தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு: 300 கிராம்
சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி
புளி: கைப்பிடி அளவு
கடுகு: அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய்: சிறிதளவு
நெய்: அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கில் உள்ள நீர் சுண்டும்வரை புரட்ட வேண்டும். நீர் சுண்டியதும் உப்பு சிறிது சேர்த்துக் கிளறி கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியினை ஊற்ற வேண்டும். பிறகு சாம்பார் பொடி 1 தேக்கரண்டி போட்டு நன்றாய் வெந்ததும், சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு பொரியல்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.