கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது.
இது நமது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதோடு நம் சூரிய குடும்பத்தில் மிக அருகில் இருக்கும் Ryugu என்ற சிறுகோளுக்கு அடுத்து (177 மில்லியன் மைல்கள்) இருப்பது இதுவே ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த விண்கலம் 'OSIRIS-REx' (asteroid sample return mission) தரை இறங்கியதை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு மையம் Lockheed Martin Space Systems Facility in Littleton, Colorado, இதனை உறுதிப்படுத்தியது.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 'touchdown' என்று கூறி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 'touchdown' என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது, அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டான அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டில் எதிரணியினரின் கோல் கம்பத்தின் பக்கம் பந்தை தரையில் வைத்துவிட்டால் நமக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும். அதன் பெயர்தான் touchdown.
இந்த சிறு கோளில் தரையிறங்கிய விண்கலமானது அங்கிருந்து சிறிய அளவிலான கற்கள், தூசு, தாதுக்கள் பொருட்களை (Samples) பூமிக்கு எடுத்து வர உள்ளது. நாம் நினைப்பது போல அதிக நேரம் விண்கலம் அங்கு நிற்காது. குறைந்தது ஐந்து அல்லது பத்து வினாடிகள் மட்டுமே நிற்கும் பின்னர் சில காலம் அதனைச் சுற்றியே வட்டமிடும்.
இந்த சிறிய கால அளவுகளே அங்கிருந்து samples -களை எடுப்பதற்கு போதுமானது என்கிறார்கள். விண்கலம் சேகரித்த samples களின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் தோராயமாக 60 கிராம் மட்டுமே.
மொத்தமாக 2 கிலோகிராம் தூசிகளை கொண்டுவரும் படியாக விண்கலம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து எடுத்து வருவது மிகவும் சவாலான காரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த அளவு samples போதுமானது என்கிறது நாசா.
இதே போன்று ஒரு ஆய்வினை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் asteroid Ryugu -க்கு ஒரு விண்கலத்தை 2003 ஆம் ஆண்டில் அனுப்பியது. மிக நீண்ட பயணத்திற்கு பிறகு 2018ல் Ryugu சிறுகோளை சுற்றிவந்தது. எனினும் 2019 ஏப்ரல் மாதத்தில் தான் அது தரையிறங்கியது.
இதுதான் பூமியில் இருந்து astroid -க்கு செலுத்தப்படும் முதல் முயற்சி ஆகும். ஆனால், அதிலிருந்து சில மில்லி கிராம் அளவிலான samples மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த விண்கலம் இப்போது பூமிக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு 2020, வரும் டிசம்பர் மாதத்தில் அது ஆஸ்திரேலியா பகுதியில் தரையிறங்கும். ஆராய்ச்சியாளர்கள் அதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது பூகோளமும் எப்படி உருவானது என்று நாமும் காத்துக் கொண்டு இருப்போம்.
bennu என்ற சிறுகோள் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருக்காது. ஒரு பெரிய கட்டிடத்தின் உயரம் அளவில் (Empire State building) தான் இருக்கும், கரடுமுரடான பாறைகளைக் கொண்ட வட்ட வடிவில் இருக்கும்.
இது நம்முடைய பூமியைத் தாக்குவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்றாலும், 2700 சாத்தியக் கூறுகளில் ஒரு அளவு மட்டுமே பூமியை நோக்கி வரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வாய்ப்பும் கூட இன்னும் 150 ஆண்டுகளுக்கு இல்லை.
எதற்காக இந்த ஆய்வுகள்:
"பால்வழி அண்டம் உருவாக்கியதில் இருக்கும் மிச்சம் மீதி உள்ள கற்கள் தான் இந்த சிறு கோள்கள். இவைகள் பல பில்லியன் ஆண்டுகளாக நம்முடைய சூரிய குடும்பத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வகை கோள்களில் இருக்கும் மூலக் கூறுகளே ஆரம்ப காலத்தில் பிற கோள்கள் உருவாகுவதற்கு மூலத் காரணமாக கூட இருந்திருக்கலாம்" என்கிறார் Lori Glaze, director of NASA's planetary science division.
நமது சூரிய குடும்பம் எவ்வாறு உருவாகியது என்பதைக் கண்டறிய சிறு கோள்களின் மூலம் பெறப்படும் மூலக்கூறுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
OSIRIS-REX என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாசாவின் விண்கலம் 2016ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் Mike Darke இவரின் முயற்சியால் bennu என்ற சிறு கோள்களைப் பற்றிய ஆய்வு தொடங்கியது.
பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் 2011ல் நாசா இதற்கு ஒப்புதல் அளித்தது. இது சோகமான ஒரு சம்பவம் என்னவென்றால் நாசா ஒப்புதல் அளித்து சில மாதங்கள் கழித்து அவர் காலமாகிவிட்டார்.
இது மிகப்பெரிய விண்கலம் என்று நாம் கூறி விட முடியாது பார்ப்பதற்கு 15 வேன்கள் வரிசையில் நின்றால் எப்படி இருக்குமோ அதே அளவில் தான் இருக்கும்.
2018 ஆம் ஆண்டே இந்த விண்கலம் bennu -வை நெருங்கிவிட்டது என்றாலும் சரியான இடத்தில் samples சேகரிக்கும் இடத்தை இத்தனை நாட்களாக தேடிக்கொண்டு இருந்தது. தரையிறங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விஞ்ஞானிகளை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் அதில் மிக மோசமான தடிமனான பாறைகள் இருந்தன என்பதை விண்கலத்தில் உள்ள 3D புகைப்படங்கள் மூலம் கண்டறிந்தார்கள்.
ஆமாம் சரியாக தரை இறங்க வில்லை என்றால் இதன் நோக்கமே வீணாகிவிடும். அதிலிருந்து samples -களை விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த probe மூலமாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி பாறைகளை உடைத்த பின்னர் வெளிவந்த வாயுக்கள், தூசுகள் விண்கலத்திற்கு உள்ளே செல்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் இருந்து எடுக்கப்பட்ட sample -களை கணக்கிட எந்த ஒரு கருவியும் இல்லாததால் தோராயமாக 60கிராம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விண்கலம் அங்கேயே சுற்றி வரும் பின்னர் அங்கிருந்து பூமிக்கு மீண்டும் திரும்பி விடும். 2023 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் தரை இறங்குவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பூமியில் தரையிறங்கும் போது அது பேராஷூட் வடிவில் இருக்கும்.
சூரியனையும், பூமியையும், நிலவையும் கடவுள்தான் படைத்தார் என்று பல மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் நம்பிக்கைக்கு உரிய விடயம் அதில் நாம் தலையிடுவதில்லை. ஆனால் நம் பூகோளம் சூரிய குடும்பம் இவையெல்லாம் எவ்வாறு உருவாகியது என்று ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் விண்வெளி அறிஞர் கலிலியோ பூமி தட்டையாக இல்லை அது உருண்டையாக இருக்கிறது என்று கூறினார். அப்போது ஐரோப்பியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தினர் அவரை கடுமையாக எதிர்த்தார்கள்.
பின்னாட்களில் பூமி உருண்டையாக தான் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் கத்தோலிக்க மதத்தினர் அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த வரலாறு முக்கியமானது. (Source:https://www.theguardian.com/science/the-h-word/2016/jan/21/flat-earthers-myths-science-religion-galileo)
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தான் சூரிய குடும்பம் உருவாக்கியதில் இருந்து மிச்சமிருக்கும் சிறு கற்கள், கோள்களின் மேற்பரப்பில் இருக்கும் மூலக் கூறுகளை வைத்து பால் அண்டம் எப்படி உருவானது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியும். ஜப்பானிய விண்கலமும் நாசாவின் விண்கலம் பூமிக்கு தரை இறங்கிய பின் அதற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம்.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
உலகில் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படும் 'The Arecibo Observatory' என்ற தொலைநோக்கியை, தாங்கிப் பிடித்து மேலே செல்லும் 3 அங்குல கேபிள் ஒன்று அறுந்து விழுந்ததில், அதன் வட்ட வடிவ Dish -ல் நூறு அடி அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி காலை 2:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு மாத காலமாக சேதமடைந்த நிலையில் விண்வெளியில் இருந்து தகவல்களை பெற முடியாமல் இருக்கிறது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் எனும் அறிவியல் உலகமே வருத்தத்தில் இருக்கிறது.
ஏனென்றால், இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதாக இருந்தது. தொலைநோக்கி பழுதடைந்த நிலையில் இருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொலைநோக்கியின் முழு கட்டுப்பாடுகளும் அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மையமும், ஃப்ளோரிடா பல்கலைக்கழகம் National Science foundation and University of Central Florida -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதேவேளையில் நாசா விண்வெளி நிலையமும் இங்கிருந்து தகவல்களை பெற்றுக் கொள்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 'The Arecibo Observatory' தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக கருதப்பட்டது.
