ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி தர மறுத்து வரும் ஒன்றிய ஆட்சி, மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியை பரப்புகிறது. ஒன்றிய ஆட்சியின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தனது திட்டங்களாக அறிவிக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகிறார்கள்.

மோடியின் படத்தோடு அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசுதான் செலவிட்டு வருகிறது என்பதே உண்மை. இதுகுறித்து இந்து ஆங்கில நாளேடு விரிவான செய்தியை வெளியிட்டு உள்ளது.

“ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தமிழ்­நாட்­டுக்­கான எந்­தப் புதிய சிறப்­புத் திட்­டத்­தை­யும் தர­வில்லை. அவர்­கள் மிகச் சில திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கும் பண­மும் முழு­மை­யாக இல்லை. அதில் கூடு­தல் பணம் போட்டு மாநில அர­சு­தான் அந்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றது. குடி­நீர் திட்­ட­மாக இருந்­தா­லும்– வீடு­கட்­டும் திட்­ட­மாக இருந்­தா­லும் – ஒன்­றிய அரசு ஒதுக்­கும் பணத்தை வைத்து செயல்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் மாநில அர­சு­தான் கூடு­தல் பணம் கொடுக்­கி­றது. சில திட்­டங்­க­ளுக்கு ஒன்­றிய அரசு ஒதுக்­கும் பணத்தை விட மாநில அரசு ஒதுக்­கீடு செய்­யும் தொகை அதி­கம். ‘படை­யப்பா படத்­தில் ரஜினி – செந்­தில் காமெடி பார்த்­தி­ருப்­பீங்க... ‘மாப்­பிள்ளை அவர்­தான் ஆனா சட்டை என்­னுது’ – என்­பார் ரஜினி. அது போலத்­தான் ஒன்­றிய அரசு பெய­ரி­லான திட்­டத்­துக்­கும் நிதி கொடுத்து வரு­கி­றோம். ஆனால் அப்­ப­டியே பிளேட்டை திருப்­பிப் போடு­கி­றார் உள்­துறை அமைச்­சர்”என்று உண்­மையை வெளிச்­சம் போட்­டுச் சொல்லி இருந்­தார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

பிர­த­மர் வீடு வழங்­கும் திட்­டம் (PMAY), பிர­த­மர் மீன்­வ­ளத் திட்­டம் (PMMSY), உயிர்­நீர் (Jaljeevan) எனப் பிர­த­ம­ரின் பெய­ரை­யும் ஸ்டிக்­க­ரில் பிர­த­ம­ரின் முகத்­தை­யும் தாங்­கிச் செயல்­ப­டுத்­தப்­ப­டும் திட்­டங்­க­ளுக்­கெல்­லாம் அவர்­க­ளைக் காட்­டி­லும் அதி­க­மாக தமிழ்­நாடு அர­சு­தான் நிதி ஒதுக்­கீடு செய்­கி­றது என்­பதை ‘இந்து’ ஆங்­கில நாளேடு அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றது. ஒன்­றிய அர­சின் 6 திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வ­தில் தமிழ்­நாடு அர­சின் பங்கு கூடு­த­லாக உள்­ளது என்று அந்­தக் கட்­டு­ரை­யில் சொல்­லப்­பட்­டுள்­ளது.

*ஜல் ஜீவன் திட்­டத்­தில், ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­கள் சம­மாக செல­வு­களை பகிர்ந்து கொள்­ளும் என அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், இதனை செயல்­ப­டுத்­தும் போது, மாநில அர­சின் பங்­க­ளிப்பு 55 சத­வீ­த­மாக உள்­ளது.

முதி­யோர் மற்­றும் கைம்­பெண் ஓய்­வூ­தி­யத் திட்­டங்­க­ளுக்கு 79 வயது வரை உள்­ள­வர்­க­ளுக்கு ஒன்­றிய அர­சின் பங்கு 300 ரூபா­யா­க­வும், 80 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு 500 ரூபா­யா­க­வும் உள்­ளது. ஆனால், இத்­திட்­டப் பய­னா­ளி­க­ளுக்கு ஆயி­ரத்து 200 ரூபாயை மாநில அரசு வழங்கி வரு­கி­றது.

தமிழ்­நாடு அரசு மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான தனது திட்­டத்­தின் கீழ், பய­னா­ளி­க­ளுக்கு ஆயி­ரத்து 500 ரூபாயை ஒவ்­வொரு மாத­மும் வழங்கி வரு­கி­றது.

பிர­த­மர் நகர்ப்­புற வீடு கட்­டும் திட்­டத்­தில் ஒரு வீட்­டுக்கு மாநில அரசு செல­வி­டும் மொத்த தொகை 2 லட்­சத்து 83 ஆயி­ரத்து 900 ரூபாய் ஆக உள்­ளது. இதில், ஒன்­றிய அர­சின் பங்கு 60 சத­வீ­தம் என அறி­விக்­கப்­பட்டநிலை­யில், ஒன்­றிய அரசு 50 சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே நிதி அளிக்­கி­றது.

