ஜெர்மனியில் உள்ள அழகிய இடங்களில் ஒன்று ராலின் சபர்க். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இங்கே ஹிட்லரின் படைகள் இருபது நாடுகளைச் சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக வைத்திருந்தன. ஈவிரக்கமின்றி கடுமையான வேலைகள் வாங்கியதோடு, இறுதியில் 92 ஆயிரம் பேரைக் கொன்று அவர்களின் சாம்பலை இந்த ஏரியில் தான் கரைத்தார்கள். அதனால் ஏரியின் முன் பெண் ஒருத்தியின் சோகச்சிலை ஒன்றை இங்கே நினைவுச் சின்னமாக எழுப்பியிருக்கிறார்கள். 

இச்சோகச் சிலையைச் செதுக்கிய சிற்பியின் பெயர் லாமெட். அந்த சிலையின் அருகில் அவர் எழுதிய வரிகள் “இனியொரு தடவை இப்படி நிகழக்கூடாது”

Pin It