space telescopeஉலகில் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படும் 'The Arecibo Observatory' என்ற தொலைநோக்கியை, தாங்கிப் பிடித்து மேலே செல்லும் 3 அங்குல கேபிள் ஒன்று அறுந்து விழுந்ததில், அதன் வட்ட வடிவ Dish -ல் நூறு அடி அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி காலை 2:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஒரு மாத காலமாக சேதமடைந்த நிலையில் விண்வெளியில் இருந்து தகவல்களை பெற முடியாமல் இருக்கிறது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் எனும் அறிவியல் உலகமே வருத்தத்தில் இருக்கிறது.

ஏனென்றால், இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதாக இருந்தது. தொலைநோக்கி பழுதடைந்த நிலையில் இருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொலைநோக்கியின் முழு கட்டுப்பாடுகளும் அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மையமும், ஃப்ளோரிடா பல்கலைக்கழகம் National Science foundation and University of Central Florida -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேவேளையில் நாசா விண்வெளி நிலையமும் இங்கிருந்து தகவல்களை பெற்றுக் கொள்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 'The Arecibo Observatory' தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக கருதப்பட்டது.

சரி, அதென்ன 2016 செப்டம்பர் வரை உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக இதை கருதினார்கள்? ஆம் 2016ஆம் ஆண்டு சீனா மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்றை கட்டிமுடித்து செயல்பாட்டுக்கு வந்தது, அன்று முதல் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி என்ற பெயரை அது எடுத்துக் கொண்டது. அந்த தொலைநோக்கியின் பெயர் The Five-hundred-meter Aperture Spherical Telescope, அல்லது FAST என்று அழைக்கப்படுகிறது. அதாவது 500 மீட்டர் சுற்றளவில் ஒரு வட்ட வடிவில் காணப்படுவதால் இதனை அவ்வாறு அழைக்கிறார்கள். FAST தொலைநோக்கி இதனை பற்றி கடைசியில் பார்ப்போம்.

The Arecibo Observatory இந்த தொலைநோக்கி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கரீபியன் தீவுகளில் இருக்கும் 'Puerto Rico' என்ற நாட்டில் (நாடு என்று கூறுவதைவிட அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்று கூறுவதே சரியானதாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாகவே இது கருதப்படுகிறது, நமது கிரிக்கெட் மொழியில் கூறுவதென்றால் 'மேற்கிந்திய தீவுகள்' அமைந்திருக்கும் பகுதி என்று அழைக்கலாம்) இருக்கிறது. Puerto Rico நாட்டில் இருக்கும் இந்த தொலைநோக்கியை மக்கள் தங்களது கலாச்சாரமாகவே பார்க்கிறார்கள்.

இதனை பூமியில் இருக்கும் லூனா (Luna என்றால் ஸ்பானிய மொழியில் நிலவு என்று பொருள்) என்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாட்டின் தலைநகரான 'San Juan' நகர வீதிகளில் ஆங்காங்கே தொலைநோக்கியின் படத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். 1963ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விண்வெளி ஆராய்ச்சியில் பயன்பாட்டுக்கு வந்தது. குறிப்பாக இங்கு Active Search for Extraterrestrial Intelligence or SETI என்று அழைக்கப்படும் Radio signal களை விண்வெளியில் அனுப்பி மீண்டும் இதே தொலைநோக்கில் வரவழைத்து ஆராய்ச்சி செய்வது. அதாவது Radio Signals for aliens civilization இதனை Arecibo messages என்றும் அழைக்கின்றனர்.

மேலும் இதன் வேறொரு சிறப்பு என்னவென்றால், பூமியை நோக்கி வரும் எரிகற்கள் அல்லது வேறு ஏதாவது கண்களுக்கு புலப்படாத பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை இந்த தொலைநோக்கியின் மூலம் கணக்கிட்டு வந்தார்கள், செய்திகளிலும் தெரிவித்தார்கள். அதாவது இந்த தொலைநோக்கியில் இருந்து தொடர்ச்சியாக செல்லப்படும் ரேடார் சிக்னல்கள் எதிரில் வரும் ஆப்ஜெக்டில் மோதி திரும்பி வரும் சிக்னல்களை வைத்து மதிப்பிடப்படுகிறது.

இந்த தொலைநோக்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மிக முக்கியமான வேறு ஒரு பணியையும் செய்து வருகிறது. புதிய பல்சர்ஸ், (Pulsars) சூரிய குடும்பத்தைப் போலிருக்கும் பிற நட்சத்திர கூட்டமைப்புகளை கண்டறிவது. பல்சர்ஸ் எனப்படுவது அதிகப்படியான மின்காந்தப் புலத்தை கொண்ட நட்சத்திரங்கள் சுற்றி வருவது ஆகும், highly magnetized neutron stars. இந்த நட்சத்திர அமைப்புக்களை கண்டறிவதற்கு இங்கிருந்து Radio waves களை அனுப்பி ஆராயப்பட்டது. (தரவுகள்; https://www.naic.edu/ao/node/750)

பொதுவாக எல்லா தொலைநோக்கி சொல்லும் ரேடியோ சிக்னல்களை அனுப்ப இயலாது. அவர்கள் ரேடியோ சிக்னல்களை தன்னுள் இருப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், Arecibo Observatory இந்த தொலைநோக்கி ரேடியோ சிக்னல்களை அனுப்பும் முடியும் அதை வேளையில் விண்வெளியிலிருந்து சிக்னல்களை பெறவும் முடியும் என்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

பூமியில் இருந்து 35 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகம் நமக்கு தெளிவாக தெரியும் காலம் எதுவென்றால் அது ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 31ஆம் தேதி பூமிக்கு மிகவும் அருகில் வந்து இருக்கிறது அந்த சமயத்தில் கூட இந்த தொலைநோக்கியில் இருந்து பல தகவல்களை பெற்று இருக்கிறார்கள் (நாசா செய்திக் குறிப்பு).