சரி, அதென்ன 2016 செப்டம்பர் வரை உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக இதை கருதினார்கள்? ஆம் 2016ஆம் ஆண்டு சீனா மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்றை கட்டிமுடித்து செயல்பாட்டுக்கு வந்தது, அன்று முதல் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி என்ற பெயரை அது எடுத்துக் கொண்டது. அந்த தொலைநோக்கியின் பெயர் The Five-hundred-meter Aperture Spherical Telescope, அல்லது FAST என்று அழைக்கப்படுகிறது. அதாவது 500 மீட்டர் சுற்றளவில் ஒரு வட்ட வடிவில் காணப்படுவதால் இதனை அவ்வாறு அழைக்கிறார்கள். FAST தொலைநோக்கி இதனை பற்றி கடைசியில் பார்ப்போம்.
The Arecibo Observatory இந்த தொலைநோக்கி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கரீபியன் தீவுகளில் இருக்கும் 'Puerto Rico' என்ற நாட்டில் (நாடு என்று கூறுவதைவிட அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்று கூறுவதே சரியானதாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாகவே இது கருதப்படுகிறது, நமது கிரிக்கெட் மொழியில் கூறுவதென்றால் 'மேற்கிந்திய தீவுகள்' அமைந்திருக்கும் பகுதி என்று அழைக்கலாம்) இருக்கிறது. Puerto Rico நாட்டில் இருக்கும் இந்த தொலைநோக்கியை மக்கள் தங்களது கலாச்சாரமாகவே பார்க்கிறார்கள்.
இதனை பூமியில் இருக்கும் லூனா (Luna என்றால் ஸ்பானிய மொழியில் நிலவு என்று பொருள்) என்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாட்டின் தலைநகரான 'San Juan' நகர வீதிகளில் ஆங்காங்கே தொலைநோக்கியின் படத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். 1963ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விண்வெளி ஆராய்ச்சியில் பயன்பாட்டுக்கு வந்தது. குறிப்பாக இங்கு Active Search for Extraterrestrial Intelligence or SETI என்று அழைக்கப்படும் Radio signal களை விண்வெளியில் அனுப்பி மீண்டும் இதே தொலைநோக்கில் வரவழைத்து ஆராய்ச்சி செய்வது. அதாவது Radio Signals for aliens civilization இதனை Arecibo messages என்றும் அழைக்கின்றனர்.
மேலும் இதன் வேறொரு சிறப்பு என்னவென்றால், பூமியை நோக்கி வரும் எரிகற்கள் அல்லது வேறு ஏதாவது கண்களுக்கு புலப்படாத பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை இந்த தொலைநோக்கியின் மூலம் கணக்கிட்டு வந்தார்கள், செய்திகளிலும் தெரிவித்தார்கள். அதாவது இந்த தொலைநோக்கியில் இருந்து தொடர்ச்சியாக செல்லப்படும் ரேடார் சிக்னல்கள் எதிரில் வரும் ஆப்ஜெக்டில் மோதி திரும்பி வரும் சிக்னல்களை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்த தொலைநோக்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மிக முக்கியமான வேறு ஒரு பணியையும் செய்து வருகிறது. புதிய பல்சர்ஸ், (Pulsars) சூரிய குடும்பத்தைப் போலிருக்கும் பிற நட்சத்திர கூட்டமைப்புகளை கண்டறிவது. பல்சர்ஸ் எனப்படுவது அதிகப்படியான மின்காந்தப் புலத்தை கொண்ட நட்சத்திரங்கள் சுற்றி வருவது ஆகும், highly magnetized neutron stars. இந்த நட்சத்திர அமைப்புக்களை கண்டறிவதற்கு இங்கிருந்து Radio waves களை அனுப்பி ஆராயப்பட்டது. (தரவுகள்; https://www.naic.edu/ao/node/750)
பொதுவாக எல்லா தொலைநோக்கி சொல்லும் ரேடியோ சிக்னல்களை அனுப்ப இயலாது. அவர்கள் ரேடியோ சிக்னல்களை தன்னுள் இருப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், Arecibo Observatory இந்த தொலைநோக்கி ரேடியோ சிக்னல்களை அனுப்பும் முடியும் அதை வேளையில் விண்வெளியிலிருந்து சிக்னல்களை பெறவும் முடியும் என்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
பூமியில் இருந்து 35 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகம் நமக்கு தெளிவாக தெரியும் காலம் எதுவென்றால் அது ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 31ஆம் தேதி பூமிக்கு மிகவும் அருகில் வந்து இருக்கிறது அந்த சமயத்தில் கூட இந்த தொலைநோக்கியில் இருந்து பல தகவல்களை பெற்று இருக்கிறார்கள் (நாசா செய்திக் குறிப்பு).
