மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிற வேத கால பார்ப்பனிய மதமான இந்து மதம், இந்தியத் துணைக் கண்டத்துச் சமூகங்களுக்கு எண்ணற்ற கொடுங்குற்றங்களை இழைத்திருக்கிறது. சமூகத்தைக் குறுக்கு, நெடுக்குவாக்கில் பல துண்டுகள் போட்டு, ஒருவரை மற்றொருவரிடமிருந்து தொடர்பற்ற நிலையில் நிறுத்திவிட்டது. வலிமையான உடல் உறுப்புகள் உள்ளவர்களையும் உளவியல் ரீதியில் ஊனப்படுத்தி வைத்துவிட்டது. மூளைக்குப் பண்பாட்டு விலங்கு போட்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெரும்வாரியான மக்களை முடமாக்கி வைத்துவிட்டது. தன்னைச் சீண்டுவோரிடம் கை, கால்கள் ஏதுமற்ற புழுகூட உடலை வளைத்து நெளிந்து தன் எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆறறிவும், ஆரோக்கிய மான உடல் அமைப்பையும் கொண்ட மனிதனோ அடக்குமுறைகளையும் தனக்கிழைக்கப்படும் கொடுமை களையும் கண்டு, சிறிய எதிர்ப்பைக் கூடக் காட்டாமல் சிறிதும் சலனமின்றிப் போய்க் கொண்டிருப்பதற்கு மூளைக்குப் போடப்பட்ட விலங்குதானே காரணம்?

இம்மண்ணில் விளைந்ததைச் சமமாகப் பங்கிட்டு மாண்போடு வாழ்ந்த பண்டைய பொதுவுடைமைச் சமூக வழிவந்தவர்களிடம் தனியுடைமை மூலம் ஆதிக்கப்படுத்துதல், அடிமைப்படுத்துதல் சிந்தனை எப்படி ஏற்பட்டிருக்கும்? இந்தியத் துணைக்கண்டத் தைப் பொறுத்தவரை, ஆரியரின் வருகைக்குப் பின்பே இவ்வாறெல்லாம் நடந்திருக்கின்றன. சாதி, மத, கடவுள் கோட்பாடுகள் எப்போது தலையெடுக்கத் தொடங்கினவோ, அப்போதே பிளவுகளும் பிணக்கு களும், ஆதிக்கமும் அடிமைத்தனமும் ஆரம்பமாகி விட்டன.

ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்திய பெண்ணினம், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பிறகு ஆணினத்திற்கு அடிமைப்பட்டுப் போனதுகூட இப்படித்தான். ஒட்டு மொத்தச் சமூகத்தையும் மேலிருந்து கீழாக-வருணங் களாகப் பிரித்துப் பிறகு பல்லாயிரம் உள்சாதிகளாகப் பெருக்கி, மேலிருப்பவனுக்குக் கீழிருப்போர் கட்டுப் பட்டவர்களாக ஆக்கி, அதுவே அடிமைப்பட்டுக் கிடப் பதற்கு அடிப்படையாகிப் போனது. மெல்ல, அதுவே பழக்கமாகியும் போனது. காலப்போக்கில் அதுவே சமூகச் சட்டமாகிப் போய்விட்டது.

பழைய பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதா யங்கள், பல கடவுள்கள் இவைகளெல்லாம் ஆசியக் கண்டத்தின் கூறுகள். இதற்குக் காரணம், இங்கிருக் கும் நிலப்பிரபுத்துவம், உலக நாடுகளெல்லாம் நிலப் பிரபுத்துவத்திலிருந்து முதலாளியத்திற்கும், சோசலியத் திற்கும் வெகுவிரைவில் மாற்றமடைந்தாலும், ஆசியா வில் சற்றுத் தாமதமாகத்தான் மாற்றம் நடைபெற்றது.

ஆனாலும் ஆசிய நாடுகளில் நிலப்பிரபுத்துவப் போக்கு முற்றாக முதலாளியத்துவத்திற்கு மாற்றமடையவில்லை. பழமையில் ஊறித் திளைக்கும் இந்தியாவில் நிலப் பிரபுத்துவம் இன்றளவும் செல்வாக்குடன் இருப்பதற் குப் பார்ப்பனியம் மிக முக்கியக் காரணம். ஆசியக் கண்டத்தில் பெரும் நிலப்பரப்பிலிருக்கும் சீனாவில் மாற்றம் நிகழ்ந்ததற்குக் காரணம், புத்தமும், மார்க் சியமும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்.

