தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1.5 லிட்டர்
வெல்லம் - 1000 கிராம்
திராட்சை - 75 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
முந்திரி பருப்பு - 250 கிராம்
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 15
நெய் - அரைக் கிலோ
பயத்தம் பருப்பு - அரைக் கிலோ
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அதேபோல் முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சட்டியில் 6 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளை கலந்து போட வேண்டும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப் பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் வேக விட வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும்.
பின்பு தேங்காய் துருவல், நெய் கியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து, இறக்கி விடவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு