நீண்டு கிடக்கும் ஈரவாய்க்காலில்
தன் கொம்புகளை நீட்டி
புற்களின் முகம் தடவி
கற்களின் மீதேறி
மெல்ல ஊர்ந்தும் குறுகியும்
பாதுகாப்பாய் கொண்டு செல்கிறது
நத்தை
தனக்குப் பாதுகாப்பாய் இருக்குமென
ஒரு கூட்டை

- உழவன்

Pin It