கேட்கும்."அடக்கடவுளே...என்ன ஆட்டம் ஆடினான் இப்ப இப்படிக் கிடக்கிறானே.கிழம்... ஒன்னு போணா போயிடனும், இல்லன்னா முழிச்சிடனும். ரெண்டும் இல்லாம ஏன் இப்படி கோமாவில் கிடந்து நம்ம உயிரஎடுகிறானோ!'' இப்படி ஏடாகூடமாக கோமா நோயாளியின் முன்னாடி சிவிட்டீர்களா?பயப்படவேண்டாம் அவர்களுக்கு காது கேட்டாலும் முழித்துக்கொள்ளப் போவதில்லை.விழித்துக்கொண்டால், விழித்துக்கொண்ட சந்தோஷத்தில் கேட்டதையெல்லாம் மறந்துவிடுவார்கள். என்று நம்புவோம்.

கோமா என்பது தூக்கம்தான்.லேசான தூக்கம் ஆழ்ந்த தூக்கம்,மிக மிகஆழ்ந்த தூக்கம் என்கிற வரிசையில் கடைசிஎன்று வைத்துக்கொள்ளுங்கள். முன் மூளையில் பலவித மின் அலைகள் உண்டாகிறது. அதில் ஒன்று N400 என்கிற மின் அலை. எப்பவெல்லாம் ஒருவர்
பேசுவதை அர்த்தம் பண்ணிக்கொள்கிறாரோ அப்போதெல்லாம் இந்த அலை பிறக்கும்.
ஈஈஜி என்கிற கருவியின் மூலம் மூளை மின் அலைகளை அளக்கிறார்கள்.

நேற்று ஒரு யானை தண்ணீர் குடிக்கப் போவதைப் பார்ப்பேன்-இந்த வாக்கியம் பொருள்குற்றம் இல்லாவிட்டாலும் இலக்கணப் பிழை இருக்கிறது.யானை தண்ணீர் குடிக்கப் போவதை நாளை பார்ப்பேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஒரு யானை என் இடது காது வழியாக உள்ளே சென்று வலதுகாது வழியாக வெளியேறிவிட்டது என்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் முன் மூளையில் N400 அலைகள் தோன்றுவதை என்னால் பார்க்க முடியும்.சொன்ன வாக்கியம் இலக்கணப்படி சரியாக இருந்தாலும், பொருள் தவறாக இருக்கிறது. இதை மூளை அலசி ஆராயும்போது N400 அலைகளை அது வெளிப்படுத்தும்.

ஒரு முறை (1999)ஒரு நோயாளி கோமாவிது வெளிவந்து தான் கேட்டதையெல்லாம் புட்டுப் புட்டு வைத்தார். இது உண்மையாக இருந்தால், கோமா நோயாளிகளின் லைப் சப்போடிங் சிஸ்ட்டத்தை நீக்கிவிட்டு அவர்களை இயற்கையாகச் சாக அடிப்பது நியாயமா என்று கேள்வி பிறக்கிறது.

டல்லவுசி பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார்கள்கோமா நிலையில் உறங்கும் நோயாளிகள் 25 பேர்களின் முன்னே ""தி பிஸ்ஸா இஸ் டூ ஹாட் டு ஸிங்'' என்று பொருட் பிழையுடன் ரெக்காரடிங் போட்டு ஒலி எழுப்பினார்கள்.அவர்களின் மூளையி−ருந்து ச400 அலைகள்வெளிப்பட்டன. என்ன அர்த்தம்! கோமா ஆட்கள் உண்மையில்முழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் பேசவோ,அசையவோ முடியாமல் கிடக்கிறார்கள் என்றுதானே.நிறைய கோமா நோயாளிகள்நினைவு திரும்பிவிட்டிருந்தும்,அதை வெளிப்படுத்த முடியாமல், இருட்டுச்சிறைக்குள் கை கால்,வாய் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதுபோல் சிக்கிக்கிடக்கிறார்கள்.எத்தனை முயன்றும் விழிக்க முடியாமல் கிடக்கிறார்கள்.அவர்களது லைப் சப்போட்டிங் சிஸ்ட்டத்தை எடுத்துவிட்டால் செத்துப்போய்விடுவார்கள்.நிறையபேர் மாதக் கணக்கில் கோமாவில் இருப்பதால்சொந்தக்காரர்களின் ஒப்புதலுடன் லைப் சப்போட்டிங் சிஸ்ட்டத்தை டாக்டர்கள் எடுத்துவிடுகிறார்ள். ஐசி யூனிட்டில் நாளொன்றுக்கு 1000 ரூபாய் செலவு செய்து நொந்து போகிறார்கள்.

கோமா நோயாளி மீளும் நிலையில் இருக்கிறாரா?இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க N400அலைகள் அவர்களிடமிருந்து வருகிறதா என்று பார்க்கலாமே.அலைகள் வந்தால் ஆள் விழிப்புடன்தான் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம். வராவிட்டால்,போய் வாருங்கள் என்று அனுப்பிவிடலாம்.

Pin It