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகம் நமக்கு அருகில் வருவதாக இருந்தது. இப்போது தொலைநோக்கி பழுதாகி இருப்பதால் ரேடார் மூலம் தகவல்கள் எதுவும் பெற முடியாத நிலையில் இருக்கிறது. இந்த முறையை நாம் தவறவிட்டால் அடுத்து 2067ல் தான் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வரும். 2020 ஆம் ஆண்டை நாம் தவறிவிட்டோம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டு இதே தீவில் மரியா சூறாவளி மிகக் கொடூரமாக தாக்கியது. அப்போதுகூட இந்த தொலைநோக்கி அமைந்திருக்கும் இடமும் சேதமடைந்தது. இருந்தாலும் அந்த பகுதியை நீக்கி கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வுக்கு அது திரும்பியது. இப்போது மீண்டும் இதே தொலைநோக்கி பழுதடைந்து இருப்பதால் அறிவியல் உலகில் பெருத்த சோகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னரே நாம் கூறியதுபோல 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவின் பிங்டாங் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட FAST என்ற தொலைநோக்கி உலகில் மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 180 மில்லியன் டாலர்கள் ஆகும். 500 மீட்டர் பரப்பளவு தொலைவில் அமைந்திருக்கிறது.
இரண்டாவது பெரிய தொலைநோக்கியை விட 195 மீட்டர் அளவுக்கும் பெரிதாக அமைந்துள்ளது. இதனை சுற்றி அமைந்துள்ள 6 கிலோமீட்டர் அளவில் குடியிருப்புகளை அகற்றி 8000 மக்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிக் இருக்கிறது சீன அரசு. ஏனெனில் இந்த தொலைநோக்கி சுற்றி மூன்று மைல்கள் அளவுக்கு அதன் ரேடியேஷன் தாக்குதல் இருக்குமாம்.
இங்கு முக்கியமாக பல்சர்ஸ்களை ஆர்யாசி செய்கிறது (Studying interstellar communication signals) இந்த தொலைநோக்கி. 1351 சூரிய ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பல்சர்ஸ்களை கண்டுபிடிக்க இது உதவும் என்கிறார்கள் இங்குள்ள ஆய்வாளர்கள். இது மிகவும் துல்லியமாக அளக்கும் கருவியாக செயல்படுகிறது. நமது சூரிய குடும்பங்களைப் போல பிற கேலக்ஸிகளில் இருந்து வெளியேறும் ஹைட்ரஜன்களை அளவிட முடியும்.
அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் நகரும் வேகத்தை அளவிட முடியும் என்கிறார்கள். இங்கிருந்து செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை பெற முடியுமா? என்ற தகவல்கள் எதுவும் இல்லை.
சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட உலகின் பெரிய தொலைநோக்கிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? என்பது தெரியாது. ஆனால், அமெரிக்காவின் ஹவாய் மாகானத்தில் புதிதாக கட்டத் திட்டமிட்டிருக்கும் ஒரு தொலைநோக்கிக்கு இப்போதே அங்குள்ள பழங்குடி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. TMT என்றழைக்கப்படும் Thirty Meter Telescope ஹவாயின் Mauna Kea என்ற தீவில் கட்டமைப்பதாக இருந்தது. இது முற்றிலும் நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டது இதனை The largest optical telescope என்றும் அழைக்கிறார்கள்.
இந்த தீவுப் பகுதியில் காணப்படும் அதித வெப்பநிலை மற்றும் 13,287 அடி உயரத்தில் அமைந்த மலைப்குதிகள் தொலைநோக்கி அமைய சாதகமாக இருந்தன. சாதாரண தொலைநோக்கியை விட 12 மடங்கு அதிகம் துல்லியமாக அளவிடும் கருவியாக இருக்குமாம். இங்கு ஏற்கனவே 13 வேறுவைகயான தொலைநோக்கிகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டத்தினால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.
காரணம் இங்குள்ள எரிமலை வெடிப்பு சம்பவங்கள் ஆகும். புதிய தொலைநோக்கியினால் மேலும் எரிமலைகள் வெடிக்க கூடாது என்பதும் மக்களின் நோக்கமாக இருக்கிறது. மேற்கு ஆப்பரிக்கா அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டின் காலனி பகுதியான Canary Islands - ல் Plan B திட்டத்தின் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் விண்வெளி ஆராய்ச்சிகளும் நமக்கு தேவை அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து உருகி வரும் நட்சத்திரங்களைக் கண்டதும் "வெள்ளி தண்ணி தாகம் எடுத்து உருகி வருது, தூ...தூ….தூ…" என மூன்று முறை நிலத்தில் துப்புவார்கள். மூன்று முறை துப்புவது மூடப் பழக்கமாக இருக்கலாம், ஆனால் நட்சத்திரம்/விண்கற்கள் உருகி வந்தது உண்மை. இதுதான் 'Unidentified Flying Object' என்கிறார்கள்.
நமது ஊர்ப் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றுவதற்காக பேய் வருகிறது பூச்சாண்டி வருகிறது என்று எப்படி சொல்கிறார்களோ, அதே போல்தான் மேற்கத்திய நாட்டு உலகத்தில் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் ஏலியன்ஸ்கள் நம்மை அவர்கள் கிரகத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்கள் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவார்கள்.
யுஎஃப்ஒ காணப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும். முதன் முதலில் யுஎஃப்ஒ தோன்றிய சம்பவத்தைக் காண நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குத் தான் செல்ல வேண்டும். ஆம், இயேசு கிறிஸ்து ஜெருசலேம், பெத்லகேமில் பிறந்ததாக அறியப்பட்டு, வானியலைக் கணிப்பவர்கள் அவரைக் கண்டு வழிபட்டுச் செல்ல ஜெருசலேம் நகருக்கு வருகிறார்கள். ஜெருசலேம் பகுதியை உள்ளடக்கிய யூதேயா பிரதேசத்தின் ராஜா ஹேரால்டை சந்தித்து தாங்கள் வந்ததின் நோக்கத்தை தெரிவிக்கிறார்கள்.
"கிழக்கில் நட்சத்திரம் ஒன்று உதித்ததை நாங்கள் பார்த்தோம். இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் பிறந்திருக்கிறார். யூதர்களின் ராஜா எங்கே? நாங்கள் அவரை வணங்க வேண்டும்" என்கிறார்கள். (பைபிளின் தமிழ் பதிப்பில் 'சாஸ்திரிகள்' என்றும், ஆங்கிலத்தில் 'Wise men' என்றும் கூறப்படுகிறது. வேல்பாரியில் வரும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழரைப் போன்ற நபர்கள்) இந்த செய்தியைக் கேட்டு பயந்து போய் நடுங்கி இருப்பான் ஹேரால்ட். தனியாக அந்த அறிஞர்களை அழைத்து "அந்த நட்சத்திரம் தோன்றிய காலத்தை கணித்துச் சொல்லுங்கள். நீங்கள் போய் முதலில் அந்த குழந்தையைப் பாருங்கள் பின்னர் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்பான்.
வானிலை அறிஞர்கள் அதைக் கேட்டு கிளம்பியதும் அந்த நட்சத்திரம் அவர்களுக்கு காட்சி அளிக்கும். அவர்கள் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள். பெத்லகேம் நகரத்தில் வந்ததும் அந்த நட்சத்திரம் நின்று விடும். அந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவைக் காண்பார்கள் அந்த வானிலை அறிஞர்கள். பின்னர் அந்த நட்சத்திரம் பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. ஒருவேளை அது மறைந்திருக்கும். இதுதான் முதல் யுஎஃப்ஒ சம்பவம்.
பின்நாட்களில் இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நட்சத்திரம் நமது சூரிய கிரகத்திலுள்ள Venus மற்றும் Saturn என்ற இரண்டு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்ததாக இருக்கலாம் என்று கூறினார்கள். அது எந்த நட்சத்திரம்? அது எப்படி நகர்ந்து சென்றது? எப்படி தானாக மறைந்தது? என்று யாருக்கும் தெரியாது. அறிவியலாளர்கள் இது ஒரு தற்செயலான சம்பவம் என்கிறார்கள். இந்த நட்சத்திரம் தோன்றி மறைந்தது தான் முதல் யுஎஃப்ஒ சம்பவமாக இருக்கலாம்.
