தேவையான பொருட்கள்: கசகசா, தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப் போட்டு சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். சற்று கொதித்தவுடன் உருளைக் கிழங்கினையும், உப்பையும் போட்டு குருமா கெட்டியானவுடன் இறக்க வேண்டும். இறக்கும் போது 2 அல்லது 3 துளி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு- கால் கிலோ
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்லு
பட்டை - ஒரு துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் - அரை மூடி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு குருமா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.