உலக மயத்தின் (Globalization) 25 ஆண்டு நிறைவை நாட்டின் ஆளும் வர்க்கங்களும், அதன் ஆதரவு அறிவுஜீவிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். உலக மயம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்து இருபதைந்து ஆண்டுகள் முழுமையான விவாதங்கள் இல்லை. ஒரு பக்க சார்பு விவாதங்களைதான் பெரும்பாலும் ஊடகங்கள் செய்கின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, முதலீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடப்பட்ட கதவுகள்,தற்போது நூறு விழுக்காட்டை எட்டியுள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ( 100 % அந்நிய முதலீடா. பாதுகாப்பு கோவிந்தா..கோவிந்தா..) விட்டுவைக்கவில்லை. இந்தியச் சந்தையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் என வண்ணக் கனவுகள் காட்டப்படு கின்றன. பொய்களை மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசே குவித்து வருகிறது. மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கிறது. ஒற்றை இந்தியச் சந்தையாக இருந்தால்தான் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வசதியாக இருக்கும் என கார்ப்பரேட் தாசனான மோடியின் மத்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இயல்பும்கூட அதுதான்.
மாநிலங்களின் நிலைமைக்கேற்ப வரிகளிலோ, சட்டத்திலோ எந்த மாற்றமும் ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது – ஒரே முகமாக காட்சியளிக்க வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.
அண்மையில் தேசிய தகுதித்தேர்வு என அறிமுகப்படுத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களே இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என்ற விதியை நடுவண் அரசு கொண்டுவந்துள்ளது. மாநிலங்களிடம் இருந்த இந்த கல்வி அதிகாரமும் பறிபோகிறது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்படி நிறையச் சொல்லலாம். மக்களின் குறைந்த பட்ச தேவையைக்கூட ஒரு மாநில அரசால் நிறைவேற்ற முடியாது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ள முனைகிறது.
மத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு படிப்படியாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்குதான் தமிழக அரசுக்கு தரப்படுகிறது. இப்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், கலை, இலக்கியம், மொழி என அனைத்திலும் ஒற்றை முகமாக்கும், ஒற்றை தேசியத்தை கட்டியமைக்கும் மத்திய அரசின் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதா? உலக மயமாதலுக்கும் இதற்கு தொடர்பு இருக்கிறதா? மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு எப்படி இருக்கிறது?
வாருங்கள் விவாதிப்போம்.
நாள்: 16-07-2016 சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 5.00 மணி முதல் 9.00 வரை
இடம்: இக்சா கருத்தரங்க அறை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.
தலைமை. முனைவர்.சுப.மனோகரன், வழக்குரைஞர்
..........
சிறப்புரை:
பேராசிரியர் முனைவர் நாகநாதன் அவர்கள், முன்னாள் துணைத்தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு,
ஊடவியலாளர் மணிமாறன்,
எழுத்தாளர் கி.நடராசன்,
வழக்குரைஞர் கிறிஸ்டோபர் ஜெனிபர்
நன்றியுரை: திரைப்பட இயக்குநர் சிதம்பரம்
அனைவரும் வருக..! ஆதரவு தருக!!
- அறிவுச்சுடர் நடுவம்
மொட்டை தலைக்கும் முழம் பூவுக்கும் முடிச்சு போடுவதாக சிலர் நினைக்கலாம். ராஜீவ்காந்தி கொலையில் பல மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படவில ்லை. அல்லது மறைக்கபடுகின்றத ு. அண்மையில் மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி தோழர் பொன்.சந்திரன் அவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்துள்ள BY PASS
திரைப்படம் இன்னும் அந்த மர்ம முடிச்சுக்களை அதிகமாக்கி உள்ளது. பல அப்பாவிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக கொடும் சிறையில் அநீதியாய், மனித உரிமைகளுக்கு எதிராக தண்டனை அனுபவிக்கின்றனர ். ராஜீவ்காந்தி கொலையில் பல மர்ம முடிச்சுக்கள் எப்பொழுது விடைகள் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலைக்கும் உலகமயமாக்கலுக்க ும் என்ன தொடர்பு இருக்க இயலும்.
MURDER FOR GAIN is the most vital question criminal jurisprudence… அதாவது கொலையில் பலன் அடைந்தவர்கள் யார், கிரைமால் இலாபம் பெற்றவர் யார் என்பது குற்றவியல் சட்டத்தின் அடைப்படைகளில் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலையால் யார் இந்த 25 ஆண்டுகளில் பலன் அடைந்தவர்கள்..? இந்தியாவின் 25 ஆண்டுகள் அரசியல்-பொருளாத ார வரலாற்றை ஆராய்ந்தால் எளிதாக இந்த உண்மை புலப்படும்.
யார் அவர்கள்..? டாலர் கேள்வி அல்ல இது. எளிய உண்மை.
கார்ப்பரேட் கம்பெனிகள் இந்த கார்ப்பரேட் உலகத்தின் பின் உள்ள அமெரிக்க –இந்திய பெரு முதலாளிகள்தான் ..
1991 க்கும் முன்னும் பின்னும் நடந்த இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் என்ன.?
*1991 வரையில் பின்பற்றி வந்த சோசலிச கொள்கை ( இது சோசலிச கொள்கை இல்லை என்பது உலகறிந்த பெரும் இரகசியம்..) தூக்கி எறியப்பட்டது.
*1993 டிசம்பர் 15 ஆம் நாள் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்க வரையப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டு அதன் உறுப்பு நாடாகவும் சேர்ந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதா..?
*பாபர் மசூதி இடிக்கப்பட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளும் ஒரே நாளில் திசை திருப்பப்பட்டது . மடை மாற்றப்பட்டது. மக்கள் தங்கள் மீதான சுரண்டல்கள், அநீதிகளுக்கு கார்ப்பரேட் ஆதிக்க பொருளாதார கொடூரங்கள்,
*இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பல உலகமய ஒப்பந்தங்கள் நரசிம்மராவ் ஆட்சியில் கையொப்பமிடப்பட் டன. இன்று மோடி அரசு பாதுகாப்பு துறை உற்பத்தியில் 100 % அந்நிய நாட்டின், கார்ப்பரேட் கம்பெனிகள் முதலீடுக்கு அனுமதி அளித்து இந்த நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்க ி உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் நம்நாட்டின் என்ன நடந்திருக்கும். .? இந்துணை வேகத்தில் உலகமயம் நடந்திருக்குமா. .?!!
RSS feed for comments to this post