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகம் நமக்கு அருகில் வருவதாக இருந்தது. இப்போது தொலைநோக்கி பழுதாகி இருப்பதால் ரேடார் மூலம் தகவல்கள் எதுவும் பெற முடியாத நிலையில் இருக்கிறது. இந்த முறையை நாம் தவறவிட்டால் அடுத்து 2067ல் தான் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வரும். 2020 ஆம் ஆண்டை நாம் தவறிவிட்டோம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டு இதே தீவில் மரியா சூறாவளி மிகக் கொடூரமாக தாக்கியது. அப்போதுகூட இந்த தொலைநோக்கி அமைந்திருக்கும் இடமும் சேதமடைந்தது. இருந்தாலும் அந்த பகுதியை நீக்கி கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வுக்கு அது திரும்பியது. இப்போது மீண்டும் இதே தொலைநோக்கி பழுதடைந்து இருப்பதால் அறிவியல் உலகில் பெருத்த சோகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னரே நாம் கூறியதுபோல 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவின் பிங்டாங் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட FAST என்ற தொலைநோக்கி உலகில் மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 180 மில்லியன் டாலர்கள் ஆகும். 500 மீட்டர் பரப்பளவு தொலைவில் அமைந்திருக்கிறது.

இரண்டாவது பெரிய தொலைநோக்கியை விட 195 மீட்டர் அளவுக்கும் பெரிதாக அமைந்துள்ளது. இதனை சுற்றி அமைந்துள்ள 6 கிலோமீட்டர் அளவில் குடியிருப்புகளை அகற்றி 8000 மக்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிக் இருக்கிறது சீன அரசு. ஏனெனில் இந்த தொலைநோக்கி சுற்றி மூன்று மைல்கள் அளவுக்கு அதன் ரேடியேஷன் தாக்குதல் இருக்குமாம்.

இங்கு முக்கியமாக பல்சர்ஸ்களை ஆர்யாசி செய்கிறது (Studying interstellar communication signals) இந்த தொலைநோக்கி. 1351 சூரிய ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பல்சர்ஸ்களை கண்டுபிடிக்க இது உதவும் என்கிறார்கள் இங்குள்ள ஆய்வாளர்கள். இது மிகவும் துல்லியமாக அளக்கும் கருவியாக செயல்படுகிறது. நமது சூரிய குடும்பங்களைப் போல பிற கேலக்ஸிகளில் இருந்து வெளியேறும் ஹைட்ரஜன்களை அளவிட முடியும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் நகரும் வேகத்தை அளவிட முடியும் என்கிறார்கள். இங்கிருந்து செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை பெற முடியுமா? என்ற தகவல்கள் எதுவும் இல்லை.

சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட உலகின் பெரிய தொலைநோக்கிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? என்பது தெரியாது. ஆனால், அமெரிக்காவின் ஹவாய் மாகானத்தில் புதிதாக கட்டத் திட்டமிட்டிருக்கும் ஒரு தொலைநோக்கிக்கு இப்போதே அங்குள்ள பழங்குடி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. TMT என்றழைக்கப்படும் Thirty Meter Telescope ஹவாயின் Mauna Kea என்ற தீவில் கட்டமைப்பதாக இருந்தது. இது முற்றிலும் நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டது இதனை The largest optical telescope என்றும் அழைக்கிறார்கள்.

இந்த தீவுப் பகுதியில் காணப்படும் அதித வெப்பநிலை மற்றும் 13,287 அடி உயரத்தில் அமைந்த மலைப்குதிகள் தொலைநோக்கி அமைய சாதகமாக இருந்தன. சாதாரண தொலைநோக்கியை விட 12 மடங்கு அதிகம் துல்லியமாக அளவிடும் கருவியாக இருக்குமாம். இங்கு ஏற்கனவே 13 வேறுவைகயான தொலைநோக்கிகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டத்தினால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

காரணம் இங்குள்ள எரிமலை வெடிப்பு சம்பவங்கள் ஆகும். புதிய தொலைநோக்கியினால் மேலும் எரிமலைகள் வெடிக்க கூடாது என்பதும் மக்களின் நோக்கமாக இருக்கிறது. மேற்கு ஆப்பரிக்கா அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டின் காலனி பகுதியான Canary Islands - ல் Plan B திட்டத்தின் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் விண்வெளி ஆராய்ச்சிகளும் நமக்கு தேவை அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- பாண்டி 

Pin It