இன்றும் புதினங்கள் நெடுங்கதைகள் சிறுகதைகள் என கதைகளை பிரிக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் குமுதினி 300 பக்கம் என்றாலும் உலகம் அதை நாவல் என்று அழைப்பது இல்லை. ஆங்கில நாவலாசிரியர் ஹென்றி ஹட்சன் உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் எதுவும் நாவல் கிடையாது என்கிறார். ஆனால் இது பழைய கருத்து இந்த வாட்ஸப் யுகத்தில் வாசிப்பு ஒரே மூச்சில் முடிப்பது மட்டுமல்ல நறுக்கு தெறித்தார் போல் உண்மையை வெளியிடுவது, வாசிக்கும் மனங்களை பாதிப்பது என மாறிவிட்டது.

சுப்ரபாரதிமணியனின் எழுத்து நெஞ்சை தொடும் சுடும் என்ற வகைப்பாட்டை சேர்ந்தது ரேகை : திருப்பூர் நாவல் ரத்தமும் சதையும் கலந்த மற்றொரு படைப்பு.

ஜாதகம் சோதிடம் பார்க்கும் பரம்பரை குடும்பத்தில் சிதையோடு தொடங்கும் கதை நவீன நாடகக்காரர் சுப்பையா முதல் விலைமகள் பரமேஸ்வரி கடும் உழைப்பாளியான அமலம்,. கிறிஸ்துவ போதகர், கள்ளநோட்டு கோபால் என விரியும் யதார்த்த உலகம் புதிய திருப்பூரை டாலர் நகரமாக நம்முன் விரிய வைக்கிறது. கலை இரவில் வரும் தங்கர்பச்சானும் பாலாஜி சக்திவேலும் கூட பாரதி வேசம் சுப்பையாவை பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய குறும்பட டைரக்ஷன் கனவு பலிப்பதே இல்லை.எம்பில் பிராஜெக்ட் செய்யும் ரத்தினவேல் உட்பட நாம் அனைவரும் நாவலோடு எளிதில் இறுதியில் ஐக்கியமாகி விடுகிறோம்.

கேம் கூலி முறை பற்றியும் அதன் ஒழிப்பு பற்றியும் விவரிக்கும்போது பீகார் நேபாள கூலிகள் குறித்த தனிப்பதிவு இந்த நாவலில் உள்ளது. அழுத்தமான ரேகை இது.

(ரூபாய் 125. பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் பக்கம் 142)

Pin It