தாய்மாமனாய் இருக்கவேண்டிய

தங்கை மகள் காதணி விழா


உடன்பிறந்தவனாய் முன் நிற்கவேண்டிய

சித்தி மகள் திருமணவிழா

மஞ்சள் நீரூற்றி விளையாடும்

அம்மன் கோவில் பொங்கல் விழா

கட்டிப்பிடித்து அழுததுபோக

கண்துடைத்து ஆறுதல் சொல்லவேண்டிய

பள்ளித் தோழனின் தந்தை மரணம் .......

இப்படி எத்தனையோ

நல்லவை கெட்டவைகளுக்குப்

போகமுடியாமல் போனது!

மரணமும் ஜனனமும் கூட

வார இறுதிகளில் மட்டுமே

வரட்டுமென மனம் வேண்டினாலும்

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

இந்தக்

கார்பரேட் உலகில்!

- உழவன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.