ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும்  நடைபெற இருக்கிறது. இவ்விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை 'வரலாறு' என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர்  சூழலில்,  இந்நூலும்  இவ்விமர்சனக் கலந்துரையாடலும்  உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.     

"ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்"                  விமர்சன    கருத்தாடல்     

இசிதோர் பெர்ணான்டோ                

சஷீவன்             

வாசுதேவன்         

சத்தியசீலன்             

அசோக் யோகன்             
 
மற்றும் 

சத்தியசீலனோடு ஓர் உரையாடல்… (தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை)

காலம்: 29.04.2012. ஞாயிறு. பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி

இடம்: SALLE  POLONCEAU
               25 , RUE  POLONCEAU
              75018  PARIS. 

மெற்றோ:  LA  CHAPELLE  பாதை: place de la chapelle  >> rue  de jessaint >>  25 RUE  POLONCEAU    

- அசை - சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் -  பிரான்ஸ்  06 19 45 02 76
  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It