்டி இருக்கிறது என்றார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நேட்ரம் மூர் 10 எம் ஒருவேளை மருந்து கொடுத்தேன். பதினைந்து நாள் கழித்து வருமாறும் கூறினேன். அவர் சென்றபின், அது புற்றுநோய் இல்லை தானே? என்று என் மனைவியார் கேட்டார். புற்றுநோயாக அன்றி வேறெதுவாகவும். இருக்க முடியாது என்பது நான் கூறிய விடை.

       பதினைந்து நாளுக்குப் பின்னர் அவ் அம்மையார் வந்தார். அவர்தம் அகத்தின் தெளிவை முகம் காட்டியது. நமக்கு வரவேண்டிய வற்றை நாம் தானே எதிர்கொள்ள வேண்டும். என்று மெய்யியலாகப் பேசினார். அக்குள் கட்டி எலுமிச்சம் பழம் அளவிலிருந்து நெல்லிக்காய் அளவிற்குக் குறைந்திருப்பதாகவும் கூறினார். வெற்றுருண்டைகளைக் கொடுத்து மீண்டும் பதினைந்து நாள் கழித்து வருமாறு கூறி அனுப்பிவிட்டேன்.

       அவர்தம் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களிடம் என்னைப் புகழ்ந்து கூறிவிட்டு, எனக்குப் புற்றுநோயாக இருக்கும் என்ற அச்சத்துடன் சென்றேன். அவர் கொடுத்த மருந்துக்குப் பின் இப்போது கட்டி சிறிதாகியுள்ளது என்று ஆர்வத்துடன் கூறியிருக்கிறார். அவர்கள் அம்மையாரைச் சும்மா விடவில்லை. அவர்களு டைய வழிபாட்டுப் பிரிவினரால் நடத்தப்படும் கிறித்தவத் தொண்டு மருத்துவமனைக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டது. அறுவை செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின் அம்மையார் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு வந்தது.

       3. பதினைந்தாண்டுகளுக்கு முந்திய நோய்வரலாறு இது. இருபதாண்டு நிரம்பிய ஒரு பெண்மணி, ஆயத்த ஆடைகள் செய்யும் தொழிலகத்தில் பணியாற்றி வருபவர். அவருக்குத் தீராத தலைவலி. பல்வேறு மருத்துவமுறை மருந்து களும் அவர்தம் தலைவலியைப் போக்கவில்லை. நரம்பியல் மற்றும் மனவியல் மருத்துவமனையில் செய்யப்பட்ட காந்த முறை உருப்பதிவு (MRI) ஆய்வில், அவருக்குச் சிறுமூளையில் புற்றுநோய் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு திங்களுக்குப் பின் அறுவை செய்வதற்கு நாளும் குறிக்கப்பட்டு, அதற்கு இரண்டு நாளுக்கு முன் மருத்துவ மனையில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர். அப் பெண்ணின் தந்தையார் மகளுடைய நோயைப் பற்றிக் குடும்பத்தாரிடம் அப்போது ஏதும் கூறாமல் என்னிடம் அழைத்து வந்தார். கால்மணிநேரம் பேசிக் கொண்டிருந்தபின் எனக்குக் கிடைத்த சிறப்பான அறிகுறி அப்பெண்மணி பூப்படைந்த நாளிலிருந்து தலைவலி தொடங்கியது என்பதாலும் பிற அறிகுறிகளும் ஒத்திருந்தாலும் அவளுக்குப் “பல்சட்டில்லா 1 எம்” மூன்று வேளை மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு வேளை மருந்தும், மாத விலக்கு நாளை ஒட்டி ஒவ்வொரு வேளை மருந்தும் உட்கொள்ளுமாறும் கூறப் பட்டது,

