மரம் வெட்டத் தெரியுமா?
மரத்தை வெட்டி சாலை மறியல் பண்ணத் தெரியுமா?

மது அருந்தத் தெரியுமா?
மது அருந்திக் கொண்டே
மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்யத் தெரியுமா?

கொடி பிடித்து கோசம் போடத் தெரியுமா?
கோசம் போட்டுக் கொண்டே கொலை வெறியைத்
தூண்டி விடத் தெரியுமா?
 
சாதிப் பெருமை பேசத் தெரியுமா?
சாதி பெருமை பேசிப் பேசியே
சேரிக் குடிசைக்குள் தீ வைக்கத் தெரியுமா?
 
சாதி விட்டு சாதி கூடாதெனச் சொல்லத் தெரியுமா?
கூடாதென சொல்லிக் கொண்டே
சேரிப்பெண்ணை வீடுபுகுந்து நாசம் செய்யத் தெரியுமா?

காதலிக்கத் தெரியுமா?
காதலித்துக் கொண்டே
காதலித்த பெண்ணின் மீது திராவகம் வீசத் தெரியுமா?
 
சமத்துவம் பற்றி பேசத் தெரியுமா?
சமத்துவம் பற்றி பேசிக் கொண்டே சாதி சங்கங்களைக் கூட்டி
சாதி வெறியைத் தூண்ட தெரியுமா?
 
ஆர்ப்பாட்டம் செய்யத் தெரியுமா?
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அரசாங்க சொத்தை
சூறையாடத் தெரியுமா?

அடாவடித்தனம் செய்யத் தெரியுமா?
அடாவடித்தனம் செய்து கொண்டே
அரசு அதிகாரிகளின் மண்டையை உடைக்கத் தெரியுமா?

ஓநாய்கள் போல ரத்தம் குடிக்கத் தெரியுமா?
ஒன்றுமில்லா காரியத்திற்கு ஒப்பாரி வைக்கத் தெரியுமா?
கள்ளச் சாராயம் காய்ச்சத் தெரியுமா?
கையெறிகுண்டு வீசத் தெரியுமா?

தமிழ்த் தேசியம் பேசத் தெரியுமா?
தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே
சேரித் தமிழனை படுகொலை செய்யத் தெரியுமா?

இவையெல்லாம் அடிப்படைத் தகுதிகள்
நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில்
உறுப்பினராவதற்கு…

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

14 comments

14
Guest
அருமை...
meeran
your are right, but please write the qualification to join in DMK, ADMK especially VCK. if you have fair and guts heart.
devan
உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான் உண்மைதான்
வாசுதேவன் .மு
தவறான கருத்து.முற்றிலும் மறுக்கிறேன்..மேற்கூறிய தகுதிகள் இருந்தால் பாமகவில் உறுப்பினர் ஆகலாம் என்பது ஆழ்ந்து சிந்திக்காத கருத்து.இந்த தகுதிகள் இருந்தால் அக்கட் சியின் தலைவர்/னிறுவனத்தலைவர்/வன்னியர் சஙத்தலைவர்/இளைஞரணித்தலைவர் ஆகலாம்.அப்பாவியாய் இருந்தால்போதும் உறுப்பினர்கள் ஆகலாம்
Anand
கட்டைபஞ்சாயத்து செய்யத்தேவை இல்லை. வன்முறைகள் செய்யத்தேவை இல்லை.
வே. பாண்டி, தூத்துக்குடி
மிக அருமையான கவிதை.
வழக்கறிஞர் நீதிமலர் அவர்களுக்கு பாராட்டுகள்.
மிகவும் அருமையான கருத்து வாசுதேவனுடையது..
கற்பகம்
அடித்து கொன்றவன் போராளி ஆனதால்,
செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்..

வீழ வைத்தவன் தலைவன் ஆனதால்,
வாழ வைத்தவன் விரோதி ஆகிறான்..

மனிதனை வெட்டியவன் புனிதனாய் ஆனதால்,
மரத்தை வெட்டியவன் மிருகமாய் ஆகிறான்..

கெடுநிலை தருபவன் நடுநிலை ஆனதால்,
விடுதலை கேட்டவன் தறுதலை ஆகிறான்.
rajkumar
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தோழா
kothandapani
தங்கள் நற்பெயருக்கும், கல்வித் தகுதிக்கும் பொருத்தமற்ற கவிதை
arunthathi
பிரசாதி ஒழிப்பு சாதி ஒழிப்பாகது. தன்சாதி ஒழிக்காமல் பிரசாதி ஒழிக்க கோருவது சாதி ஆதிக்கம் தான். சகோதர உறவு வேன்டாம் மாமன் மச்சான் உறவுதான் வேண்டும் என்பதும், இல்லை? அம்பெத்கர் என்ற பெயரை நோட்டிசில் போடவில்லை என்பதற்காக சென்னை சட்டக்கல்லுரியில் தேவர் சாதி மானவர்கள் சிலரை புரட்ச்சிகரர்களல்? புரட்ச்சி செய்ததை போல் பிரசாதியினர் மேல் புரட்ச்சி செய்வோம் என்று நீங்கள் செய்யும் பிரகடனத்தின் மூலம் நீஙள் ஆதிக்க சாதியாய் மற்றம் பெற்றுவிட்டீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொன்டுவிட்டோம் தாயே. மக்கள் முட்டல்கள் அல்ல.
advocate.neethimalar
கோதண்டபாணி அவர்களே என் பெயரை இதற்கு முன் நீங்கள் கேட்டதுண்டா. என் பெயரே நான் நீதியின் பக்கம் நிற்பதை உங்களுக்கு உணர்த்தும். நீங்கள் நீதி நியாயம் பேசுபவராக இருப்பவரென்றால் அதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். என் கல்வியறிவின் வெளிப்பாடே இந்த கவிதை. பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை நீங்கள் யார் பக்கமட் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அதற்காக நன்றிகள் பல.
ARUNTHATHI
மன்னிகவும் கருதுரிமயை மறுக்கும் கீற்றை இனி படிக்க மட்டேன். சாதிச்சார்பு இது.
advocate.neethimalar
நன்றி அருந்ததி நீங்கள் ஒருவர் கீற்றை புறக்கணிப்பதால் கீற்று செத்துவிடாது. அக்கிரமங்கள் உண்மையாகிவிடாது. பூனை கண்ணை பொத்திக்கொண்டால் உலகமே இருளாகிவிடுமா என்ன?
pagu
அருமை தோழர் வெகு அருமை . ஆழ்ந்த உண்மையை தோலுரித்துக் காட்டிய பொருள் பொதிந்த உண்மைக் கவிதை. நன்று!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.