ஓமியோபதி மருத்துவம் என்பதில் மூலக்கரைசல் ‘Q’ தொடங்கிய வீரிய மருந்துகள் 1C முதல் லட்சம் மற்றும் தேவைக்கேற்ற உயர் வீரியங்களில் தயாரித்துப் பயன்படுத்தப்படு கின்றன. வீரியப்படுத்தப்பட்ட மருந் துகள் மட்டுமே ஓமியோ பதி மருந்துகள், மூலக் கரைசல் ‘Q’ ஒரு கிளாசிகல் (Classical) மருந்துப் பொருளே அல்ல எனப் பெரும் பாலானவர்கள் பயன் படுத்த தயங்குகின்றனர். அல்லது ஒதுக்கி விடுகின் றனர். தாயில்லாமல் தானே எவரும் பிறப்ப தில்லை என்ற தத்துவத் தை மதிக்கத் தெரியாத வர்கள் தான் அவ்வாறு ஒதுக்குகின்றனர். ஓமியோபதி மருத்து வத்தின் வெற்றியே மூலக்கரைசல் ‘Q’ எனப்படும் தாய்க்கரைசல் ‘Q’ மருந்துகள் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மூலக்கரைசல் ‘Q’ மருந்துகளின் தேவையை உணர்த்தவும் அம்மருந்து இல்லாமல் உயிராற்றலைச் சீரமைக்கவும் இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், கருஉருவாக்க உறுப்புக் கோளாறுகள், ஆண் பெண் இனப்பெருக்கக் குறைபாடுகள், நினை வாற்றல், நீரிழிவு நோய், குருதி அழுத்தக் கோளாறுகள் போன்ற ஏராளமான தீர்வுகளில் முழுமையான நிலையை எட்டவே முடியாது. இவ்வாறான நோய்களில் மூலக்கரைசல் மருந்து கள் தான் முன்னிலை பெற்று அணிவகுக்கின்றன.

       பொதுவாக மூலக்கரைசல் ‘Q’ மருந்துகளுக்கு ஓமியோபதி மருத்துவத்தில் 33 விழுக்காடு பங்களிப்பு செய்யாமல் அம்மருத்துவம் வெற்றி பெற முடியாது என்றே கூறிவிடலாம். ஓமியோபதி மருத்துவத்தில் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்திட நினைக்கும் மருத்துவர்கள் மூலக் கரைசலை ‘Q’ கண்டிப் பாக பயன்படுத்தியே தீரவேண்டும். ஓமியோபதி மருத்துவம் இன் றைய காலகட்டத் திலும் மக்களால் அறியப்படாமலும் உணரப் படாமலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப் பதற்குக் காரணமே மூலக்கரைசல் ‘Q’ மருந்துகளை சரிவரப் பயன்படுத்தப்படாததே ஆகும். பொதுவாக மெட்ரோ, மாநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களில் மெத்தப் படித்தவர்களும் விவரம் தெரிந்து தனி யார் துறை அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் மக்களில் ஒன்றி ரண்டு விழுக்காட்டினர் கூட ஓமியோபதி மருத்துவத்தை தெரிந்துகொண்டிருக்கவில்லை என்பது வெளிப் படையான உண்மை. இன்றும் கூட ஓமியோபதி மருத்துவத்தை நாட்டுவைத்தியம் என்றும், பரம்பரை வைத்தியர் என்றும் ஓமியோ பதி மருத்துவர்களிடமே கலந்தாய்வு நேரங்களில் பேசுவதை கேட்க முடிகின்றது.

       இதற்கு காரணம் என்னவென்று சொல்வது. பட்டம் பெற்ற ஓமியோபதி மருத்துவர்கள், பட்டயம் பெற்ற மருத்துவர்கள், சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பட்டறிவு மூலம் தொழில் நடத்தும் மருத்துவர்களில் பெரும் பாலோரின் மருத்துவச்சேவை 30 விழுக்காடு அளவில் கூட வெற்றி பெற்றதாகக் கூற முடிவ தில்லை. 20 முதல் 30 விழுக்காடு அளவிலேயே ஓமியோபதி மருத்துவச் சேவை மக்களிடம் வெற்றி பெற்றிருப்பது போதுமா என்றால் நிச்சயமாக போதவே போதாது. இதற்குக் காரணம் என்ன? மருத்துவச் சேவையில் ஏற்படும் அத்தனை பேருமே தங்களை ஒரு வெற்றியாளராக்கிக் கொள்ள முயலுவதாக கருத முடியவில்லை. மருத்துவம் கோரிவரும் மக்களிடம் நம்மையும் நமது மருத்துவத்தையும் வெற்றி பெற்றதாக்கிடும் ஒரு அறை கூவல் மனப்பான்மை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏதோ படித்துப் பட்டம் பெற்றோம். பட்டயம் பெற்றோம். கிளினிக் வைத்து தினம் ஒரு இலக்கு வருமா னத்தை நிர்ணயித்துக் கொண்டு அலோபதி மருத்துவத்தைப் போலவே நடத்தி காலத்தைக் கடத்தி வருவது மட்டும் போதுமா?