அதே ஆசியக் கண்டத்திலுள்ள இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் நடந்ததோ வேறு. முதல் கொடுமை, பவுத்தத்தை நாட்டைவிட்டு விரட்டியது; இரண்டாவது பெரிய கொடுமை பொதுவுடைமைத் தத்தவம் உள்ளே நுழையவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது. இதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவம் -சாதி -இந்துமதம் -பார்ப்பனியம். இந்த நேர்க் கோட்டில் சிந்தித்தால் இந்தியக் கட்டமைப்பிற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

அனைத்து உரிமைகளும் அனைத்து மக்களுக் கும் கிடைக்க வேண்டும் என்கிற பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிரானது இந்து மதம். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் நலன் காக்க வேண்டி, மீதியுள்ள மக்களையும் பல்வேறு சாதிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்து ஏணிப்படி வரிசையில் சமூகத்தைக் கட்டமைத்து, அதன்படியே உரிமைகளையும் அனுபவிக்கும்படி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம். என்றைக்கோ பைபிளில் பூமியின் வடிவம் தட்டை என்று எழுதப்பட்டிருப்பதற்காக இன்று கிருத்துவத் தலைமை ‘போப்’ மன்னிப்பு கேட்டாரே, என்றைக்கோ பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று மனுநீதியில் எழுதியதற்காகவும் தலித்துகளைத் தீண்டத் தகாதவர்களாக ஆக்கியதற்காகவும் எந்த இந்து மதத் தலைவனாவது இன்றுவரை மன்னிப்புக் கேட்டானா? ஏன் கேட்கவில்லை? நாத்திகனையும், பவுத்தனையும் தன்னுள் சேர்த்து இழுக்கத் தெரிந்த இந்து மதத்திற்கு மாற்றத்தையும், அறிவையும் ஏற்றுக்கொள்ளத் தெரியாதது ஏன்? அவ்வளவு காட்டுமிராண்டித்தன மான மதம்தான் இந்துமதம்.

வேள்வி என்ற பெயர்களில் விலங்குகளை நெருப் பில் போட்டுப் பொசுக்கித் தின்றவர்கள், தாம் உழைக் காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பார்ப்பனர்கள் எனச் சொல்லி 2500 ஆண்டுகளுக்கு முன்னே கேள்விகள் கேட்டு அறிவுப் புரட்சியை ஏற் படுத்தி, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து விரட்டிய வர் புத்தர். விரட்டப்பட்ட பார்ப்பனர்கள் தென்னாட்டில் தஞ்சம் புகுந்து, இந்நாட்டு வளங்களைத் தமதாக்கிக்

கொண்டார்கள். அந்தக் கூட்டத்து வெள்ளைத் தோலி லும், நயவஞ்சகப் புத்தியிலும் வீழ்ந்தே போனார்கள், ஏமாந்த சோணகிரிகளான இந்நாட்டு வீர மன்னர்கள். மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி. எழுச்சியுடன் எழுந்த புத்தகத்தை வீழ்த்தி, மீண்டும் இந்து மதம் கோலோச்சியது. பிறகென்ன? மீண்டும் மனுநீதி ஆட்சிதான். இந்திய அரசமைப்புச் சட்டம் இதற்குப் பாதுகாப்பு. நாடாளுமன்ற ஓட்டு அரசியல் இதற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. படித்தவர்கள் எல்லோருமாக இன்றளவும் விலை போய் கொண்டி ருக்கிறோம்.

வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலையாகி 67 ஆண்டுகள் கடந்தும் கூட, அதன் உரிமைகள் எல்லாத் தரப்பு மக்களிடமும் சென்று சேரவில்லை. வெள்ளைக் காரன் வருவதற்கு முன்னால் அடித்தட்டு மக்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்பட்டனவோ அதேபோலத் தான் இன்றும் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் விண்ணை முட்டும் அளவிற்கு முதலாளித்துவம் வளர்ந்திருக்கிறது. விஞ்ஞானம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே உள்ளங்கை அளவுக்குச் சுருங்கியிருக்கிறது. ஆனால் பழக்கவழக்கங்களில் பழமையைக் காப்பதில் மட்டும் நாம் இன்னும் காட்டு மிராண்டிக் காலத்திலேயே இருக்கிறோம். இல்லை யென்று மறுக்க முடியுமா?