       மூன்று மாதங்களுக்குப் பின் அவர் திரும்பிவந்தார். தலைவலி மிகவும் குறைந்திருந்தது. பொதுவாகவே அவரிடம் மிகுந்த முன்னேற்றம் காணப்படுவதையும் கூறினர். மீண்டும் மூன்று மாதத்திற்கு அதே மருந்தை அப்படியே உட்கொள்ளுமாறு கூறப்பட்டது. அதன்பின்னர் தலைவலி சிறிதும் இல்லையானது. அதே மருந்தை மாதத்திற்கு ஒரு முறை உட்கொள்ளுமாறு கூறியதுடன், அடுத்த முறை வரும்போது மீண்டும் காந்தமுறை உருப்பதிவு ஆய்வு செய்து அம்முடிவுடன் வர வேண்டும் என்றும் கூறினேன். அவ் ஆய்வு செய்வதற்கு ஐந்தாறு திங்கள் ஆகிவிட்டது. அதன் முடிவு, புற்றுக்கட்டி இருந்த இடத்தில் அதன் அடையாளங்கள் (Traces) உள்ளன என்பது தான். அங்குள்ள மருத்துவரிடம் அதைக் காட்ட வேண்டியது முறை. அவர் பார்த்து விட்டு வியந்தார் எனினும், அது மீண்டும் வளர்வதற்கு வாய்ப்புள்ளது; அறுவை செய்து கொள்வதுதான் சரி என்று கருத்துக் கூறியிருக்கிறார்.

அப்பெண்மணி, அறுவை வேண்டாம் என்று கூறி வந்து விட்டார். அப்பெண்மணிக்குத் திருமணமானது. குழந்தை பிறந்தது. ஒரு முறை அவர் கணவர் ஒரு கொடிய நேர்ச்சிக்கு (Accident) ஆளாகி நடக்கவும் முடியாமல் முடங்கியிருந்தார். அப்போது கணவரின் தம்பி அப்பெண்மணியிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டிருக்கிறார். அதைப் பெற்றோரிடம் கூறிய போது எச்சரிக்கையாய் இரு என்று கூறினர். ஒரு நாள் இப்பெண் மணியை வன்முறையாய்க் கெடுக்க முற்பட்ட போது மானம் கருதிய அப்பெண் ஒரு முழம் கயிற்றில் தொங்கித் தம் வாழ்வை முடித்துக் கொண்டார். என் மகளை நீங்கள் காப்பாற்றித் தந்தீர்கள், அந்தப் பாவி கொன்று விட்டானே என்று பெண்ணின் தாயார் முறையிட்டு அழுத காட்சி இன்றும் கண்முன்னே நிற்கிறது.

       4. நண்பர் ஒருவருடைய மாமியார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். தலைவலி என்று பல ஆண்டுகளாகத் தொல்லைப்பட்டார். வேலூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ‘பெரு மூளைப் புற்று’ என்று தெரிந்தது. அறுவைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை யைத் தவிர்க்க இயலாது என்று கூறிய நண்பர், அறுவைக்கு முன்னும் பின்னும் ஏதாவது ஓமியோபதி மருந்து கொடுத்து உதவ முடியுமா? என்றார். பிளம்பம் ஐயோடு முப்பதாவது வீரியத் தில் கொடுக்கப்பட்டது.

       தலையில் அறுவை செய்து கொண்ட மற்றவர்களுக்கெல்லாம்- மூளையிலிருந்து கண், காது, மூக்கு, தாடை என்னும் பிற உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளில் சிறிதும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டதால் காணமுடியாதவாறு முகம் வேறுபட்டுக் காணப்பட்டனர். நண்பரின் மாமியாரோ சிறிதும் கோணல் மாணல் இல்லாமல் இருந்தது அனைவருக்கும் வியப்பாக இருந்ததாக நண்பர் கூறினார். ஆங்கில மருத்துவக் கவனிப்பி லேயே இருந்த அம்மாமியார் ஓராண்டில் இறந்துவிட்டார்.

