மாதம் பத்து சுமந்து
மணிக்கணக்கில் கண் விழித்து
ஊர் மெச்ச பேர் சூட்டி
உறவோர் சூழ வளர்த்தவளை
பாராட்டி சீராட்டி
பள்ளிக்கு அனுப்பியவரே
பாடைக்கு அனுப்பியதேனோ?
மனதைக் கவர்ந்தவனை
மணாளனாக்க எண்ணியது குற்றமா?
மஞ்சளும் மாலையும் சூட்டியவன்
மாற்று சாதியாய்
இருந்தது யார் தவறு?
கனவுகள் பல சுமந்து
கணவனின் கரம் பிடித்து
இல்லறம் நுழைந்தவளைக்
கல்லறைக்கு அனுப்பியதேனோ?
சரிந்துவரும் சாதிக் கட்டமைப்பை
நிமிர்த்தி நிறுத்துவதற்காக
நடக்கும் இறுதிப் போரில்
ஆதிக்க வெறியினர்க்கு
இளஞ்சிட்டு இறையாகிப் போவதேனோ?
ஊர் வாய் பேசுமென
உன் சேய் அழித்ததேனோ?
சாதி கவுரவத்தைக் களபலியாக்க
காதல் திருமணத்தை ஆதரிப்போம்!
ஊர் சேரி ஒன்றிணைய
உதிக்கும் காதலை காத்துநிற்போம்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- அருண்சோரி
- பிரிவு: மக்கள் விடுதலை - அக்டோபர் 2014