விநாயகன் சிலை ஊர்வலங்கள் மதம் சார்ந்தவை அல்ல; மதத்தின் அரசியலுக்காகவே நடத்தப்படுகின்றன. எனவே இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து ‘பெரியார் கைத்தடி’யை குறியீடாக்கி எதிர் ஊர்வலங்களை நடத்தி வந்தது. இந்த ஆண்டு எதிர்வினையாக புத்தர் சிலை ஊர்வலத்தை சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்தினார்கள். இந்துத்துவ மதவாத அரசியலுக்கு மாற்றாக மக்கள் சமத்துவத்தை மார்க்கமாக்கி பரப்பிய புத்தர் எதிர்வினையாக முன்னிறுத்தப்பட்டார். இது குறித்து பல விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. விவாதங்கள் தொடங்கும்போதுதான் பார்வையும் தெளிவாகும்; அந்த வகையில் விவாதங்களை வரவேற்கவே வேண்டும்.
இந்து மதத்திலிருந்து வெளியேறி அம்பேத்கர் - புத்த மார்க்கம் தழுவியபோது, எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று - ‘இராமன், விநாயகன்’ உருவங்களை வணங்க மாட்டோம் என்பதாகும்.
பெரியார் 1953ஆம் ஆண்டு விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் புத்தர் பிறந்த நாளாகக் கொண்டாடப் படும் மே 27ஆம் தேதி. “என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்; என்னை சூத்திரன் - வேசி மகன் என்று கற்பிப்பிப்பதற்காக உடைக்கிறேன் என்பதாக சொல்லிக் கொண்டே உடைக்க வேண்டும்” என்று பெரியார் அறிவுறுத்தினார்.
“புத்தர் நிறுவியது ஒரு மதம் அல்ல; தனக்கோ தான் நிறுவிய மார்க்கத்திற்கோ தெய்வீகம் இருப்பதாக அவர் கூறவும் இல்லை என்று அம்பேத்கர் - ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“தனக்கு தெய்வீகத் தோற்றுவாய் உண்டு எனக் கூறிக் கொள்ளா விட்டாலும் மோசே (Moses) தனது போதனைகளுக்கு தெய்வீக சக்தி உண்டு என்றார். ஏசு தனக்கே தெய்வீகம் உண்டு என்றார்; தான் கர்த்தரின் ஒரே குமாரர் என்றார். கிருஷ்ணன் தானே கடவுள், தனது உரையே கீதை என்றார். புத்தர் தனக்கோ, தனது அறவுரைகளுக்கோ இத்தகைய தெய்வீகம் எதையும் இருப்பதாகக் கூறிக் கொள்ளவில்லை. தனது அறவுரைகள் குறையே இல்லாதவை என்றும் அவர் உரிமை கோரவில்லை. தனக்கு ஏற்பட்ட புரிதல் வரை, விடுதலைக்கான உண்மையான வழி இதுவே என்றுதான் கூறினார்”
- என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.
இதே கருத்தையே பெரியாரும் கூறினார்.
“கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று புத்தர் எதைச் சொல்லி இருந்த போதிலும் அவர் கூறிய ஓர் உண்மைய மட்டும் யாருமே மறுக்க முடியாது. அதாவது எதையும் உன் சொந்த புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்” என்று அவர் சொல்லிய இந்த உண்மையை மட்டும் யாரும் மறுக்க முடியாது. இன்றுவரை புத்தரைத் தவிர வேறு யாருமே அவனவன் சொந்த புத்தியின்படி நட என்று சொல்லவே இல்லை” - என்றார் பெரியார். (‘விடுதலை’ 3.6.1956)
கடவுளை மறுக்கும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இப்போது ‘புத்தர் கடவுளை’ ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று சங் பரிவாரங்கள் கேட்கின்றன. புத்தரை போராட்ட அடையாளமாக்குவதா என்று வேறு சில முகாமிலிந்து எதிர்வினைகள் வருகின்றன. இந்தக் கேள்விகளுக்கு அம்பேத்கரும், பெரியாரும் தந்திருக்கிற விளக்கங்களே சரியான பதில்.
பார்ப்பனிய ஊடுறுவலால் புத்தரின் சிந்தனைகள் சிதைக்கப்பட்டதை வரலாறு கூறுகிறது. மியான்மரில் புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறும் சர்வாதிகார ஆட்சி, இஸ்லாமியர்கள் வெறுப்பைக் கக்குவதும், இலங்கை புத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதும் புத்த மார்க்கத்தின் நெறிக்கு நேர் எதிரானவை; வர்ணாஸ்ரமத்துக்கு எதிராக மக்கள் சமத்துவத்தைப் பேசுவதே உண்மையான ‘புத்த தம்மம்’ என்பதை பேராசிரியர் லட்சுமிநரசு போன்ற ஆய்வாளர்களும் அம்பேத்கரும் பெரியாரும் வெளிச்சமாக்கியுள்ளனர். அதுவே நாம் மதிக்கும் - பவுத்தம்!
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
மேலே குறிப்பிட்ட பாடலானது இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன் திருநாவுக்கரசர் அவர்களால் மகேந்திரவர்மன் ஐ நோக்கி பாடப்பட்டது திருநாவுக்கரசர் சைவ மார்க்கத்திலிரு ந்து சமண மார்க்கத்துக்கு செல்லும்போது எவரும் அவரை துன்புறுத்தவில் லை ஆனால் அவர் சமண மார்க்கம் பிடிக்காமல் மீண்டும் சைவ மார்க்கத்திற்கு வரும்போது சமணர்களால் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நாமார்க்கும் குடியல்லோம் என்று அதிதீவிர சமத்துவம் பேசப்படும் போது அவர்களுக்கு ஒரு தலைவன் தேவைப்படுகிற போது அவர் தானாகும் குடியல்லாத் தன்மையான குறிப்பிடுகிறார ் ஆகவே அதிதீவிர சமத்துவம் என்பது முதலாளித்துவத்த ை நோக்கியே நகரும் சமணர்களின் வினைக்கோட்பாடு நியூட்டனின் இயக்கவியல் மூன்றாம் விதியை போன்றது அதாவது வினைக்கு எதிர்வினை உண்டு
வினை = எதிர்வினை
வினை _ எதிர்வினை = 0
இதிலிருந்து புலப்படும் மெய்யியல் ஆனது சூனியவாதம் எனப்படும் அதாவது சூனியத்திலிருந் து எதிர்வினையும் வினையும் தோன்றுகிறது சைவம் இதை முற்றாக மறக்கிறது அவர்களின் கருத்துப்படி இல்லத்திலிருந்த ு உள்ளது தோன்றாது உள்ளதில் இருந்து தான் உள்ளது தோன்றும் இதை தற்காலத்து ஐன்ஸ்டினின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஒப்பிட்டு நோக்கலாம்
எல்லோரும் உண்மையைக் கண்டறியும் உண்மையான நோக்கத்தில்தான் மார்க்கங்களையும ் சமயங்களையும் உருவாக்கினார்கள ் சைவ சமயம் உலகிலுள்ள இனிமேல் வர உள்ள அனைத்து மெய்யியல் கோட்பாடுகளையும் நாலு வளையங்கள் பிரிக்கிறது இதில் புற புறத்தே உள்ள வளையத்தில் தான் பௌத்தம் சமணம் போன்றவை உள்ளடக்கப் படுகிறது அவர்களும் உண்மையை நோக்கித்தான் நகர்கிறார்கள் ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய பாதையின் இடைநடுவில் நிற்கிறார்கள் இலங்கையில் சென்ற வாரம் கூட பௌத்த மதத்தை பின்பற்றும் துறவிகள் தங்களின் துறவி ஒருவர் இறந்த உடலை அங்கேயுள்ள சைவக் கோயிலுக்கு அன்மையில் வைத்து நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தீ மூட்டி உள்ளார்கள்
RSS feed for comments to this post