       ஓமியோபதி மருத்துவத்தை நம்மால் வளர்த்து உயர்த்தி காட்டிட முடியும். ஓமியோபதி மூலக்கரைசல் ‘Q’ மருந்துகளை முழுவதுமாகப் பயன்படுத்த முயலுங்கள். வீரிய மருந்துகளை மட்டும் பயன்படுத்துவது தான் கிளாசிகல் சிகிச்சை முறை என்று நினைக்கவே கூடாது. நிறைய மருத்துவர்கள் எதற்கெடுத்தாலும் 200 வீரியத்தில் மருந்துகளை வழங்குவதை அறிய முடிகின்றது. 1,2,3,6,30 போன்ற குறைந்த வீரிய மருந்துகளை அவசியம் வாங்கி பயன்படுத்திப் பாருங்கள். மூலக்கரைசல் ‘Q’ மற்றும் குறைந்த வீரியத்தில் உள்ள மருந்துகள் உங்கள் வெற்றியிலக்கை உறுதி செய்பவை என்பதை நம்புங்கள். இவ்வாறு செய்வது வெற்றி இலக்கை எட்டத் தவறினாலும் உங்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தாமல் மருத்துவ சேவையில் நிலைத்து நின்றிட உதவும். உயர்வீரிய மருந்துகளால் தோல்வியையும் பெயர் களங்கப் படுவதையும் கண்டிப்பாக தவிர்த்து விடலாம். சொட்டு மருந்துகளால் வெற்றி பெறாமல் போனாலும் விளைவுகள் கெடுதலாகி விடுவதில்லை என்பது மிகவும் உணரத்தக்கது. குறிகளுக்கேற்ற சொட்டு Q’ மருந்துகளை கொஞ்ச காலம் உட்கொள்ளக் கொடுத்து பின்னர் குறைந்த வீரியங்களை இணைத்து கொடுப்பது மாபெரும் வெற்றி இலக்கை நோக்கி நடத்தி முடிக்கும். கேன்சருக்கும், காசநோய்களுக்கும் மூலக்கரைசல் ‘Q’ சொட்டு மருந்தும் 1 முதல் 30 வரை வீரிய மருந்துகளையும் ஒரு நாளைக்கு காலை 7.00 மணி தொடங்கி 9 மணி வரை 5 முதல் 7 முறை வரை (டோஸ்களாக) இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு முறை மருந்தை கொடுத்து எப்படிப்பட்ட நோயையும் பிடறியில் காலிடற விரட்டி ஓடச் செய்துவிட முடியும். மக்களும் உங்களை கையெடுத்துக் கும்பிட்டு மிகப்பேருவகை பொங்கப் பாராட்டுவார்கள். மருத்துவ சேவைக்கு நீங்கள் கேட்காமலேயே பணத்தை மனமுவந்து மறுபேச்சு இல்லாமல் கொடுத்துவிடுவார்கள்.

       அதுமட்டுமன்றி புற்றுநோயையும் காச நோயையும் ஆஸ்துமாவை போன்ற அலோபதி யால் தீர்க்க முடியாதென்னும் 51 பட்டியல் நோய்களை ஓமி யோபதி மருத்துவத்தால் முற்றாக ஒழித்திட முடியும். குறுகிய கால அளவில் எந்த நோயானாலும் நமது முழுமையான மருத்துவத் தால் (Holistic Remadies) நிலையாக தீர்த்துக் காட்டினால் அடுத்த வீட்டு மருத்துவமான அல்லோபதி நோக்கிப் போக மக்கள் என்ன பைத்தியக்காரர்களாகவா இருப்பார்கள். நிச்சய மாக மக்கள் புத்திசாலிகள். நன்மையும் நல்லதீர்வும் உறுதியாக கிடைக்கு மென்று அறிந்து கொண்டால் நம்முன்னர் அணிவகுத்து வரிசையில் நிற்பார்கள். இது சத்தியவாக்கு.

மக்கள் நலன் காப்போம்!

ஓமியோபதியை வளர்ப்போம்!! 

Pin It