அடிபட்ட காயம் அழுகும்போது கசிந்து வெளிப்படும் ஒழுக்கே சீழ் ஆகும். தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்காக அமைந்த குருதியிலுள்ள சீர்குலைந்த வெள்ளை அணுக்களே சீழாகும்.
வெள்ளையணுக்கள் குருதியில் வாழ்ந்து மிகுந்த தொற்றை எதிர்த்துப் போரிடத் தயார் நிலையில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வெட்டு பழுதுபடும்போது ஏற்படும் தொற்றை எதிர்க்க வல்ல அணுக்கள் வெள்ளையணுக்கள் எனப்படும். குண்டூசியின் தலைக் கொண்டை அளவு குருதியில் சாதாரணமாக 5000 வெள்ளணுக்கள் இருக்கும். ஆனால் மிக அழுகிய புண்ணில் முப்பதாயிரம் வெள்ளணுக்கள் இருக்கலாம். ஏனெனில் அந்த இடத்தில் வெள்ளணுக்கள் ஒன்று திரண்டு பலவாய் பெருகிக்கொள்கின்றன.
குருதியில் உள்ள எதிர்பொருள்கள் கிருமிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. அவ்வாறு போரிட்டுக் கொல்லும்போது வெள்ளணுக்கள் அங்குச் சென்று அவைகளை அழித்துவிடுகின்றன. குருதியில் எதிர்த்து நின்று தொற்றை போக்கப் போதுமான தற்காப்புப் பொருள்கள் இல்லையென மருத்துவர் ஐயங்கொண்டால் அதே தொழிலைச் செய்யும் உயிர் எதிர்ப் பொருள்களைக் கொடுப்பார்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தோல் நோய்கள்