தேவையான பொருட்கள்:

கேரட் - 200 கிராம்
நெய் - 400 கிராம்
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
மைதா மாவு - தேவையான அளவு
வெண்ணிலா எஸன்ஸ் - கொஞ்சம்

செய்முறை:

கேரட்டை மென்மையாகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அதனை நன்கு மசித்து மைதாவுடன் கரைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையைப் பாகுபோல் காய்ச்சி இந்தக் கலவையுடன் கலந்து கைபடாமல் கிளறி விட வேண்டும்.

கலவை சற்று கெட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து மறுபடியும் கிளற வேண்டும். கேரட் சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து நெய் கசியத் தொடங்கும்போது அதனுடன் முந்திரிப் பருப்பு, வெண்ணிலா எஸன்ஸ் சில துளிகள் விட்டு இறக்கி வைத்து விடவும்.

Pin It