நவீன யுஎஃப்ஒ-களைப் பற்றியதான காலம் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் ஐடோகோ மாகாணத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தர் மற்றும் விமானி Kenneth Arnold. இவர் ஜுன் மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய விமானத்தில் (இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம்) Washington’s Mount Rainier அருகில் பறக்கும் போது தன்னுடைய விமானத்தின் அருகில் மூன்று பறக்கும் தட்டுகள் (flying disc or saucer) 'V' வடிவில் தன் விமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக 1700 mph வேகத்தில் பறந்து சென்றதாகத் தெரிவித்தார். இந்த யுஎஃப்ஒ கதை உடனே அந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் சோதனைப் பயிற்சிக்காக அந்தப் பகுதியில் பறந்திருக்கலாம் என்றே அவர் நம்பினார். ஆனால், அப்படி ஏதும் பயிற்சிகள் அந்தப் பகுதியில் நடைபெற வில்லை என்று விமானப் படை அறிவித்தது. பின்னர் விமானப் படை அமைப்பு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து 'operation sign' என்ற பெயரில் இதிலிருக்கும் உண்மைகளை ஆராயத் தொடங்கினர். 1948ல் Kenneth Arnold பார்த்ததாக கூறப்படும் யுஎஃப்ஒ-களில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டது. கடைசி வரையில் தான் கண்டது நிஜம் என்றே தன்னுடைய நிலைப்பாட்டில் நின்றார் Kenneth Arnold.
இதே ஆண்டில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் (Roswell, New Mexico) என்ற கிராமத்திலிருந்து 75 மைல்கள் தொலைவிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த பாலைவனப் பகுதியில், ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் வழக்கத்திற்கு மாறான உடைந்து போன பொருட்களையும், அதனுடன் வித்தியாசமான மனித உருவங்கள் போன்ற பொம்மைகளையும் தற்செயலாகப் பார்க்கிறார். உடனடியாக தகவல் அருகில் உள்ள விமானப் படை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை காலநிலை கண்டறியப் பயன்படுத்திய பலூன் ஒன்று வெடித்துச் சிதறியது எனக் கூறி அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இது ஏலியன்ஸ் பயன்படுத்திய ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியில் தரையிறங்கிய போது வெடித்துச் (crash-landing) சிதறியது என்ற செவி வழிக் கதை அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. அடுத்த நாள் உள்ளூர் செய்தித்தாள் "RAAF Capture Flying saucer in Roswell region," என்று முதல் பக்க செய்தியாக இதனை வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கூட்டியது. மக்கள் இன்றளவும் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்கள் நமது பூமியில் உள்ள பொருட்கள் இல்லை எனவும், அவைகளெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
1950 காலகட்டங்களில் அமெரிக்க இராணுவம் சோதனை முயற்சியாக அதிகப்படியான 'dummy troops' பொம்மை வீரர்களை உருவாக்கி வானத்திலிருந்து கீழே விழும் சோதனைகள் செய்து கொண்டிருந்தார்கள். வானத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பைலட் கீழே விழுந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற சோதனை தான் நியூ மெக்சிகோ பகுதிகளில் நடைபெற்றது. அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என மக்களால் நம்பப்பட்டது. இன்றளவும் மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து 'ஏலியன்ஸ் இங்குதான் தரையிறங்கி இருக்கிறார்களா' என்று வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள். மேலும் இது ராணுவத்தால் பாதுகாக்கப்படும் classified செய்யப்பட்ட பகுதியாகும்.
1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா விமானப் படை நிர்வாகம் 231 பக்க அறிக்கையில், ஏலியன்ஸ் வந்து இறங்கியதற்கான சான்று ஏதுமில்லை, case closed என அறிவித்து விட்டார்கள். இந்தப் பகுதி இப்போது ஒரு யுஎஃப்ஒ சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
கடவுள், யுஎஃப்ஒ, ஏலியன்ஸ் இவைகளைப் பற்றி அமெரிக்க அறிவியலாளர் Carl sagen, Science Friday என்ற வானொலி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக எடுத்துரைத்தார். "1947 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ ராஸ்வெல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலியன்ஸ் வகையான பொம்மைகளை மக்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்ததாகவே நம்பினார்கள். ஆனால், இராணுவம் அந்தப் பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்து இது ஒரு வகை பலூன் தான் என்றும், நாங்கள் அதனுள் வைத்தது சோதனைப் பொம்மைகள் தான் என்றும் கூறியது."
"யுஎஃப்ஒ என்பது கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் பறக்கிறது, அவ்வளவு தான்" என்றார் அவர்.
கடவுளைப் பற்றி அவர் கூறும்போது "கடவுள் தான் உலகைப் படைத்தார் என்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. அதனால், நான் அறிவியலை நம்புகிறேன்" என்றார்.
