கூடுதல் கவனம் மின்மினி
நெடிய புல்வெளியில்
புத்தர் மௌனம்.
கூர்வாள் நுனியிலும்
பேசலாம் சமாதானம்
மரணம் வெகுதூரம்.
கேட்டதுண்டா குரல்
மூங்கில் மரக்குயிலின்
உள்மன அழகு.
அகலத் தோரண வாயில்
இறுக்கம் சூழ்ந்திருக்க
ஏது வழி தும்பீ.
அடிக்கடி சோர்வு
அடுத்த முறையேனும்
வானவில் பிடித்தாகணும்.
அந்திப் பூவும் மலர்ந்தாச்சு
பாடாதே சங்கீதம்
சிள்வண்டு இசை சுகம்.
அமைதியின் பொருள்
அறிவாயோ நீ
காற்றில் குருதி வாசம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
- விவரங்கள்
- நா.விச்வநாதன்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013