உலகில் எங்குதான் மதங்களில்லை. அதில் கூடப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே இருக்கிற இந்து மதத்தை மற்ற மதங்களைப் போல் நினைக்கக் கூடாது. ஏனெனில் மற்ற மதங் களுக்கு ஒரே ஒரு புனித நூல் இருக்கும்; ஒரே ஒரு கடவுள் இருப்பார். அம்மதத்தை வழிநடத்த ஒரு மதத்தலைவர் இருப்பார். இங்கு அப்படி இல்லையே! கொசுக்கூட்டம் போல் கடவுள்கள், புற்றீசல்கள் போல் மதத்தலைவர்கள். காமமும், கொலைகளும் நிறைந்த மத நூல்கள். இவைகளைக் கொண்ட இந்து மதம் எப்படிப்பட்டதாக இருக்கும்? மனித உரிமை மீறல்களின் தொகுப்புத்தான் இந்து மதம். சாதிகள் என்ற சாக்க டையில்தான் இந்து மதம் என்கிற புழு வாழ்ந்து கொண்டிருக்கிறது. ‘பிரமிடு’ கூம்பு வடிவம் கொண்ட இந்து மதத்தில் மேலிருப்பவனுக்குக் கீழே இருப்பவன் அடிமை. அதுமட்டுமல்லாமல் கீழே இருப்பவன் எல்லோருமே தீண்டப்படாதவன். இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டமே பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மனுநீதி சட்டப்படி தலையில் பிறந்தவன் பிராம ணன். தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன் வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கில் அடியில் இருப்பவன் பஞ்சமன் என்றும் அவன்தான்

தீண்டப்படாதவன் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் அம்மக்களை ஊருக்கு வெளியே குடிய மர்த்திவிட்டார்கள். குடியிருப்பு, கோயில், கடவுள், சுடு காடு எல்லாமே தனிதான் அம்மக்களுக்கு. பார்ப்பனர் களுக்கு மீதியிருக்கும் அனைத்து இந்துக்களுமே தீண்டத்தகாதவர்கள்தான், இந்து சனாதனச் சட்டப்படி. இதை எந்த இந்துமத முட்டாளும் உணரவில்லை. பார்ப்பானுக்கு மற்றவர்களனைவரும் தீண்டப்படாத வர்கள் என்பதோடு நிற்கவில்லை இந்துமதம்.

ஏனை யோருக்கும் தீண்டப்படாத வகுப்பு உள்ளது என்ற நஞ்சையூட்டிய இந்துமதம் அவர்களை நாம் பார்ப் பானுக்குத் தீண்டத்தகாதவனாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கு ஒரு அடிமை கிடைத்தால் போதும் என்கிற இழிந்த மனப்பான்மையில் இருக்கிறார்கள் எல்லா இடைநிலை சாதி இந்துக்களும். “நான் யாருக் கும் அடிமையில்லை; எனக்கு யாரும் அடிமை யில்லை” என்ற அம்பேத்கரை நாகரிகமே இல்லாமல் இன்றளவும் இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்.

இந்திய அரசியல் வானில் சுடர்விடும் சூரியனான மேதை அம்பேத்கர், தன் வாழ்நாளில் எவ்வளவோ தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது மற்ற பிள்ளை களுடன் சேர்ந்து பழகிவிடாவண்ணம் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறார். பள்ளிக்கு வரும்போது புத்தகப் பையுடன் தவறாமல் ஒரு கோணி சாக்கும் கொண்டு வர வேண்டும். தண்ணீர் குடிக்கும்போது பானை யைத் தொட்டுவிடக்கூடாது. அதைக் கண்காணிக்க ஒரு ப்யூன் கூடவே நிற்பான். தனக்கு முடிவெட்டிவிட எந்த நாவிதரும் தயாராய் இல்லாததினால் அவரது அக்காவே அவருக்கு முடிவெட்டிவிட்டிருக்கிறார். ஒரு முறை வெளியூரிலிருக்கும் அவரது அப்பாவைப் பார்க்கப் போகும்போது மாட்டு வண்டிக்காரன் வண்டியில் ஏற்றத் தயாராக இல்லை.