'Science' என்ற லத்தீன் சொல்லுக்கு அறிவு என்று பொருள் என்று கடைசியில் முடித்தார். (பேட்டி ஒலி வடிவில்; https://www.sciencefriday.com/stories/_sf_s=Ufo)
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏலியன்ஸ் பற்றிய வேடிக்கையான கதை ஒன்று பிரபலமாகியது. 'Area 51' என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நவேடா என்ற மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனப் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது. இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
The Archangel-12 என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள் வேகத்தில் பறந்து ஆகாயத்தில் இருந்து பூமியின் படங்களை எடுத்து அனுப்பியது. இந்த விமானங்கள் வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம். கடந்த ஆண்டு ஒரு Facebook event group மூலம் 'Storm Area 51' எனப் பெயர் சூட்டி இந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் ஏலியன்களை உள்ளே வைத்து சோதனைகள் நடைபெறுகிறது; இதனைப் பார்ப்பதற்காக ஒன்னரை மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் கையொப்பமிட்டு இருந்தார்கள். 'இந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம், இது அமெரிக்க அரசின் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்' என்றது அமெரிக்க விமானப் படை.
ஏலியன்ஸ் மற்றும் UFO (unidentified flying object) இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உலகளவில் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் ஐம்பது விழுக்காட்டினர் இவைகள் உண்மை தான் என்றே நம்புகிறார்கள்.
வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்திற்கும் காப்பீடு இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால், ஏலியன்ஸ் யுஎஃப்ஒ-களால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை 'alien abduction insurance' என்று அழைக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது. ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக நீங்கள் இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
'Storm Area 51' - இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் புதிதாக காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.
UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப் பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் Falcon Heavy test flight ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவினார். அதில் அவர் பயன்படுத்திய Tesla's roadster வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள். அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் 'Made in Earth by humans' என்று எழுதி இருந்தது. ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் 'இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது' என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது.
கடந்த 2019ல் அமெரிக்காவில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ-கள் காணப்பட்டதாக மக்களிடம் இருந்து தகவல் வந்ததாகக் கூறுகிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதுவே அமெரிக்க மக்கள் எந்தளவுக்கு இதன் மீது ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒன்று, இதனால் ஹாலிவுட்காரர்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.
சரி, ஒருவேளை யுஎஃப்ஒ மற்றும் ஏலியன்கள் உண்மையாகவே இருப்பதாக இருந்தால், அதனை ufologist போன்றோர்கள் ஆராய்ச்சி செய்து அறிவிப்பார்கள். அதுவரை... ஏலியன்ஸ் நேரில் வரட்டும், அவைகளை நாமும் பார்ப்போம், அப்போது நம்புவோம்.
(தரவுகள்: https://www.livescience.com/20645-ufo-sightings.html)
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
நமது சூரிய குடும்பத்தில் கடைசி கோளாக அறியப்பட்ட புளூட்டோ என்ற சிறிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை நமது அறிவியல் பாடத்திட்டத்தில் புளூட்டோ என்பது 9 ஆவது கோளாகவே அறியப்பட்டது. ஒரு கோளுக்கான எந்த ஒரு பிரத்தியேக தனித் தன்மையும் அதனிடம் இல்லையென இந்தக் கோளை ஆகஸ்ட் 2006ல் The International Astronomical Union (IAU) என்ற அமைப்பு 'dwarf planet' என அறிவித்து விட்டது.
IAU அமைப்பின் கூற்றுப்படி ஒரு கோள் என்றால் அதற்கென சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும். கோளுக்கான மூன்று சிறப்பம்சங்கள்: 1. சூரியனைச் சுற்றி (It is in orbit around the Sun) நீள்வட்டப் பாதையில் சுற்றி வர வேண்டும் 2. போதுமான நிறையோடு (It has sufficient mass to assume hydrostatic equilibrium) வட்ட வடிவில் இருக்க வேண்டும் 3. ஒரு ஈர்ப்பு விசையை உருவாக்கி தனது நீள்வட்டப் பாதையில் சுற்றியுள்ள பொருட்களை (It has “cleared the neighborhood” around its orbit) ஈர்பதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் பிற பொருட்களை (objects) தன்னுள் ஈர்த்து அந்தப் பாதையை தனக்கு மட்டும் உரியதாக மாற்றிக் கொள்ளவது. மூன்றாவதாகக் கூறிய கோட்பாடு புளூட்டோவுக்கு இல்லாததால் இதனை 'dwarf planet' அட்டவணையில் சேர்த்து விட்டார்கள்.
