தேவையான பொருட்கள்: பாசிபருப்புடன் நறுக்கிய காய்களை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். மிளகாய், தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும் வெந்த பருப்பு, காய்களுடன் அரைத்தவற்றை சேர்த்து, குழம்பு பதத்துக்குக் கரைத்து, அடுப்பில் வைக்கவும். 3 முறை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளித்துக் குழம்பில் சேர்க்கவும். இன்னும் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு, வெடித்ததும் அதையும் குழம்பில் சேர்க்கவும்.
வேக வைக்க: பாசிப் பருப்பு - 1.5 டேபிள் ஸ்பூன்
கத்தரிக்காய்/முருங்கைக்காய்/அவரைக்காய் = ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து = 200 கிராம்
அரைத்துக் கொள்ள:
சிவப்பு மிளகாய் : 6
சீரகம் : 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ : 1.5 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் : 3
சின்ன வெங்காயம் : 9
குழம்பில் கடைசியில் சேர்க்க :
1 எலுமிச்சம்பழம் - சாறு எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க:
நெய்: 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிது
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு : ருசிக்கு தகுந்தபடி
செய்முறை:
ரொம்ப நேரம் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் விடும்.(ருசி மாறி விடும்)
கடைசியாக எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்