21.09.2011 மதுரை
சென்ற செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையின் காணொளி:
பதிவு: குட்டி ரேவதி
வலையேற்றம்: ஆர்.ஆர்.சீனிவாசன்
ஊளையிடும் நரிகள்
ஊதி பெருத்த பன்றிகள்
அதிகார சகதியில் உழன்று
காவு கேட்கும் காட்டேரிகளாய்
தினவெடுத்து பிணம் தின்ன
திரியும் காட்சி ......
கொலைகள் நடத்திட
குண்டேந்தி வந்தார்கள் ...
ஏழைகள் ஏதுமற்று நின்றர்கள்
வெடித்த குண்டுகளில்
தகர்ந்தது .....
தமிழன் ...தேசியம் ....
புண்ணாக்கு ...புடலங்காய் ....
உங்களின் புழுத்த அரசியல் ....
வலிந்து திணித்த
'பீ' நாறும் உங்கள் கைகளால்- இனி
எங்கள் தலைவர்களுக்கு
மாலை இடாதீர்கள் .....
சட்டமும் சர்க்காரும் இல்லாத போது
அண்ணன் சொன்ன மாதிரி....
சேரியீன் எறவானங்களில்
சுனைப்பேரிய கருக்குகள் ....
மிளகாய் பொடிகலந்த மணல்
அடிக்கடி அம்மா தீட்டிய .....மனை
இன்னமும் இருக்கிறது ...
இனி வரட்டும் எந்த பயலாவது .....
எலும்பு நொறுங்கியபோதும்
நரம்பு அறுந்தபோதும்
உரக்க சொன்னது ஒன்னுதான்
ஜெய் பீம் .....
இம்மானுவேல் வாழ்க....
-பூவை .
RSS feed for comments to this post