man in love failure 350ஒரு கைப்பிடி சாம்பலளவு
கோபத்தினால்
பெரும் கடலளவு அன்பை
தொலைத்து விட்டு
நிற்கிறேன் இன்று

தெய்வங்கள் நம்மைப் பார்த்து
கண்போட்டு விட்டன போலும்

முத்தமிடுதல் என்ற
ஒற்றைப் புள்ளியில்
தொடங்கிய நம் காதல்
உயிர் தீண்டி உடல் தீண்டி
இந்த பிரபஞ்சம் அளவுக்கு
வளர்ந்ததும்
நீ பிரிவதற்கோ

நீ பிரிந்த பின்பு
இந்த பிரபஞ்சம்
ஒரு சிட்டுக் குருவியின்
சிறகசைப்புக்குக் கூட
போதுமானதாக இல்லை

எப்படிப் பார்த்தாலும்
அற்றைத் திங்கள்
ஒரு தீராத ஏக்கம் தான்
நேசத்தை தொலைத்த மனிதர்களுக்கு

நினைவு ஒரு மாபெரும் குன்றாக
வளர்ந்து கிடக்கிறது
இதை எந்த வழியில் கடந்து போய்
நிஜத்தை தொடுவதோ தெரியவில்லை

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.