இவையெல்லாம் சிறுவனாக இருந்தபோதே அவர் அனுபவித்த கொடுமைகள் என்றால், மேல்நாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற, இராணுவ உயரதிகாரியாகப் பணியில் சேர்ந்த போது, கடைநிலை ஊழியர்கூட கோப்புகளைக் கையில் தர மறுத்து, தூக்கிப் போட்டிருக்கிறார்கள். மாலையில் வேலை முடித்து எழுந்தவுடன் அவர் அமர்ந்த இருக்கை கழுவப்பட்டிருக்கிறது. அவர் நடந்துவந்த நடை விரிப்பு துவைக்கப்பட்டிருக்கிறது. அவர் தங்குவதற்கு இடம்தர மறுத்திருக்கிறார்கள். அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந் தவர் என்பதினால் அவர் படிப்பையும் மதிக்கவில்லை. அவரையும் மதிக்கவில்லை. இதுபோல் அவரது வாழ் வில் மிக உயர்கல்வி கற்று உயர் பதவியில் அமர்ந்த போதும் சாதியின் பேரால் அவர் அவமானப்படுத் தப்பட்டே உள்ளார்.

துணைப் பிரதமராக இருந்தபோது பாபு ஜகஜீவன் ராம், சம்பூர்ணநாத் என்பவரின் சிலையைத் திறந்து வைத்தார். தலித் ஒருவர் உயர்சாதிக்காரரின் சிலையைத் திறந்ததினால் அசல் சிலை தீட்டாகிவிட்டது எனக்கூறி, பிறகு கங்கை நீரால் சிலையைக் கழுவிச் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இதுபோன்ற அவமான செயல் வேறு எந்த நாட்டிலாவது நடந்திருக்குமா?

அம்பேத்கர் காலத்தோடு, பாபு ஜகஜீவன்ராம் காலத்தோடு இது முடிந்திருந்தால் -சாதி இந்துக்கள் திருந்தியிருந்தால், குறைந்தபட்சம் தலித்துகள் இன் றைக்குச் சுயமரியாதையோடாவது வாழ்ந்திருப்பார்கள். இந்து மதம் அவர்களுக்கு அதையா கற்றுக் கொடுத்திருக்கிறது? எந்தப் பதவியில் இருந்தாலும் தலித் மக்களை இழிவாகத்தான் பார்க்கிறார்கள்; நடத்துகிறார்கள். இன்றைக்கு பீகாரின் மாநில முதல் வராக இருக்கும் மாண்புமிகு ஜிதன்ராம் மஞ்ஜி அவர் கள் வெளிப்படையாக அண்மையில் பேசியிருக்கிறார். அதைக் கேட்போம்.

“நான் மாநில முதல்வராக இருந் தாலும்கூட, இப்போதும் சில சக்தி வாய்ந்த மக்கள் என்னைத் தீண்டத்தகாதவராகத்தான் நடத்துகிறார் கள். ஏனெனில் நான் மகா தலித் வகுப்பைச் சேர்ந்த வன் என்பதனால்தான் இவ்வாறு செய்கிறார்கள். மதுபானி மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலுக்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கோயிலுக் குள் சென்றேன். ஆனால் கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகு கோயிலையும் அங்கு உள்ள சிலையையும் கழுவியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

சில வேலை களை முடித்துக் கொள்வதற்காகவும் அல்லது சில சலுகைகளுக்காகவும் எனது காலை மக்கள் தொடு கின்றனர். ஆனால் சமக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்றும் தீண்டத்தகாதவராகத் தான் நடத்துகிறார்கள்” என்று தனக்கு நேர்ந்த அவ மானத்தைச் சில மாதங்கள் கழித்துத் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்து மதம் தலித்துகளை முடக்கி வைத்திருப்பது போலவே சமூகத்தில் சம விகிதத்தில் இருக்கும் பெண் களையும் முடக்கி வைத்திருக்கிறது. அம்பேத்கரின் கடும் உழைப்பினாலும், போராட்டத்தினாலும் உரு வாக்கப்பட்ட சட்டத்தினால் பெண்கள் ஓரளவிற்கு கல்வி, பொருளாதாரம், பதவி, அந்தஸ்து, உரிமை போன்ற எல்லாத் துறைகளிலும் இப்போதுதான் முன் னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதைக்கூட இந்துத்துவ வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோதா சட்ட வடிவம் பெறாமல், தேடித் தேடிக் காரணங்கள் கற்பித்து நடைமுறைப் படுத்தப்படாமல் இழுத்தடித்துக் கொண்டேயிருக் கிறார்கள்.