       5. குடும்பமாக உணவுக்கடை (Mess) நடத்திக் கொண்டிருந்த ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் இருப்பது உட்காணி(Scan)யின் மூலம் கண்டு பிடிக்கப்படடது. அவ்விடத்திலிருந்து ஊசித் துளை வழியாக எடுத்த திரளையை ஆய்வு செய்த ததில் அம் முடிவு உறுதியானது. அறுவை என்றும் அறிவுறுத்தப்பட்டது. அவர் என் மருத்துவக் கூடத்திற்கு வந்தார். கோடி கோடியாய்க் கொடுத் தாலும் கிடைக்காத ஓர் அரிய அறிகுறியைக் கூறினார். குமட்டிக் கொண்டு கக்கும் போது, அதன் பிணவாடையான நாற்றத்தை என்னாலும் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தான் அவ் அறிகுறி. அதற்கான மருந்தாகிய கார்பாலிக் ஆசிடு முப்பதாவது வீரியத்தில் தரப்பட்டது. பதினைந்து நாள் நாள்தோறும் ஒருவேளை, அதன் பின்னர் கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரு வேளை மருந்து உட்கொண்டு வந்தார். ஆறுதிங்களுக்குப் பின் முடிவைக் கண்டு, அவரைக் கவனித்த வந்த ஆங்கில மருத்துவ வல்லுநர் நீனு தப்பிசுக் கொண்டு பிட்டெ (நீ தப்பிக் கொண்டு விட்டாய்) எனக் கன்னடத்தில் கூறினாராம். அவருடைய உணவுக்கடை அப் போதே மூடப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக அவர் தானியங்கி (Autorickshaw) வாங்கித் தாமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

       6. மூன்றாவதாகக் குறிக்கப்பட்ட நோய் வரலாற்றுப் பெண்மணியின் தாயார், அவர்தம் உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்தார். என் மருத்துவக் கூடம் முதல் மாடியில் இருந்ததால் படி ஏறி வரமுடியாத அந்நோயாளி கீழேயே மகிழுந்தில் அமர்ந்திருந்தார். நான் சென்று அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு கேட்ட நோய் வரலாறு இது. ஐம்பதாண்டு நிறைந்த அவர் இருமுறை இடதுபுற நுரையீரல் அறுவைக்குஆளாகியுள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே மழைக்கால மூச்சிழுப்பு (அள்ற்ட்ம்ஹ) நோயால் துன்புற்ற அவர்க்கு நுரையீரல் நீர்த்தேக்கம் (Hydrothorax) என்று ஒருமுறை அறுவை செய்யப்பட்டது. பின்னர் புற்று நோய் என்று கண்டறியப்பட்டு இடதுபுற மேற்பகுதி நுரையீர லும் அறுவை செய்யப்பட்டது.

அவருக்குச் சற்று ஆறுதலாக இருக்கட்டுமே என்பதால், நீங்கள் அடுத்த முறை வரும்போது படி ஏறி வருவீர்கள் என்று கூறி விட்டு, நேட்ரம் சல்பர் இருநூறு வீறியத்தில் கொடுத்தனுப்பினேன். அவர் சில திங்கள் தான் உயிர் வாழ்வார். ஆனால் தொல் லைப்பட மாட்டார் என்று அவரோடு வந்தவரிடம் கூறினேன். ஒரு திங்கள் கழித்து வந்த அவர் படியேறி மேலே வந்தார். மீண்டும் அதே மருந்துதான் தரப்பட்டது. மூன்றுதிங்களுக்குப் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்றும் ஆனால் துன்பமில்லாமல் முடிந்தது என்றும் செய்தி வந்தது. அறுவைக்கு முன் கொடுக்கப்பட்டிருந்தால் அவரை நோயின் பிடியிலிருந்து மீட்கக் கூடிய அம்மருந்து இப்போது அவ்வேலையைச் செய்ய முடியாதவாறு அறுவை தடுத்துவிட்டது; எனி னும் அவர்தம் உயிராற்றல் மட்டும் அப்போதைக் குச் சற்று ஊக்கம் பெற்றது.

