நீ எனக்கும், உனக்கும் நானும் - இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும், தேனும் (நீ)
தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேய மாக அமைவுற உறுதிசொல்! அடி (நீ)
கைம்பெண் என் றெண்ணங் கொண்டே
கலங்கினா யோகற் கண்டே?
காடு வேகு வதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி? ததி (நீ)
பைந்தமி ழைச்சீ ராக்கக்
கைம்மைஎன் னும்சொல் நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே!
இறந்த கால நடைமுறை தொலையவே. (நீ)
பகுத்தறிவான மன்று
பாவை நீஏறி நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல்
கோரமாக அழந்தொழிகுவதையே (நீ)
கருத்தொரு மித்த போது
கட்டுக்கள் என்ப தேது
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி! (நீ)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்