bird feedingகூட்டுக்குத் திரும்புகிறாள்
தாய்க் குருவி
இறக்கைகளில்
ஆகாயத்தின் எடையைத் தாங்கி.

அலகுகளுக்கு இடையே
நெளிகின்றன
சேகரித்த புழுக்கள்.
கூட்டில் காத்திருக்கின்றன
பசியில் அலறியபடி
விரியத் திறந்த
இளஞ்சிவப்பு வாய்கள்.

தன் மென்மையான சிறகுகளால்
சேய்களின் உடல்களை உரசி
உணவூட்டுகிறாள்.
அவை விழுங்கி முடிக்க
காத்திருக்கிறாள்.
ஆசுவாசத்தில்
எழுந்து இறங்குகிறது
நெஞ்சு.
விரிகிறது கூட்டின் மேல்
ஒரு நிழல்.

கிளையைப் பற்றுகின்றன
கூர்நகங்கள்.
அதிர்கிறது மரம்.
திறக்கிறது
இன்னோர் அலகு -
அதே பசி
வேறோர் கூட்டில்.

- ராமலக்ஷ்மி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.