நினைவுகள் சுழித்தோடும்
வாழ்க்கை

படித்துறைகளில் அமர்ந்து
கறைகளை
அலசிக்கொள்கிறோம்

காயங்களிலிருந்து கசியும் நிணம்
கைகளில் உறைந்த குருதி
விழிகளில் வழியும் கண்ணீர்
எல்லாமே ஒன்றுதான்
கழுவும் நீருக்கு

அடித்த கைகளால்தான்
குழந்தையின் கன்னம் வருடுகிறோம்
வஞ்சினம் கூறிய உதடுகள்தான்
முத்தமிடுகின்றன

கொன்றவர்களாலும்
தின்றவர்களும்
நிறைந்திருக்கிறது ஊர்

அடித்து
நசுக்கிக்கொன்ற
ரத்தத்தடத்தின் மீதுதான்
சக்கரங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன


அழகிய பெரியவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.