ஆண்கள் சாதிக்கின்ற அத்தனைத் துறைகளிலும் பெண்களும் சாதிக்கிறார்கள். ஆண் துணையில்லாமல் பெண்களால் வாழ முடியாது என்கிற கோட்பாடு உடைந்து தூள் தூளாகிவிட்டது. ஆணோடு உடல் உறவு கொள்ளாமலேயே பெண்களால் பிள்ளைகூடப் பெறமுடியும் என்ற நிலை எட்டப்பட்டுவிட்டது. சேர்த்து வைத்த உடைமைகளுக்கு வாரிசு வேண்டியே மனைவி என்கிற முறையைக் கொண்டு வந்தான் ஆண். அவள் தனக்கு மட்டுமே உடைமையானவள் என்று அறிவிக்கத்தான் தாலி கட்டும் முறையைக்கூடக் கொண்டுவந்தான். இல்லறம் என்பது ஆண்-பெண் சேர்ந்தால் மட்டுமே என்பது அல்ல. பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்தல் கூட இல்லறம்தான் என்பதை உலக நாடுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதுபோன்ற கருத்துக் களைத் தாங்கி வருகின்ற திரைப்படங்களைக் கூட நெடிய போராட்டத்திற்குப் பிறகுதான் அனுமதிக்கிறார் கள். இங்கே இவற்றைத் திரையிடும் திரையரங்கு களைத் தாக்கி உடைக்கிறார்கள் ஆணாதிக்க குணம் கொண்ட இந்துமத வெறியர்கள். கருத்தைக் கருத்தால் சந்திக்கத் தெரியாத கழுதைகள். சாதி ஆதிக்கத்தையும், ஆண் ஆதிக்கத்தையும் ஒருங்கே பெற்றிருக்கும் சட்டத்துறை கூட இப்போதுதான் தனது மயக்கத்தை மெல்ல மெல்லக் கலைத்துக் கொண்டு வருகிறது. பெண்கள் முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாததினால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாலியல் வன்முறைகள் பெருகி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முறையில் செயலாற்றிக் கொண்டி ருப்பதே இந்து மதத்தின் நுண்ணரசியல். சாதியைக் காப்பதும், உடைப்பதும் அவள் கையில்தானே இருக் கிறது; அதற்காகத்தான் குடும்பம், ஒழுக்கம், கட்டுப் பாடு, கற்பு, மரபு, பரம்பரை போன்றவைகளைக் கற்பித் துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலுள்ள மற்ற மதங் களும் கிட்டத்தட்டப் பெண்களை அதற்காகத்தான் பயன்படுத்திக் கொண்டு வந்தார்கள்; வருகிறார்கள். கடவுள் ஆணைப் படைத்தான். அவனுக்குத் துணை யாகப் பெண்ணைப் படைத்தான். இருவரும் இணைந்து பிள்ளைகள் பெறுகிறார்கள் எனக் கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியானால் ஆணுமல்லா மல், பெண்ணுமல்லாமல் மூன்றாவது ஒரு பாலி னத்தைப் படைத்து யார்? எதற்காகப் படைத்தான்? என்று சம்மட்டியால் அடிப்பதுபோல் பல கேள்விகள் அவர்களுக்கு முன்நிற்கின்றன.

மூன்றாம் பாலினர் என்றவுடன் சட்டென சில பெயர்கள் நம் நினைவுக்கு வரும்; பேடி, அலி, அரவாணி, ஒன்பது, பொட்ட, ரெண்டுங்கெட்டான், ஏழரை.. ஒன்பதரை... போன்ற பெயர்களில் அவர் களை அழைத்து நாம் சுகம் கண்டு கொண்டிருக் கிறோம். அரசு அவர்களுக்கு திருநங்கை, திருநம்பி என்ற இலக்கியக் காரணப் பெயர் சூட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டது. சமூக, அறிவியல் அடிப்படையில் அவர்களின் நிலையை நாம் ஆராய முற்படுவதில்லை.

மத அடிப்படையில் மட்டுமே அவர்களை அணுகு வதால் நமக்கு நியாயம், அநியாயம் தெரிவதில்லை. அறிவியல் அடிப்படையில் உற்றுநோக்கிப் பல கேள்வி களுக்கு விடை தேடியாக வேண்டும். பள்ளிப் பாடத் தில் கூட நாம் ஆண்  பெண் , அது  என்று தான் படிக்கிறோம். அதாவது ஆண்மை, பெண்மை, அஃறிணை என்று பொருள். அப்படியானால் “அவன்” இருக்க வேண்டும். அவனுக்காக “அவள்” இருக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு மேல் இருப்பதை விட்டு விரட்ட வேண்டும். இதுதான் அறிவியலற்ற சமூகப் பார்வை. அவனுக்கும், அவளுக்கும் அப்பாற் பட்ட ஒரு “பால்” கணக்கில் கொள்ளப்படவில்லை. அப்படியானால் சமூகத்தை அறிவியல் கண்கொண்டு பார்க்கவில்லை என்றுதானே அர்த்தம்.

