முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும். முதலுதவியாக இதைச் செய்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தண்ணீருக்குப் பதில் இங்க், அரிசி மாவு, தேன், கோதுமை மாவு, எண்ணெய் போன்றவற்றை காயத்தில் பூசிக்கொண்டால் அது எரிச்சலையும், வலியையும் அதிகப்படுத்தும். மருத்துவமனையில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சோஃப்ராமைசின், சில்வர் சல்ஃபா டைஜினா போன்ற ஆசிட், தீக்காயத்துக்கான களிம்புகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.  

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.