       7. நாற்பதாண்டுகள் மதிக்கத்தக்க ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் கட்டிகள் இருந்தன என்று அறுத்து அகற்றப்பட்டன. அறுவைக்குப் பின் அவற்றை ஆய்வு செய்ததில் அவை புற்றுக் கட்டிகள் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அவர் தமக்காகவும் தம் குடும்பத்தி னர்க்காகவும் ஓமியோபதி மருத்துவத்திற்கு என்னிடம் அவ்வப்போது வந்தார். அவருக்கு ஐதராபாத்துக்கு அலுவல் மாற்றம் ஏற்பட்டது. என்னுடைய மருத்துவக் கூடமும் இடம் மாறி விட்டது. எனவே மூன்றாண்டுகள் அப்பெண் மணியைக் காண இயலவில்லை. அவருக்கு மூன்றாம் நிலைப் புற்று நோய் என்றும், அறுவை செய்யப்பட்டது என்றும் ஓமியோபதிப் புற்றுநோய் மருத்துவமனையில் சேர விரும்பு கின்றனர் என்றும் நண்பர் ஒருவர் வழி செய்தி வந்தது.

கோட்டையத்தில், மருத்துவ அறிஞர் இராமன்லால் பட்டேல் அவர்களால் தொடங்கப் பட்ட மருத்துவக் கூடம் இப்போது புற்றுநோய் மருத்துவக் கூடமாக செயல்பட்டு வருகிறது என்று கூறி அனுப்பினேன். அறுவை செய்து கொண்டவர்களுக்கு அவர்கள் மருத்துவம் பார்ப்பதில்லையாம் என்று மீண்டும் செய்தி வந்தது. அப்பெண்மணி இப்போதும் ஆங்கில மருத்துவக் கவனிப்பிலேயே உள்ளார். இது, என்னுடைய நேரடிப் பட்டறிவு அன்று எனினும், ஒரு செய்தியை உணர்த்துவதற்காகவே இங்குக் கூறப்பட்டது. இவையே அல்லாமல், நாளும் ஒரு மருத்துவர்; நாளும் ஒரு மருத்துவ முறை என்று நிலையில்லாமல் சுற்றிக் கொண்டு என்னிடமும் அவ்வாறு வந்த சில புற்றுநோய்களின் வரலாறு இங்கே கூறப்படவில்லை. அதனால் யார்க்கும் எப்பயனும் இல்லை.

       இங்குக் கூறப்பட்ட இந்நோய் வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாடங்களைக் கற்பிப்பனவாக உள்ளன.

       அப்படி நான் / நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களாவன:-

1.     ஒவ்வொரு ஓமியோபதியரும், தாம் பார்க்கும் நோய் ஒரு புற்றுநோய் மூலத்தது என்பது தெரியாமலேயும்; புற்றுநோயாக அது            வளர்ந்து பற்றாமல் தடுக்கும் வகையிலும் தத்தம் மருத்துவ உதவியை உலகுக்கு அளித்து வருகின்றனர்.

2.     முழுமையான ஓமியோபதி மருத்துவ முறைகளைப் பின்பற்றியும், தனித்தன்மை (Individuality)யைப் பேணியும், தனி இயல்புக் குறி, தனிச்சிறப்புக்குறி, அரிய குறி (PQRS) என்பவற்றைத் துருவித் துருவித் தேடியும் மருத்துவம் செய்யுங்கால், எல்லா நோய்களையும் போலவே புற்றுநோயும் ஓமியோபதி முறையால் குணமாக்கக் கூடியது.

3.     ஆங்கில மருத்துவ முறைகளாகிய அறுவை, அதோடு தொடரும் பண்டுவங்கள் என்பவற்றை மேற்கொண்டபின், எந்த மருத்துவ          முறையாலும் புற்றுநோய் குணமடைவதில்லை.

4.     நோயின் மூலமும், நோய்த் தொடக்கத்தின் காரணமும் அறியப்படுதல் வேண்டும்.

5.     புற்றுநோயாளியைச் சுற்றி உள்ளவர்கள் அவருக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டும் நம்பிக் கொண்டும் அவர்களுக்கு தவறான வழிகளைக் காட்டக் கூடாது என்பவையாகும்.

 கட்டுரையாளர் தொடர்புக்கு :

       தொலைபேசி : (0) 98453 69715

       மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It