தேவையான பொருட்கள்:

முட்டைகோசு - 1
தேங்காய் - 1
தக்காளி - 50 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 10 கிராம்
மிளகு - அரைத்தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
புளி - 5 கிராம்
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியுடன் பாதி உப்புப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்துத் தோலை நீக்கி பழத்தை மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும். முட்டைகோசை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு, பாதி உப்பு போட்டு அடுப்பில் வைத்து மூடியால் மூடிவிட வேண்டும்.

முட்டைகோசு வெந்ததும் தண்ணீரை வடித்துவிட வேண்டும். கோஸின் இலைகளை சிறிது பிடித்து அரைத்த விழுதில் பாதியை எடுத்து தடவ வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து தேங்காய்ப் பாலில் விட வேண்டும். மீதிவிழுதைப் போட்டு கலந்து விட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்க வேண்டும். தக்காளி ரசத்தையும், உப்பையும் போட வேண்டும். தேங்காய்ப் பால், புளி, மசாலா கரைசலை விடவும். சுமார் 10 நிமிடம் அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். தண்ணீர் சுண்டி, மசாலாவானது கோசுடன் கலந்ததும் இறக்கி வைக்க வேண்டும்

Pin It