ஒரு பெண்ணின் கருவறையில் கரு உருவாகும் போது நிறமூர்த்தங்கள் (ஊhசடிஅடிளடிஅநள) தான் தீர் மானிக்கிறது. ஓ என்ற குரோமோசோமும் லு என்ற குரோமோசோமும் சேர்ந்தால் அது ஆண்; ஓ என்ற குரோமோசோமும் ஓ என்ற குரோமோசோமும் சேர்ந்தால் அது பெண்; அவ்வளவுதான். இவர்கள் மட்டுமே சமூகம் எனக் கற்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஓ என்ற இரண்டு குரோமோசோமும் லு என்ற குரோமோசோமும் அல்லது ஓ என்ற ஒரு குரோமோ சோமும் லு என்ற இரண்டு குரோமோசோமும் சேர்ந்து கூடப் பாலினம் உருவாகிறது. அதுவும் மனித உயிர்தானே? ஏன் அவர்களைக் கணக்கில் வைக்கத் தவறினோம்? பிள்ளை பெறும் தன்மை அவர்களிடம் இல்லாததினால்தானே? பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணை மலடி என்றவர்கள், மூன்றாம் பாலித் தாரை எப்படி நடத்துவார்கள்? அவர்கள் மனிதர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டார்கள்...

அவர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அறிவு உண்டு. திறமை உண்டு. அவர்களும் சாதனையாளர்கள்தான். நமது முட்டாள் தனத்தால் அவர்கள் வேதனையில் உழல்கிறார்கள். அவர்களை மனிதர்களாக மதிக்காததினால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. சமூகம் அவர்களை இன்றளவும் கேலி செய்து கேவலப்படுத் திக் கொண்டிருக்கிறது. ஏதோ பெயரளவிற்கு அரசு அவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கி தப்பித்துக் கொள்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் சமூகக் கொடுமையால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இல்லை யேல் விரட்டியடிக்கப்படுகின்றனர். மனித உடலையும் யானைத் தலையையும் கொண்ட கற்பனை உருவத் தைக் கடவுள் என்று ஏற்றுக்கொண்டு வழிபடும் நாம், மனித உடலையும்மனித உணர்ச்சிகளையும் கொண்ட ஒரு மனித உயிரை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு கேவலப்பட்டு வாழ்ந்தாலும் அதிலும் சிலர் சாதனையாளர்களாக வெளியில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களை அரவணைக்கவில்லை என்றாலும் அவர் களுக்கு வாழ்த்துக்களாவது சொல்ல முயற்சிப்போம்.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மது கின்னர் என்ற 36 வயதுடைய திருநங்கை ஒருவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ச.க. வேட்பாளர் மஹாவீர் குருஜியை விட 4,537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற் றுள்ளார். தலித் வகுப்பைச் சார்ந்த மதுகின்னர் பேசு கிறார். கேட்போம் : “மேயர் தேர்தலில் போட்டியிட்ட நான் பிரச்சாரத்தின் போது எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தேன். முதன்முறையாக இத்தேர்தலில் போட்டியிட வைத்ததும், வெற்றி பெற வைத்ததும் உள்ளூர் மக்கள்தான். அவர்களின் ஆதரவினால்தான் இத்தேர்தலில் என்னால் வெற்றி பெற முடிந்தது” என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

வெறும் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மதுகின்னர், பல்வேறு வேலைகள் செய்தும், இரயில்களில் ஆடிப் பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ள தாகத் தெரிவிக்கிறார்.

ஊடகத் துறையிலும், திரைப் படத் துறையிலும் மெல்ல முன்னேறி வரும் இவர் களை இன்றளவும் நாம் பிச்சைக்காரர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் பார்ப்பது நமக்கு அறிவில் சிந்தனையில் இருக்கும் ஊனத்தையே காட்டுகிறது. அவர்களை ஆதரிக்கவில்லையென்றாலும் கேவலப் படுத்தாமலாவது இருப்போம். அவர்கள் வாழ வழி விடுவோம்.

தலித்தாகப் பிறந்தாலும்

மூன்றாம் பாலினரானாலும்

அவர்கள் இம்மண்ணின்

மக்கள் (மைந்தர்கள்) அல்லவா?

அவர்களுடன் கரம் கோப்போம்

சாதி, மதப் பாலின வேறுபாட்டைப் போக்குவோம்! 

Pin It