100 நாள் வேலை­வாய்ப்பு உறு­தித் திட்­டம் மற்­றும் ஸ்வச் பாரத் மிஷன் எனும் கழிப்­பறை கட்­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளுக்கு கடந்த நிதி­யாண்­டில் ஒன்­றிய அர­சின் பங்­க­ளிப்பு 39 சத­வீ­த­மா­க­வும், மாநில அர­சின் பங்­க­ளிப்பு 61 சத­வீ­த­மா­க­வும் இருக்­கி­றது.

பிர­த­மர் பெய­ரில் உள்ள மீன­வர்­கள் மற்­றும் மீன்­பி­டித் தொழி­லா­ளர்­­களுக்­கான திட்­டத்­தில் ஒன்­றிய அர­சின் பங்கு 60 சத­வீ­தம் என அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், இத்­திட்­டத்­தில், ஒன்­றிய அர­சின் பங்கு 27 சத­வீ­த­மா­க­வும் மாநில அர­சின் பங்கு 73 சத­வீ­த­மா­க­வும் உள்­ளது. இது­தான் ‘இந்து’ நாளேடே உறு­திப்­ப­டுத்­திய உண்­மை­கள் ஆகும். ஜல்­ஜீ­வன் திட்­டத்­துக்கு தமிழ்­நாடு அர­சின் நிதி 55 விழுக்­காடு தரப்­ப­டு­கி­றது. பிர­த­மர் நகர்ப்­புற வீடு கட்­டும் திட்­டத்­துக்கு தமிழ்­நாடு அர­சின் நிதி 50 விழுக்­காட்­டுக்கு மேல் தரப்­ப­டு­கி­றது. 100 நாள் வேலை­வாய்ப்பு உறு­தித் திட்­டம் மற்­றும் ஸ்வச் பாரத் மிஷன் எனும் கழிப்­பறை கட்­டும் திட்­டங்­க­ளுக்கு தமிழ்­நாடு அர­சின் நிதி 61 விழுக்­காடு தரப்­ப­டு­கி­றது.

பிர­த­மர் பெய­ரில் உள்ள மீன­வர்­கள் மற்­றும் மீன்­பி­டித் தொழி­லா­ளர்­க­ளுக்­கான திட்­டத்­துக்கு தமிழ்­நாடு அரசு 73 விழுக்­காடு நிதி தரு­கி­றது. திட்­டம் அவர்­க­ளு­டை­யது, நிதி தமிழ்­நாடு அர­சி­னு­டை­யது. இதை வைத்­துத்­தான், ‘மாப்­பிள்ளை அவ­ரு­தான், சட்டை என்­னு­டை­யது’ என்­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

தமிழ்­நாட்­டுக்கு தர வேண்­டிய நிதி­யைத் தரு­கி­றார்­களா என்­றால் அது­வும் இல்லை. ஒருங்­கி­ணைந்த கல்வி இயக்­கத்­தின் கீழ், ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து வரப்­பெற வேண்­டிய 2,152 கோடி ரூபாய் நிலு­வை­யி­லேயே உள்­ளது. இது மாநில அர­சின் நிதிச்­சு­மை­யாக மாறி­விட்­டது. தேசிய உயர்­கல்வி இயக்­கத்­தின் (RUSA) கீழ் செயல்­ப­டுத்­தப்­ப­டும் திட்­டங் க­ளின்­மீ­தும் புதிய கல்­விக் கொள்­கையை ஒன்­றிய அர­சு­ தி­ணிப்­ப­தால், ஏற்­பட்ட விளைவு இது.

ஃபெஞ்­சல் புய­லா­னது ஏற்­ப­டுத்­தி­யுள்ள பேர­ழி­வு­க­ளைக் குறிப்­பிட்டு, தற்­கா­லிக மற்­றும் நிரந்­தர நிவா­ர­ணம் மற்­றும் மீட்­புப் பணி­க­ளுக்கு 6,675 கோடி ரூபாய் தேவைப்­ப­டும் என கேட்­கப்­பட்­டது. நிதி வர­வில்லை. மிக்­ஜாம் புயல் தாக்­கி­யது. அதற்­குக் கேட்ட நிவா­ர­ண­மும் வர­வில்லை. தமிழ்­நாட்­டில் ஏற்­பட்ட மூன்று இயற்­கைப் பேரி­ட­ருக்கு மாநில அரசு கோரிய 37,906 கோடி ரூபா­யில் ஒரு­ச­த­வீ­தம்­கூட இது­வரை தரப்­ப­ட­வில்லை.

நமக்கு வர­ வேண்­டி­ய­தும் வர­வில்லை. அவர்­கள் தர வேண்­டி­ய­தும் தர­வில்லை. இது­தான் ஒன்­றிய அர­சின் வஞ்­சக ஆட்­சிக்கு சாட்­சி­யங்­கள் ஆகும்.

 - விடுதலை இராசேந்திரன்