இலைகளில் இயற்கையாக நடக்கும் ஒளிச்சேர்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் வேதியியல் வல்லுநர்களுக்குப் பொறாமையாக இருக்குமாம். ஓரறிவுகூட இல்லாத பயிரினங்கள் மிகச் சுலபமாக காற்றிலுள்ள கரியமில வாயுவை - நுரைப்பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது மாதிரி உறிஞ்சி - அவற்றை சக்கரையாக மாற்றிக் கொள்வதைக் கண்டு அவர்களுக்கு வியப்பும் பொறாமையும்.

 இயற்கையைக் காப்பி அடிக்கும் கலைக்கு பயோ மிமிக்ரி என்று பெயர். நேனோ டெக்னாலஜிபோல பயோ மிமிக்ரி அல்லது பயோ மிமட்டிக்ஸ் என்ற அறிவியல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த யூகென் ஷாங் மற்றும் ஜாக்கி யின் என்போர் இலைகளின் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் காற்றிலுள்ள கரியமில வாயுவைத் திரட்டி மீத்தேன் என்கிற எரிவாயுவை (சாண எரிவாயு- வாகனங்களுன்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாம்) தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

 இவர்கள் கண்டுபிடிப்பில் மையமானது ஹெட்டிரோ சைக்ளிக் கார்பீன் என்ற கிரியா வூக்கியும் ஹைட்ரோ சிலேன் என்ற ஆர்கனோ சிலிக்கான் வகை ஆக்ஸி தணிப்பியுமாகும். கிட்டத்தட்ட கிரியாவூக்கியும் ஆக்ஸிதணிப்பியும் இலைகளின் ஒளிச்சேர்க்கை திட்டத்தை ஒத்தே செயல்படுகின்றன. இந்த செய்தியைக் கேட்டதும் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. சீக்கிரமே மனிதன் மாசுபடுத்தாத எரிசக்தியை அடைந்து விடுவான் என்ற நம்பிக்கைதான் காரணம்.

- முனைவர். க. மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It