புளூட்டோவுக்கு தனியாக ஒரு சுற்றுவட்டப் பாதை இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் பக்கத்து கோளான நெப்டியூன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வெளியே வந்து விடும்.
ஒன்பதாவது கோள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக 1894 ஆம் ஆண்டே Lowell Observatory in Flagstaff, Arizona -வில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதற்கு 'Planet X' எனவும் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால், 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ல் தான் அதற்கு ஒரு முழுமையான புகைப்பட வடிவம் கிடைத்தது. அதைக் கண்டுபிடித்தாவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் Clyde W. Tombaugh. அப்போது அவருக்கு வயது 23. இரவு நேரத்தில் விண்வெளியைப் படமெடுத்து அதனை blink comparator என்ற இயந்திரத்தின் உதவியால் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு புகைப்பட வடிவத்தைக் கொண்டு வந்தார். அப்போது அந்தக் கண்டுபிடிப்பு உலகமுழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இதற்கு வேறு ஒரு புதிய பெயரை வைக்க வேண்டும் என 1000-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலித்து, கடைசியில் இங்கிலாந்தில் வசித்த 11 வயது சிறுமி Venetia Burney தேர்ந்தெடுத்த 'Pluto' என்ற பெயரை சூட்டினார்கள். புளூட்டோ என்றால் ரோமானிய கற்பனைக் கதைகளில் வரும் நிழல்உலகக் கடவுளின் பெயர். அறிவியலுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை. 'Pluto' என்ற பெயர் அவர்கள் பரிசீலித்த 1000 பெயர்களில் ஒரு பெயர். அவ்வளவுதான்.
மூலம்:https://www.loc.gov/everyday-mysteries/item/why-is-pluto-no-longer-a-planet/
புளூட்டோ நிலவை விட சிறியது. பார்ப்பதற்கு இதயம் போன்ற அமைப்பாகக் காட்சியளிக்கும். அதன் மொத்த ஆரம் (radius) 715 மைல்கள் (1,151 கிலோமீட்டர்). மொத்த பரப்பளவு 1400 மைல்கள் (2380 கிலோமீட்டர்). சூரியனிலிருந்து சுமார் 3.7 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து 40 மடங்கு அதிக தொலைவில் இருக்கும் இந்தப் பகுதியை 'kuiper belt' என அழைக்கின்றனர். இதில் ஒரு நாள் என்பது 153 மணி நேரங்கள் ஆகும். அதாவது, பூமியின் 6 நாட்கள் சேர்ந்தது தான் அங்கு ஒரு நாள்.
பாறைகள் மற்றும் பள்ளத்தாக்கு நிறைந்த பகுதி. இதில், மீத்தேன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் 'frost coat surface' போன்று அதிகம் காணப்படுகிறது. இங்கு வெப்பநிலை -375°F முதல் 400°F வரை இருக்கும். புளூட்டோவின் மேற்பரப்பு அதிகளவில் குளிர் நிறைந்த பகுதியாகும். புளூட்டோவுக்கு ஐந்து துணைக்கோள்கள் இருக்கின்றன. அதில் பெரியது 'Charon' ஆகும்.
ஒருவேளை நாம் புளூட்டோவில் வசிப்பதாக இருந்தால் 248 பூமியின் ஆண்டுகள் கழித்துதான் நமது முதல் பிறந்தநாள் வரும்.
Source:https://www.pri.org/file/2020-02-19/happy-birthday-pluto
- பாண்டி
- கருந்துளை...!!!
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம் - 2
- நாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..!!!
- கலீலியோ சில நிலவுகளைக் கண்டபோது... - சுனில் லக்ஷ்மண்
- விண்வெளி ஆய்வுகளின் பின்னணி என்ன ?
- வாயேஜர் - முடிவில்லா பயணி
- மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?
- வேற்று கிரகவாசிகள்
- செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா?
- விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?
- மா வெடிப்பு (BIG BANG) ஓர் ஆரம்பமா அல்லது தொடர்கதையா?
- வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !
- சூரியன்
- சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்
- சனியின் கதை..!
- வடக்கு வானின் அன்னத்தில் இரட்டைச் சூரியன்கள்!
- வேறு கோள்களில் உங்களின் வயது?
- சுருங்கி வரும் நிலா
- சூரிய குடும்பத்தின் வயது என்ன?
- விண்வெளிப் பயணம்